என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஜய் மக்கள் இயக்கம்"
- விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார்.
- இந்த விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.
தற்போது விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். அப்பொழுது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விருது பெறும் மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் பெற்றோர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அடையாள அட்டை மாவட்ட தலைவர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது. விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக விஜய் மக்கள இயக்க நிர்வாகிகளை இன்று சென்னை நீலாங்கரையில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்.
- தற்போது 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.
தற்போது விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்கிறார். அப்பொழுது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக விஜய் மக்கள இயக்க நிர்வாகிகளை இன்று சென்னை நீலாங்கரையில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உலகம் முழுவதும் இன்று (மே 28-ஆம் தேதி ) 'உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
- ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்' அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நீண்ட நாள் பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
நடிகர் விஜய்யின் உத்தரவுபடி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலம் இன்று (மே 28) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அறிவித்தபடி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட இந்த மதிய உணவை மக்கள் பலரும் வாங்கி பயன் பெற்றனர்.
- உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
- பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி 'உலக பட்டினி தினம்' அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நீண்ட நாள் பட்டினியில் வாடும் மக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த தினமானது ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
விஜய்
நடிகர் விஜய்யின் உத்தரவுபடி இந்த ஆண்டு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் என்ற திட்டம் மூலம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 28) மதியம் 11 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள நகரம், ஒன்றியம், பகுதியில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு நாள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை
இந்த திட்டமானது தமிழகம் , புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டினியால் வாடும் மக்களுக்கு இயன்ற வரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் செயல்படுத்துகிறது என்று விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக விலையில்லா உணவகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.
இதையடுத்து பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
விஜய்
மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விஜய் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சுமார் 1500 மாணவர்களை ஜூன் இரண்டாவது வாரத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெற்றோரை இழந்த சூழ்நிலையிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர்களின் அடுத்தகட்ட படிப்பிற்கு தேவையான ஊக்கத்தொகையை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.
- இவர் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இவர் தன் தொண்டர்கள் மூலம் சமூக சேவை பல செய்து வருகிறார்.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் கூடும் ரசிகர்களுக்கு மத்தியில், மாணவ - மாணவியருக்கு விஜய் உதவித் தொகைகளை வழங்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
- தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது.
- படிவத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? எதிர்த்து போட்டியிட்டவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார்.
சென்னை:
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
இதுபற்றி விஜய் வெளிப்படையாக எதுவும் கூறாமல் இருந்து வந்தார். ஆனால் இப்போது அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்கான பிள்ளையார் சுழி கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் போடப்பட்டது. அதாவது விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் பிறந்த நாளை அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடினார்கள்.
அதை தொடர்ந்து இப்தார் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். இவையெல்லாம் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் என்பதை விஜய் மக்கள் இயக்கத்தினர் உறுதிப்படுத்தினார்கள்.
இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சர்வே நடத்தி வருகிறார்கள். இதற்காக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் மனுக்கள் வாங்கப்படுகிறது. அவர்களுக்கு தனி விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் 3 முறை வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? எதிர்த்து போட்டியிட்டவர் எவ்வளவு வாக்குகள் வாங்கினார். நீங்கள் வேட்பாளர் என்றால் உங்களுக்கு மாற்று யார்?
தொகுதியில் கட்சி வாரியாக இருக்கும் வாக்கு வங்கி நிலவரம்? உங்களால் வெற்றி பெற முடியும் என்றால் என்ன காரணம்? தொகுதியில் இருக்கும் பூத்களின் எண்ணிக்கை, வார்டு விபரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்த விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று சேகரிப்பார்கள். அதன் பிறகு மாவட்ட வாரியாக நேரில் அழைத்து விஜய் விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.
இப்போதைய நிலையில் அடுத்த ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதா? அல்லது 2026-ல் நடத்தப்படும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.
விஜய்யின் இந்த அறிவிப்பு மூலம் அவர் அரசியலில் குதிக்கப் போவது உறுதியாகிவிட்டது.
- பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றிய தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காட்பாடி ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது,
காட்பாடி ஒன்றிய துணைத் தலைவர் கோவிந்தன் முன்னிலையில் சேனூர் மந்தவெளியில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கும், ஜாப்ராபேட்டையில் உள்ள உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் பழரசம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய நிர்வாகி குமார், வினோத்குமார் சேனூர் கவுரவத் தலைவர் அசோக்குமார், செயலாளர் நவீன் குமார், ஜாப்ராப்பேட்டை மன்ற தலைவர் வெங்கடேசன், பொருளாளர் பார்த்திபன், அஜித்குமார் மற்றும் திரளான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அம்பேத்கர் பிறந்தாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை (ஏப்ரல் 14ம் தேதி) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை குறுஞ்செய்தி மூலம் அவர் தெரிவித்துள்ளதாகவும், தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வருகிற 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது என்றும் இதன் மூலம் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நேரடி பயணம் மேற்கொள்கிறார் என்றும் பேசப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் நகர்வாக இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி தளபதியின் அனுமதி பெற்று விரைவில் அறிவிக்கப்படும்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது.
தனி கொடியுடன் சுயேட்சையாக களம் இறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றனர்.
ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கடந்த தேர்தலில் அவர் அரசியல் கட்சி தொடங்கவில்லை.
தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும் வாய்ப்பு உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்காக தமிழகத்தில் மாவட்டம்தோறும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனைத்து மாவட்ட தலைமை மன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் நமது மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள உறுதி செய்து அதற்கு தேவையான தகுந்த இடத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இத்துடன் அனுப்பிய படிவத்தினை தாங்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்டம், அணி, நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு படிவத்தினை அளித்து பூர்த்தி செய்து அனைத்தையும் 15 நாட்களுக்குள் தயார் நிலையில் வைத்திருக்கவும். தங்கள் மாவட்டத்தின் ஆலோசனை கூட்டத்தில் நான் கலந்து கொள்ளும்போது என்னிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி தளபதியின் அனுமதி பெற்று விரைவில் அறிவிக்கப்படும். ஆகவே அனைவரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த தகவலை பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வேறு எந்த சமூக வலைதளங்களிலும் பகிர வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
நடிகர் விஜய் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர்.புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி திருப்பூர் வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டரணி சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.வடக்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் குத்புதின் தலைமை தாங்கி நீ மோர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சின்னதுரை,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ்,மாவட்ட நிர்வாகி பாஷா, சதாசிவம், காங்கேயம் நகர தலைவர் கிருஷ்ணசாமி,அங்கு ராஜ் மற்றும் கார்த்திக் மோகன், செல்வா நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்