என் மலர்
நீங்கள் தேடியது "லாட்டரி சீட்டு"
- பல நாட்கள் லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்த அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.
- வாட்ஸ்அப் குழுவில் மேலும் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளையும், அட்மின்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி கொண்டுரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (43). இவரது மனைவி எழிலரசி (33). இவர்களிடம் பவானியை சேர்நத ஒருவர் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.
பல நாட்கள் லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்த அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.
பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரவணன் அவரது மனைவி எழிலரசி ஆகியோர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
பட்டதாரிகளான கணவன், மனைவி 2 பேரும் லேப்டாப் மற்றும் செல்போனில் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி பவானி, அம்மாபேட்டை, சித்தோடு, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏஜெண்டுகள் நியமித்து அவர்கள் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை ஆன்லைன் மூலம் அனுப்பி பரிசு விழும் என கூறி பொதுமக்களை நம்ப வைத்து லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து வாட்ஸ்அப் குழுவில் இருந்த பவானியை சேர்ந்த அப்புசாமி, காடையாம்பட்டியை சேர்ந்த தினேஷ், திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகராஜன், ஆதிநாராயணன், அம்மாபேட்டை குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கண்ணுசாமி, நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த ரசூல், சித்தோடு நால்ரோடு பகுதியை சேர்ந்த வேலுமணிகண்டன், பெருந்துறையை சேர்ந்த பொன்னுசாமி ஆகிய 9 ஏஜெண்டுகளையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான 11 பேரிடம் இருந்து 2 லேப்டாப், 2 டேப், 11 செல்போன்கள், 2 வங்கி பாஸ் புத்தகம், ஒரு ஏ.டி.எம். கார்டு, ரூ.13 ஆயிரத்து 650 ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் கைதான 11 பேரும் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் பவானி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஆண்கள் 10 பேர் பவானி கிளை சிறையிலும், எழிலரசி கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த வாட்ஸ்அப் குழுவில் மேலும் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளையும், அட்மின்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி சொத்துக்களை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கார் டிரைவர்களை குறி வைத்து ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தனர்.
- 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன், கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள், 50 ஆயிரம் ரொக்க பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் லேபை அருகேலாரி மற்றும் கார் டிரைவர்களை குறி வைத்து ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதைக் கண்டு மோட்டார் சைக்கிளில் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
அப்பொழுது அவரை மடக்கி பிடித்து அவர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அருகே இருந்த இன்னொரு மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அருகே இருந்த வண்டியில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன், கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள், 50 ஆயிரம் ரொக்க பணம் இருப்பது கண்டுபிடி க்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் சாரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (வயது 49,) என்பதும் இவர் பல மாதங்களாக சாரம் லேபைக்கு வரும் லாரி டிரைவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களிடம் குலுக்கல் முறையில் பணம் விழுவதாக கூறி அவர்களிடம் சில நம்பர்களை கையால் எழுதி தந்து அவர்களிடம் வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் உங்களுக்கு உடனடியாக கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனு ப்பப்படும் என தெரிவித்ததாகவும் அதை அனுப்பாமல் பலரை ஏமாற்றி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 3.5 லட்சம் மதிப்பிலான 2 மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள்,மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
- கீழ்பகுதியில் ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் வந்தது.
- வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனுப்பியுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பாலம் கீழ்பகுதியில் ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதைக் கண்டு மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் தப்பி ஓட முயன்றார். அப்பொழுது அவரை மடக்கி பிடித்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 1000 ரூபாய் ,பணம், 20 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள்,மற்றும்2 மோட்டார் சைக்கிள்கள், கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது.
தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள் ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த முத்து (வயது 30,)அதே பகுதியை சேர்ந்த ரசாக் பாஷா (வயது 35,) என்பதும் இவர்கள் கூலி தொழிலாளர்களிடம் குலுக்கல் முறையில் பணம் விழுவதாக கூறி அவர்களிடம் சில நம்பர்களை கையால் எழுதி தந்து அவர்களிடம் வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் உங்களுக்கு உடனடியாக கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 3.5 லட்சம் மதிப்பிலான 2 ேமாட்டார் சைக்கிள், 2 செல்போன்கள்,மற்றும் ரூ.1000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலில் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்கி தங்களின் பணத்தை இழந்த பல கூலித் தொழிலாளிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்பு ரம் மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி லாட்டரி சீட்டு விற்பனை செய்த முகவர்களை கைது செய்தனர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் இவர்களுக்கு லாட்டரி சீட்டு வழங்கும் மொத்த வியாபாரி சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த முருகநாதன் (வயது 50) என்பது தெரியவந்தது.
இந்நிலையில் சென்னைக்கு விரைந்த விழுப்புரம் தனிப்படை போலீசார், தாம்பரத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற முருகநாதனை நேற்று மடக்கிப் பிடித்தனர். அவரை விழுப்புரம் அழைத்து வந்து தாலுக்கா போலீசாரிடம் ஓப்படைத்தனர். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தனி அறையில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகவர்கள் யார்? யார்? என்பதும், இதில் போலீசார் யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா? யார், யார் லஞ்சம் கொடுத்து லாட்டரி விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவெண்ணை நல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 2 பேரும் எடப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணை நல்லூரை அடுத்த மண்டகமேடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49), இளந்துறையை சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர்கள் 2 பேரும் எடப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று ஜோலாபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொன்னேரி கூட்ரோடு அருகே உள்ள டீக்கடையில் ஒருவர் சந்தேகப்படும்படி இருந்தார். அவரை பிடித்து விசா ரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதனையடுத்து அவரை சோதனை செய்ததில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 84 வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்பொன்னேரி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (வயது 42) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து.அவரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி:
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் லாட்டரி விற்பனை மட்டுமின்றி கேரளா லாட்டரி சீட்டுகளும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் அதிரடி சோ தனை மேற்கொண்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.55 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். விசாரணையில் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லாட்டரிசீட்டு விற்பனை நடைபெற்று வரும் கடையில் வேலை பார்த்த பெண்க ளுக்கு தனியாக செல்போன் வாங்கி கொடுத்து உள்ளனர். அந்த செல்போன் மூலமாக லாட்டரி சீட்டு வாங்கு பவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
லாட்டரி சீட்டு வாங்கு பவர்கள் தினமும் வந்து லாட்டரி சீட்டு வாங்காத பட்சத்தில் பெண்களே தொடர்பு கொண்டு பேசி லாட்டரி சீட்டுகளை வாங்கு மாறு தெரிவித்துள்ளனர். செல்போன் மூலமாக அதிகளவு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று உள்ளது.
குறிப்பிட்ட அளவு லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் விற்பனை செய்தவர்களுக்கும் கமிஷன் வழங்கப்பட்டு உள்ளது. லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் பகுதிக்கு புதிதாக நபர்கள் வரும் பட்சத்தில் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் ரகசிய குறியீட்டு எண்களும் பயன் பத்தப்பட்டுள்ளது. அலாரம் உள்பட சிவப்பு பச்சை லைட்டுகளும் பொருத்தப்பட்டு உள்ளது.
லாட்டரி சீட்டு விற்பனையின் பின்னணியில் உள்ள வர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். லாட்டரி சீட்டு விற்பனை செய்த பகுதியில் சோதனை நடத்தி 2 நாட்களே ஆன நிலையில் மீண்டும் நாகர்கோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆனால் போலீசார் இதை கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி அனுமதி இன்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- துபாயில் முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது குடும்பத்தை தன்னுடன் வாழ அழைத்து வரும் தனது கனவை இப்போது நிறைவேற்ற முடியும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த முகமது அடில் கான், தான் வாங்கிய முதல் லாட்டரி சீட்டின் மூலம் ஃபாஸ்ட்5 பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார். இதன்மூலம் அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் பெறுகிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான முகமது அடில் கான், துபாயில் முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அதை வாங்கும்போது அவர் தன்னை பெரும் பரிசின் வெற்றியாளராக மாற்றும் என்று கற்பனைகூட செய்திருக்க மாட்டார்.
2018 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிலிருந்து துபாய் சென்ற முகமது அடில், ஒரு நாள் சமூக ஊடகங்களை ஸ்க்ரோலிங் செய்யும்போது அதில் வந்த விளம்பரத்தை கண்டு லாட்டரி சீட்டை வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி லாட்டரி டிக்கெட்டையும் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், முகமது அடில் பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார்.
இதுகுறித்து முகமது அடில் கூறுகையில், " எனது முதல் லாட்டரி டிக்கெட் என்னை முதல் ஃபாஸ்ட்5 பரிசை வென்றவராக மாற்றும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு எனது வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஏஇடி 25,000 (ரூ.5.5 லட்சம்) பெறுவது நம்பமுடியாதது.
இந்த வெற்றியால், ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது குடும்பத்தை தன்னுடன் வாழ அழைத்து வரும் தனது கனவை இப்போது நிறைவேற்ற முடியும். தனது குடும்பத்திற்காக வீடு வாங்க வேண்டும்.
இதுபோன்ற தனித்துவமான பரிசு வழங்குவதை வேறு எந்த லாட்டரி நிறுவனத்திடம் இருந்தும் நான் பார்த்ததில்லை. இந்த வெற்றி எனது நிதி சுமைகளை நீக்கி, நிலையான இரண்டாம் நிலை வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க எனக்கு உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்தே கத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- லாட்டரி சீட்டு விற்பனை செய்த ராஜூவ்காந்தி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று இரவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராஜேந்திர சோழகன் பகுதியில் சந்தே கத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகனை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த ராஜூவ்காந்தி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும்.
- கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில லாட்டரி துறையின் சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு முக்கிய பண்டிகை காலங்களில் அதிக பரிசுதொகையுடன் கூடிய லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.
அதன்படி கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனை கடந்த 27-ந் தேதி மாநிலத்தில் தொடங்கியது. முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி குலுக்கல் நடக்கிறது.
நாட்டிலேயே இதுதான் அதிகபட்ச பரிசுத் தொகை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. விற்பனை தொடங்கிய நாளில் இருந்து கடந்த 15-ந் தேதி வரை 20 லட்சத்து 50 ஆயிரம் சீட்டுகள் விற்பனையாகி உள்ளது. டிக்கெட் விற்பனையில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்திலும் திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி லாட்டரி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 30 லட்சம் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட அனுமதி உள்ளது. முதல் பரிசு பெறுபவர் 30 சதவீத வருமானவரிக்கு பிறகு சுமார் ரூ.17.5 கோடியை பெறுவார் என்றார்.
- வெங்கமேடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (70) என்பவரை கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் அருேக உள்ள வெங்கமேடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (70) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார்.
- லாட்டரி சீட்டுகளுடன் இருந்த பார்த்த சாரதியை சுற்றி வளைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் டி.புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 40). இவர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு லாட்டரி சீட்டுகளை விநியோக மும் செய்து வந்தார். லாட்டரி சீட்டு விற்றது தொடர்பாக பார்த்தசாரதியை கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம் மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் பார்த்தசாரதி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தாக போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்று இரவு கிடைத்தது. உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளுடன் இருந்த பார்த்த சாரதியை சுற்றி வளைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரிட மிருந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எங்கி ருந்து கிடைக்கிறது? யார் யாருக்கெல்லாம் விநியோ கம் செய்தார் என்பன போன்ற கோணங்களில் உளுந்தூர் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.