search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 241425"

    • 5 ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 4ந் தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள கருவலூரில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருகிற 5 ந்தேதி தேரோட்டம் நடக்கி றது. முன்னதாக தேர்த்திரு விழாவின் முக்கிய நிக ழ்வான திருக்கொடி யேற்றம் நிகழ்ச்சி நேற்று கோவிலில் நடந்தது. கோவில் முன்புறமுள்ள கொடிகம்பத்தை தூய்மை ப்படுத்தி சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் கோவில் அர்ச்சகர் ஹோமமந்திரம் மற்றும் பக்தி பாடல்கள் பாடி மேள வாத்தியம் முழங்க கொடி மரத்தில் கொடியே ற்றப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு பூத வாகன காட்சி, 3ந்தேதி இரவு ரிஷப வாகன உலா, 4ந்தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    5ந்தேதி அதிகாலை அம்மன் திருத்தேருக்கு எழு ந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று பிற்பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து 6, 7-ந் தேதி களில் திருத்தேர் இழுக்க ப்பட்டு நிலை சென்றடை கிறது. 8 ந்தேதி தேர் திருவிழா நிறைவுபெறு கிறது. 9 ந்தேதி காலை 7 மணி அளவில் தரிசனம் நிகழ்ச்சியும் மாலை 3 மணிக்கு அம்பாள் சப்பர த்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் இரவு 8மணிக்கு மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. 

    • தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாட ப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. அன்று மாலை, 4மணிக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மாலை, 6மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏப்ரல் 4-ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு 12மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி மதியம் 1 மணிக்கு கொடியேற்றுதல், மதியம் 2மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி தொடங்கி 11-ந் தேதி இரவு 10மணிக்கு பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. 12ந் தேதி அதிகாலை 4மணிக்கு மாவிளக்கு, மாலை 3 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4மணிக்கு தேரோ ட்டமும் நடக்கிறது.14-ந் தேதி காலை 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8 மணிக்கு பரிவேட்டை, இரவு 11 மணிக்கு வான வேடிக்கை நிகழ்சிகள் நடக்கிறது.15ந்தேதி காலை 8:15 மணிக்கு கொடியிறக்கம், காலை 11மணிக்கு மகா அபிேஷகம், பகல் 12மணிக்கு மஞ்சள் நீராட்டம், மாலை 7மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    திருவிழா காலங்களில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் தினமும் இரவு 7 மணிக்கு அம்பாள் புஷ்ப அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சிகளும், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    • 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.
    • வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.

     உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் திருவிழா சுற்றுவட்டார கிராமங்களின் திருவிழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும் 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.இதனையடுத்து ஏப்ரல் 4 ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்குகிறது.விழாவின் உச்ச நிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் 13 -ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.மேலும் 14 -ந் தேதி இரவு 10 மணிக்கு குட்டை திடலில் வாண வேடிக்கை நடைபெறவுள்ளது.

    அத்துடன் திருவிழா நாட்களில் வருவாய்துறைக்கு சொந்தமான 91 சென்ட் பரப்பளவுள்ள குட்டை திடலில் ராட்டினம்,மரணக்கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.இவ்வாறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.அந்தவகையில் நடப்பு ஆண்டில் வரும் ஏப்ரல் 7 ந் தேதி முதல் 14ந் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக குட்டை திடல் ஏலம் வரும் 27 ந் தேதி மதியம் 12 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த ஏலத்துக்காக அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ. 46 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பங்குத்தொகையான ரூ .11 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சார தொகையாக இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கேட்பு வரைவோலையாக (டி டி)செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டில் அரசு நிர்ணயித்த தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி பல முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் தேர் திருவிழா வானது நடைபெற உள்ளது.
    • பாரம்பரிய நடனங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

    ஊட்டி,

    ஊட்டியின் காக்கும் கடவுளாய் திகழும் மாரியம்மன், காளியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆண்டு தோறும் ஊட்டி மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர் திருவிழா மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30 நாட்கள் 30 உபயதாரர்கள் மூலம் நாள்தோறும் தேர் திருவிழா வானது நடைபெற உள்ளது.

    முதல் நாள் தொடக்கமாக நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கம் சார்பில் முதல் தேர்த் திருவிழா நடந்தது. இதில் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது. இதை திரளான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    தேர்த்திருவிழாவில் மாரியம்மன் புலி வாகனத்தில் பூ பல்லக்கில் ஆதிபராசக்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மாலையில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    ஒக்கலிகர் சங்க நிர்வாகிகள் சதிஷ்குமார்,சதிஷ்,ரவி,மோகன்,கிருஷ்ணன்,வினோத்,அசோக்,பிரகாஷ்,சுமந்த்,சந்தோஷ்,சைலிஷ்,சுரேஷ்,மோகன்,தீப்பு,குமார்,சத்தியநாராய ணன்,மோகன்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்சியை சுந்தர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

    கலைநிகழ்சிக்கான ஏற்பாடுகளை லோகநாதன்,சம்பத்,சிவராஜ்,மோகன்,நாராயணன்,சங்கர்,சீனீ,மோகன்,செந்தில்குமார்,மஞ்சுநாத்,ரவி,சுமந்த்,சந்திப் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

    இதில் நீலகிரி மாவட் டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • 31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது.

    அவினாசி :

    கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை 21-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது.

    31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 5-ந் தேதி காலை அதிர்வேட்டு முழங்க அம்மன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது வீற்றிருக்கும் சாமியை தரிசனம் செய்கின்றனர்.

    பின்னர் பிற்பகல் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது. 8-ந் தேதி பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. 9-ந் தேதி மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.

    • ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கும்ப கலசத்தில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவர் மற்றும் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டது.

     உடுமலை :

    உடுமலை மாரியம்மன் கோவிலில் இருந்த பழமையான தேருக்குப் பதிலாக எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது.அதன்படி காலை 9.45 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தை தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெற்றது. மதியம் 1 மணியளவில் புதிய தேர் கும்ப ப்ரோக்ஷனம்,ஸ்தாபனம்,பலிதானம்,மஹா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் கும்ப கலசத்தில் எழுந்தருளிய மாரியம்மன் சூலத்தேவர் மற்றும் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம்,உடுமலை நகரமன்றத் தலைவர் மத்தீன்,உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன்,பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ் ஸ்ரீதர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பக்தர்களுக்கு உதவியாக தேரை இழுக்க பொக்லைன் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.பொள்ளாச்சி ரோடு,தளி ரோடு,சதாசிவம் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.வழி நெடுக ஏராளமான பக்தர்கள் புதிய தேரை பார்ப்பதிலும் படம் பிடிப்பதிலும் ஆர்வம் காட்டினர்.போலீஸ் சூப்பிரண்டு கோபால கிருஷ்ணன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி செல்லாண்டி யம்மன், மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா செல்லியாண்டி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்களில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம் இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.

    இதனையடுத்து வருகின்ற 21-ந் தேதி கம்பம் நடப்பட்டு பின்னர் மார்ச் மாதம் 1-ந் தேதி மாசி திருவிழா, பொங்கல் விழா நடைபெற உள்ளது.

    இதில் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    • பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
    • சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள காளிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அம்மன் சன்னதி முன் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

    முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை முதல் பவானி, லட்சுமி நகர், காளிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், எலவமலை உட்பட சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்தனர்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய, சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டா–டப்படும்.

    அதன்படி நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி கோவில்களின் முன் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குண்டம் விழாவுக்காக நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று காலை நடந்தது.

    கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவை–யொட்டி கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை கோவில் கரகம் எடுத்தலும், 13-ந் தேதி கோவில் முன் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு மாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பின்னர் 14-ந் தேதி கம்பம் பிடுங்கும் விழாவும், 15-ந் தேதி மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • அனைத்து வசதிகளும் கூடிய கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திகழும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
    • ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சுற்றுலா, முதன்மைச் செயலர் சந்தரமோகன், கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் பார்வையிட்டார்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர்முன்னிலையில், அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த பெருந்திட்ட வரைவில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்களாக 3 இடங்களில் நுழை வாயில்களை ஏற்படுத்த இருக்கிறோம். முக்கிய பாதையில் இருந்து கோவிலுக்கு வருகின்ற பாதை 600 மீட்டர் அளவிற்கு புதிய பாதையை அமைக்க இருக்கின்றோம்.

    வரும் வழியில் இருக்கின்ற தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ளது. இங்கு 98 விருந்து மண்டபங்கள், ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக்கடன் செலுத்த வருகிறவர்களுக்கு சுகா தாரமான முறையில் 2 ஸ்லேட்டர்கள் அமைக்க ப்பட்டிருக்கின்றது.

    ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொங்கலிடும் வகையில் பொங்கல் மண்டபமும், பக்தர்கள் தங்குவதற்கு 40 குளிர்சாதன அறைகளும், 40 குளிர்சாதனமற்ற அறைகளும் அமைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் இருக்கின்ற கடைகளை ஒரு பகுதியாக அமைத்து தந்து, வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத அளவில் குறைந்த வாடகையில், அதே நேரத்தில் பக்தர்களுக்கு அதிக விலையில் பொரு ட்களை விற்கின்றார் என்ற நிலை இல்லாமல் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்க திட்டமிட்டு இருக்கிேறாம்.

    ஏற்கனவே பெருந்திட்ட வரைவு திட்டத்தில் எடுத்து க்கொண்ட பணிகளில் இப்போது கோவில் உள்ளே இருக்கிற உற்சவர் மண்டபம் ரூ.40 லட்சத்திலும், முடிகாணிக்கை மண்டபம் ரூ.2.25 கோடியிலும், மற்றொரு மண்டபம் ரூ.3 கோடியிலும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரசித்தி பெற்ற நிலையில் உள்ள கோவில்களில் உள்ள அனைத்து வசதிகளும் கூடிய ஒரு கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலை நிச்சயம் மாற்றிக் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மதுரை மண்டல இணை ஆணையர் செல்லதுரை, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், கோவில் பரம்பரை அறகாவலர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் பலர் இருந்தனர்.

    • மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்கு கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.
    • திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் உள்ளன. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இந்த மூன்று கோவில்களும் இந்த பகுதி முழுக்க பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும்.

    இந்த நிலையில் இந்த மூன்று கோவில்களையும் ஒரே இடத்தில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுரங்களுடன் கற்கோவில்களாக கட்டுவதற்கு செல்வவினாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.

    அதன் அடிப்படையில் செல்வ விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கட்டுவதற்கான திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார். திருப்பணிக்காக பாலைக்கால் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பணிக்குழு தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். திருப்பணி குழுவினர் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றார்கள்.

    • பிடாரியூர் மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் .
    • நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள முகாசி பிடாரியூரில் அமைந்துள்ளது பிடாரியூர் மாரியம்மன் கோவில். மாரியம்மனுக்கு ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் .

    இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 11-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மேலும் காலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வந்தது. கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், கம்பத்திற்கு வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.

    பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி வந்தனர்.

    நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) மாவிளக்கு ஊர்வலமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இன்று புதன்கிழமை காலை பொங்கல் விழா நடந்தது.

    பக்தர்கள் காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலிகொடுத்தும், பக்திபரவசத்துடன் மாரியம்மனை வழிபாடு செய்தனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பிடாரியூர் கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    ×