search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்ற"

    • ஈரோடு டவுன் போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் சப்- இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார்.

    அவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தும்பை பட்டி , கக்கன் நகரைச் சேர்ந்த திருமூர்த்தி (40) என தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    அனுமதி இன்றி அவற்றை விற்பனைக்கு கொண்டு சென்றது அவர் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ.2,100 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையான போலீசார் பவானி - அந்தியூர் பிரிவில் சோதனையில் ஈடுபட்டபோது முதியவர் ஒருவர் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டு இருந்தார்.

    அவரை சோதனை செய்தபோது அனுமதி இன்றி 6 மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை ஒப்புக்கொ–ண்டார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (73) என்ன தெரிய வந்தது.

    இதையடுத்து பவானி போலீசார் அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேப்போல் சிறுவளூரில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட ஆனந்த் குமார் (33) போலீசார் கைது செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் கனிராவுத்தர் குளம் அருகே வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லம் (33) சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மதுபாட்டில்களையும் பறி முதல் செய்தனர்.

    இதேபோல திங்களூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், நிச்சா ம்பாளையம், கீழ்பவானி வாய்க்கால் அருகே அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறுவலூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், குட்ட ப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக, அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (42) மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோட்டில் அனுமதியின்றி மது விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து 49 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே மது விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த குயிலான்தோப்பு பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (62), செங்குட்டுவன் வீதியை சேர்ந்த அன்பழகன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல குயிலான்தோப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த சக்திவேல்(47), ரமேஷ்(41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சந்தேகப்படும் விதமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் குமரன் கோவில் பகுதியில் பங்காளாப்புதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் விதமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார்சைக்கிளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பெரியகொடிவேரி அருகே உள்ள வேட்டுவன்புதூர் பகுதியை சேர்ந்த சின்னமாரப்பன் (வயது 58) என்பதும், மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து சின்னமாரப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு, மணிக்கூண்டு, நேதாஜி சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கடத்தூர் போலீசார் நடத்திய சோதனைகயில் வண்டிபாளையம், முனியன் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, மணிக்கூண்டு, நேதாஜி சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்திய போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம், மேட்டூர், கோவிந்தபாடியை சேர்ந்த தன்ராஜ்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பெருந்துறை போலீசார் நடத்திய சோதனையில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்த சுப்பிரமணியம் (52) என்பவரை கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கடத்தூர் போலீசார் நடத்திய சோதனைகயில் வண்டிபாளையம், முனியன் தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவரை கைது செய்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×