என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமணகோலம்"
- இக்கோவிலில் நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை சுயம்பு லிங்கம் நிறம் மாறும்.
- இக்கோவிலில் அமைந்துள்ள 36 திருப்படிகளில், அபிஷேகம் அலங்காரம் விளக்கேற்றி திருமுறை ஓதி, திருபடிபூஜைகள் நடைபெற்றது.
பாபநாசம்:
பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் அமர்நீதி நாயனார் குருபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவில் கயிலாயத்திற்கு இணையான தலம் ஆகும். நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை நிறம் மாறும் சுயம்பு லிங்கம். அகஸ்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலம். திருநாவுக்கரசருக்கு திருவடி தீட்சை அருளிய தலம். குந்திதேவி சாப விமோசனம் பெற்ற தலம். அமர்நீதி நாயனாருக்கு முக்தி கொடுத்த தலம். திருமண பரிகார தலம். இக்கோவிலில் அஷ்டபுஜ காளியம்மன் சிறப்புடையது. இந்த திருநல்லூர் மாட கோயிலில் அமைந்துள்ள 36 திருப்படிகளில், அபிஷேகம் அலங்காரம் விளக்கேற்றி திருமுறை ஓதி, திருபடிபூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் துலாபாரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அமர்நீதி நாயனார் குருபூஜை நிகழ்ச்சியில் திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் திருச்சிற்றம்பலம் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் குணசேகரன், ரமேஷ் குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்