என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவில் உண்டியல்கள்"
- கோவிலின் வெளியே வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது.
- 500 கிராம் எடையுள்ள 22 வெள்ளி காப்பு, 20 பித்தளை கொப்பரை ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள அரசன்குளம் நான்குவழிச்சாலையில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது.
உண்டியல்கள் உடைப்பு
இந்தக் கோவிலில் தினமும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று வழக்கம் நிர்வாகிகள் கோவிலை பூட்டி சென்றனர்.
இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவிலின் வெளியே வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது கோவிலின் வெளியே வைக்க்பபட்டிருந்த 2 உண்டியல்கள் மற்றும் கோவிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு உண்டியல்களை உடைத்து மர்மநபர்கள் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் 500 கிராம் எடையுள்ள 22 வெள்ளி காப்பு, 20 பித்தளை கொப்பரை ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் 5 பேர் கொண்ட கும்பல் உண்டியல்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தக்காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்