search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யா வழி"

    • ஆடித்திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 1-ந்தேதி நடைபெறும் தேரோட்டம் வரை அனைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    • மாசி அவதார தின விழா வரவு- செலவு கணக்குகள் சபையில் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை பொதுக்குழு கூட்டம் அய்யா வைகுண்டர் அவதாரப் பதி வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆடித்திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 1-ந்தேதி நடைபெறும் தேரோட்டம் வரை அனைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது எனவும், மாசி அவதார தின விழா வரவு- செலவு கணக்குகள் சபையில் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    மேலும் திருப்பணிகள் குறித்து பல தீர்மானங்கள் சபையில் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர் அய்யா பழம், இணைத்தலைவர்கள் கோபால் நாடார், பால்சாமி, வரதராஜ பெருமாள், இணை செயலாளர்கள் தங்க கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், வரதராஜ பெருமாள், செல்வின்,சட்ட ஆலோசகர் சந்திரசேகர் நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துக்குட்டி, ஆதிநாராயணன், கணேசன், கண்ணன், செல்வராஜ், சந்தானம், கிருஷ்ணவேணி, பாலகிருஷ்ணன், சிவலிங்கம், கனி, கோபால், சீனிவாசன், சஞ்சய், சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×