search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.எஸ்.டி."

    • மத்திய அரசு அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கடுமையாக்கி உள்ளது.
    • வெளிச் சந்தையில் வாங்கும் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநிலக்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.லாசா் தலைமை வகித்தாா்.

    அகில இந்திய பொதுச் செயலாளா் பி.வெங்கட், மாநில பொதுச் செயலாளா் வீ.அமிா்தலிங்கம், மாநிலப் பொருளாளா் எஸ்.சங்கா், மாநிலச் செயலாளரும், எம்எல்ஏவுமான எம்.சின்னதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    மத்திய அரசு அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கடுமையாக்கி உள்ளது. இதனால் அனைத்துப்பகுதி மக்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனா். பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள், உள்ளீட்டு, வெளிச் சந்தையில் வாங்கும் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், மாநிலச் செயலாளா்கள் அ.பழனிசாமி, அ.து.கோதண்டம், மாநில துணைத் தலைவா்கள், ஜி.கணபதி.பி.வசந்தாமணி, எஸ்.பூங்கோதை, நாமக்கல் மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரக் கூடும்.
    • பண்டல் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால்.

    காங்கயம் :

    காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா்.இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.சக்திவேல் பேசியதாவது:-

    பஞ்சாப் மாநிலம், சண்டிகா் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் (பேக்கிங்) செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட தானியங்கள் மற்றும் பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரிஜிஸ்டா் பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி இருந்த சூழ்நிலையில், தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து அரிசிக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயரக் கூடும். ரூ.1,000க்கு விற்கப்படும் 25 கிலோ கொண்ட அரிசிப் பை, இனிமேல் ரூ.1,050 ஆக விலை உயரக்கூடும்.

    இந்த விலை உயா்வு அடித்தட்டு மக்களை பெருமளவில் பாதிக்கும். எந்த அரசும் மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு இதுவரை வரி அறிவிப்பு செய்ததில்லை. எனவே மக்களை பாதிக்கும் இந்த 5 சதவீத வரியை மத்திய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.இதில்காங்கயம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் செயலாளா்சாமியப்பன், பொருளாளா்சின்னசாமி உள்பட அரிசி ஆலை உரிமையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    ×