search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேஷனல்"

    • கே.ஆர்.கல்வி நிறுவனங்க ளின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற வேண்டுமெனில், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என உதயகுமார் பேசினார்.

    கோவில்பட்டி:

    நேஷனல் பொறியியல் கல்லூரியின் 38-வது கல்லூரி ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

    கே.ஆர்.கல்வி நிறுவனங்க ளின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இயக்குநர் சண்முகவேல் முன்னிலை வகித்தார்.

    சென்னை, லூகாஸ் டி.வி.எஸ். லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் இன்டஸ்ட்ரியல் ரிலேசன்ஸ் தலைவர்மணி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி ஆண்டு விழா சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கல்லூரியின் மிகச்சிறந்த உள்கட்டமைப்பை பாராட்டி யதோடு, அப்துல் கலாம், நாராயணமூர்த்தி போன்ற நாட்டின் மிகச்சிறந்த ஆளுமைகளை சுட்டி க்காட்டி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.அதே நிறுவனத்தின் பிளாண்ட் மனித வளத்துறை தலைவர்உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

    அவர் பேசும்போது, நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை பெற்றி ருப்பது இக்கல்லூரியின் தனித்தன்மையை காட்டுகிறது. மேலும் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற வேண்டுமெனில், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன், தகவல் தொடர்பு திறன், சிந்தனை திறன் மற்றும் தலைமைத்துவம் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    முன்னதாக, இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் கலைவாணி வரவேற்றார். பின்னர், தலைமை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ×