search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்ததான முகாம்"

    • நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
    • மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் தாய் பாசம் அறக்கட்டளை, கல்வித்தந்தை மருத்துவர் இ.எம்.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்தான முகாம் மற்றும் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டா ளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி விஜயா தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஷேக் இபுராஹிம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்றம் பரணிதரன், மாவட்ட அமர்வு நீதிபதி விரைவு மகளிர் நீதிமன்றம் கோபிநாத், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் சமது ஒருங்கிணைத்தார். மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

    • ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா ரத்த தானம் செய்தார்.

    தஞ்சாவூர்:

    பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் எழிலன் ஆலோசனையின் பேரில் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

    இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடக்கி வைத்தார்.

    இந்த நிகழ்வில் ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாவது ஆளாக தானாக முன்வந்து ரத்த தானம் செய்தார்.

    இந்த முகாமில் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முருகானந்தம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வாசுகி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார், திருச்சி விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் வசந்த், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வேல்முருகன், கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் கற்பகம் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.

    • தேவகோட்டையில் ரத்ததான முகாம் நடந்தது.
    • 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி யில் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி (காரைக்குடி), நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பால முருகன் ஆகியோர் அனை வரையும் வரவேற்றனர்.

    நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திருமால் செல்வம் வாழ்த்தி பேசினர். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் சாம் சேசுரான், மருத்துவர் அழகு தாஸ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ ஆலோசகர் சூசை ராஜ் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

    இதில் ரத்த தானம் செய்தவர்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு ரத்த குழுமத்தால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
    • முகாமில் கல்லூரியின் 80 மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முருகானந்தம், பான் செக்கர்ஸ் கல்லூரியின் இயக்குனர் டெரன்சியா மேரி, கல்லூரி முதல்வர் காயத்ரி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட சேர்மன் மருத்துவர் வரதராஜன், மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார், தஞ்சை மிராசுதார் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் காயத்ரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வித்யா மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கல்லூரியின் 80 மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் செய்தனர்.

    • கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் பால சுப்ரமணியன் வரவேற்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சமூக மேம்பாடு (கனடா - இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டம்), கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து தன்னார்வ ரத்த தான முகாமை கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் தலைமையேற்று தொடங்கி வைத்து ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.

    ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் பால சுப்ரமணியன் வரவேற்றார்.துணை முதல்வர் சேக் தாவூத், ரோட்டரி சங்க தலைவர் சம்சூல் கபீர் ஆகியோர் ரத்ததானம் செய்வது எப்படி நம் ஆளுமையை வடிவமைக்கிறது என்பது குறித்தும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த வங்கி மேலாளர் ரவி ரத்ததானம் கொடுப்ப வருக்கும், பெறுபவர்க்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசினார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த சேகரிப்பு மருத்துவ குழுவினரிடம் பயிலக மாணவர்கள் 96 பேர் ரத்தம் தானம் அளிக்க ஆர்வத்துடன் முன் வந்தனர்.

    முடிவில் கல்லூரியின் கனடா இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டத்தின் தொடர் கல்வி மேலாளர் நாகராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி துறைத் தலைவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், கீழக்கரை ரோட்டரி சங்க செயலர் சுப்ரமணியன், மரியதாஸ், எபன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
    • ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

     பாப்பிரெட்டிப்பட்டி, 

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூக்காரெட்டிப் பட்டியில் பொது சுகாதாரத்துறை மற்றும் ஸ்டான்லி கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரிய ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முகாமில் வட்டார மருத்துவ அலுவலர்கள் கவுரிசங்கர், விக்னேஷ், சுதா, ஸ்டான்லி கல்வியல் கல்லூரி தாளாளர் முருகேசன், செயலாளர் வட்டார சுகாதார மேற்பார்யாவையாளர் லட்சுமிபதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், நவநீதகிருஷ்ணன், அருண்குமார், வெங்கடேஷ் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக பள்ளி கல்வி துறை அமைச்சரும் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் ரத்ததான முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் பி.கே பாபு மற்றும் துணை செயலாளர் பர்மா ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தி.மு.க மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் மணிகண்டன்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணா, புதூர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் சரத்சேகர், ஒன்றிய தலைவர் சிவா, ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் கெளதம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    • சான்றிதழ் மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அசேன் முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தௌபிக் பிர்கத் மாவட்ட செயலாளர் பாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம் தொகுதி செயலாளர் தென்னரசு, தொகுதி பொறுப்பாளர்கள் பாஸ்கரன், கார்த்திகேயன், நரேந்திரன், முகம்மது காசிம், கண்மணி, ராஜா, லட்சுமிபதி, அய்யப்பன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    குருதி நன்கொடை கொடுத்த தோழர்களுக்கு அரசு டாக்டர் ஷோபனா சான்றிதழ் மற்றும் மரக்கன்று வழங்கினார்.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் ஹெச்.டி.எப்.சி. வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • ரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் வேப்பனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் ஹெச்.டி.எப்.சி. வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்ததான முகாமிற்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெகன் வரவேற்புரை ஆற்றினார்.

    கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், மாணவர்கள் படிக்கும் பொழுதே பொதுச் சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். முகாமில் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் வசந்தகுமார் ,வேப்பன பள்ளி வட்டார மருத்துவ அலுவலரான சரவணன் ,அய்யனார் ,சுகாதார ஆய்வாளர்கள் உமாசங்கர்,ஜெயசெல்வம் , பிரதீப் , ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணை மேலாளரான விஜய்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருதிக்கொடை வழங்கினர்.ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரான ஸ்டீபன் விக்டர் ஆண்டனி செய்திருந்தார். விழாவின் நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.ரத்ததான முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் ஐ.டயானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மெடிக்கல் கேம்ப் தலைவர் அருள்செல்வம், ரோட்டரி ஐ.எம்.ஏ. ரத்த வங்கி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கே.கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ரத்த தானம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் ஐ.டயானா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இண்டராக்ட் கிளப் மற்றும் சாரண-சாரணியர்கள், இயக்க மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

    • கூட்டுறவு வார விழாவையொட்டி கூட்டுறவுத்துறை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
    • மொத்தம் 25 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.

    பர்கூர்,

    பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், 69- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி கூட்டுறவுத்துறை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இதில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி, பயிற்சியாளர்கள், கூட்டுறவாளர்கள் மற்றும் ரத்த தானம் செய்வோரை வரவேற்றார்.

    இதில் கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப் பதிவாளர் சுந்தரம், கிருஷ்ணகிரி நகர வங்கி துணைப் பதிவாளர் தமிழரசு ஆகியோர் பங்கேற்று, கூட்டுறவு வார விழா குறித்து சிறப்புரையாற்றினர். அத்துடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ரத்த தானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.

    இதில் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலை 5 பெண் பயிற்சியாளர்கள், 19 ஆண் பயிற்சியாளர்கள், ஒரு பயிற்சி அலுவலர் என மொத்தம் 25 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் பகுதியில் உள்ள இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கமும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.

    முகாமிற்கு கல்லூரி செயலாளர் எம். கோபால் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் புவனேஸ்வரி கண்ணன், செயலாளர் மலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ஸ்ரீனிவாசன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்எல்ஏ கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர், ரோட்டரி சங்கத்தினர் உட்பட 50 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கோ.செந்தில்குமார் எம்எல்ஏ வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் எஸ். சரவணன், முன்னாள் தாசில்தார் பிதாம்பரம், உதயகுமார், செல்வம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, குமார், நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர்அஹமத், நவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×