search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டங்கள்"

    • கடந்த ஆண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
    • ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    சேலம்:

    சேலம் மாநக ராட்சிக்குட்பட்ட தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடப்பு ஆண்டில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்த மாமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதவாது:-

    கடந்த ஆண்டில் சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதே போன்று நடப்பு ஆண்டிலும் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாகும்.

    குறிப்பாக தரமான சாலைகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், குப்பையில்லாத நகரமாக மாற்றுதல், அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்தல், தரமான மருத்துவசேவை, மாநகராட்சிப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரமான கழிவறை வசதிகள் செய்து தருதல், ஓடைகள் தூர்வாருதல், நீர்நிலைகள் மேம்படுத்துதல், மின் விளக்குகள் அமைத்தல் போன்ற 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    மேலும், மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து

    தரப்பு மக்களுக்கும் தேவை யான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிடவும், மற்ற மாநகராட்சிகளை காட்டிலும் சேலம் மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக உருவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மண்டலக்குழுத்தலை வர்கள் கலையமுதன், உமாராணி, தனசேகர், அசோகன், மாநகர பொறியாளர் ரவி, மற்றும் நிலைக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என அரசு கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்
    • தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான, மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்களான, நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின்கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும், பயனாளிகளுக்கு வங்கி கடனுதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்களின் நிலை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சரால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இத்திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.





    • பயனாளிகளுக்கு உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
    • முகாமில் தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து கலெக்டர் கூறினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத்தேவன் ஊராட்சி கணேசபுரத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

    தஞ்சாவூர் கலால் உதவி ஆணையரும், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கோ.பழனிவேல் வரவே ற்றார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்திரா, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கு, ரூபாய் 1000 மாதாந்திர உதவித்தொகை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 380 பயனாளிகளுக்கு ரூபாய்.36 லட்சத்து 56 ஆயிரத்து 125 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப்பட்டா, 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, 20 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் இடு பொருட்கள், மானியம் மற்றும் பவர் டில்லர் என மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சத்து 15 ஆயிரத்து 583 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கி தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினார். முடிவில் பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார் நன்றி கூறினார்.

    அதனை தொடர்ந்து மனோரா கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்க அலையாத்தி காடுகள் உருவாக்க 14000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.கழனிவாசல் ஊராட்சி கொரட்டூர் கிராமத்தில் 1 ஏக்கரில் ஊருக்கு ஒரு வனம் திட்டத்தில் தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சேதுபாவா சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, கவின்மிகு தஞ்சை தலைவர் ராதிகா மைக்கேல், ஒன்றிய குழு உறுப்பினர் சுதாகர், குப்பத்தேவன் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை சமர்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.
    • ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான (விராசத் கடன் திட்டம்), கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது, கடன் பெறும் பயனாளிகளுக்கான ஆண்டு வருமானம், கடன் தொகை, வட்டி விகிதம் ஆகியவற்றில் கீழ்கண்டவாறு தளர்வுகளை நடைமுறைப்படுத்தி பயனாளிகளின் எண்ணிக்கையினை அதிகரித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கைவினை கலைஞர்களுக்கு (விராசாத் கடன்) திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000- க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    கைவினை கலைஞர்களுக்கு திட்டம் 1-ன் கீழ் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00.000- கடன் வழங்கப்படுகிறது.

    எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும், தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை நேரில் அணுகி அல்லது தொலைபேசி எண். 04362-278416 மற்றும் மின்னஞ்சல் dbcwo.tntnj@gmail.com மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
    • பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்கா நல்லூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கிபல்வேறு துறைகள் சார்பில் ரூ.31 லட்சத்து 97 ஆயிரத்து 901 மதிப்பில் 131 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் செயல் படுத்திவரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

    ஏழை-எளிய மக்கள் எவ்வித சிரமமுமின்றி நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும். இதற்காக மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கல்வியாளர்களாக உருவாக்கிட வேண்டும். கல்வி ஒன்றுதான் நிரந்தர சொத்து.

    பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி களை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சிங்கராஜ், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) உத்தண்டராமன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கலுசிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
    • கலெக்டர் அரவிந்த் பேச்சு

    நாகர்கோவில்:

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி மேலாளர்களுக்கு குமரி மாவட்டத்தில் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மூலமாக 5 நாள் பயிற்சி நடந்தது.

    இதில் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்குவது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான தொடர்பு, சிறு, குறு தொழில்நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் வழங் கப்படும் கடன் உதவிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மேலும் அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பாடுகள், மீன்வர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் செயல்பாடுகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றையின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

    பயிற்சி நிறைவை யொட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் கலந்துரையாடல் நடந்தது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் அரவிந்த் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    அவர் பேசும் போது, 'அனைவரும் கிராமப்புறங்களில் பெற்ற பயிற்சிகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் விரைவாக பொதுமக்களை சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

    இதில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் குமரி மாவட்ட முதன்மை மண்டல் மேலாளர் பா.சத்திய நாராயணன் கலந்து கொண்டு அதிகாரி களுக்கு வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவம் குறித்தும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களை கிராமப்புறங் களில் பணிபுரியும்போது விவசாயிகளுக்கு எடுத்து ரைப்பதற்கும் அறிவுரை கூறினார்.

    இதில் குமரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எல். பிரவீன்குமார், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆன்றோ ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வங்கி அதிகாரி ஹட்சின் இம்மானுவேல் நன்றி கூறினார்.

    • இரும்பு பெண்மணி, கண்மணி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என கலெக்டர் கூறினார்.
    • இந்த கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் வட்டம் கன்னிச்சேரிபுதூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும், 5 தாய்மார்களுக்கு தாய் சேய் நல பரிசு பெட்டகம் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களையும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனை முக்கிய நோக்கமாக கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக இரும்பு பெண்மணி மற்றும் கண்மணி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி கர்ப்பிணி பெண்களின் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டம் மூலம், இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களான கருப்பு உலர் திராட்சை, உலர் அத்தி பழம், சிவப்பு அவல், புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்து பொருட்கள் அடங்கிய இந்த தொகுப்பு மாத ஒரு முறை 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம், உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள் மற்றும் வயதிற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உணவு தொகுப்பு வழங்கும் சிறப்புத் திட்டமான கண்மணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஊட்டசத்துக்கள் சத்துக்கள் நிறைந்த சிறப்பு உணவு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து கர்ப்பணி தாய்மார்களும், இந்த கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய அரசு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்
    • மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    பெரம்பலூர்:

    மத்திய சமூக நலம் மற்றும் அதிகாரமளித்தல்துறை இணை அமைச்சர் பிரதிமா பௌமிக், பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில், பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதியில், ஒரு குடியிருப்பில் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பை துவங்கிவைத்து, அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    இதன் பின்னர் அமைச்சர் பிரதிமா பௌமிக் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

    நாட்டின் கட்டமைப்புகளான சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    கிராமப்புற பகுதிகளில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் நோக்கில் செயல்படுத்தப்படும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 2020 -21 ஆம் நிதி ஆண்டில் 25 கிராம ஊராட்சிகளில் 20,118 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் வட்டம் கவுள்பாளையம் கிராமத்தில் மொத்தம் உள்ள 776 குடியிருப்புகளில் 205 குடியிருப்புகளில் குடிநீர் இணைப்புகள் ஏற்கனவே உள்ளது. மீதமுள்ள 571 வீடுகளுக்கும் ரூ.46.06 லட்சம் மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிய ஊராட்சியாக கவுள்பாளையம் உள்ளது.

    போதையில்லா சமூகத்தை உருவாக்குவதில் பெற்றோர், பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. போதையிலிருந்து மீண்டவர்கள் பிரதமர் அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் தங்களது பெயரை பதிவு செய்துக் கொண்டால் அவர்களின் மறுவாழ்வுக்கு நிதி உதவியும், தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடனுதவியும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, கோட்டாட்சியர் ச.நிறைமதி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) கணபதி, மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு பாராட்டு கூட்டம்
    • தி.மு.க. ஆட்சியில்எந்த கிராமத்தி லும் அடிப்படை வசதி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் பேரூர் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு பாராட்டு கூட்டம் அகஸ்தீஸ்வரம் பிள்ளை யார் கோவில்  எதிரில் உள்ள மைதானத்தில் நடந்தது.

    பேரூர் செயலாளர் சிவபாலன்தலைமை தாங்கினார்.அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெஸீம், அவைத்தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் பாலமுருகன் தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உ ள்ளாட்சி தேர்தலில்அ.தி.மு.க . சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதற்கு உழைத்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை தெரி வித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஏழை மக்களுக்கு பயன்பட க்கூடிய திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க. ஆட்சியின் கடந்த 1 ½ ஆண்டு கால சாதனையாகும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    வருகிறபாராளுமன்ற தேர்தலில்பா.ஜ.க.வுடன் கூட்டணிஅமைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு எடுக்கும்.அவ்வாறு கூட்டணி வரும்போது அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    சுற்றுலா பயணிகள் கடலில்பயணம் செய்ய ரூ.8 கோடி செலவி ல்வாங்கப்பட்ட2 சொகுசு படகுகள் 3 ½ ஆண்டுகள்ஆன பிறகும்இதுவரை இயக்கப்படாமல்பாழாகிக் கொண்டிருக்கிறது. ரூ.68 கோடிசெலவில் பேனா நினைவு சின்னம் வைத்துஎன்ன பயன்? அ.தி.மு.க. ஆட்சியில்திட்டங்கள் நிறைவேற்றப்படாத கிராமங்களேஇல்லை என்ற நிலைஇருந்துவந்தது.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில்எந்த கிராமத்தி லும் அடிப்படைவசதிதிட்டங்கள்நிறைவேற்றப்படவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாத கிராமங்கள் பற்றி சட்டசபையில் நான் குரல் எழுப்புவேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சிக்கு வருவது உறுதி.

    வருகிற தேர்தலில் அகஸ்தீஸ்வரம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதைநிருபிக்கும் வகையில் தொண்டர்கள் இன்றிலிருந்து இரவு -பகல் பாராது அயராது பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில்பேரூர் செய லாளர் கள்வீரபத்திரன், குமார், மனோகரன், எழிலன், மணிகண்டன், வடக்குதாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்பார்த்தசாரதி, நிர்வாகிகள் சுரேஷ் செல்லம்பிள்ளை, செல்லபெருமாள் மற்றும் அகஸ்தீஸ்வரம் பேரூர் கிளை நிர்வாகிகள், மகளிர்அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் துணைசெயலாளர் பால்துரை நன்றி கூறினார்.

    • ஒரு சிறந்த பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
    • யு.ஜி.சி., நெட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கணினிவழித் தேர்வுகள் நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

    விழாவில் துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்ப்பல்க லைக்கழகத்தின்இலக்கி யத்துறையில் முதுகலைப் பயின்று வரும் திருநங்கையருக்கு கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டண ங்களை யும் பல்கலைக்கழகமே ஏற்கும்.

    அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு புலத்தில் இருந்தும் ஒரு சிறந்த பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    வருகிற 12ந் தேதி வள்ளலார் பிறந்தநாளையொட்டி, அட்சயபாத்திர நாள் விழா கொண்டாடப்படும்.

    இதில், சன்மார்க்க மன்றத்துடன் இணைந்து விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணத்தைக் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    யு.ஜி.சி., நெட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கணினிவழித் தேர்வுகள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரிய ர்களை பெருமைப்படுத்தும் விதமாக கவிதைகள், கட்டுரைகள், கருத்துரைகள், பாடல்கள் ஆகியவற்றை மாணவர்கள் படைத்தனர்.

    விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் தியாகராஜன், கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, மொழிப்புல முதன்மையர் கவிதா, துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை தலைவர் குறிஞ்சிவேந்தன், முனைவர்கள் சீமான், இளையராஜா, வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், முதுகலை மாணவர்கள் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.

    • தமிழக முதல்வர் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக எம்.எல்.ஏ. பேசினார்.
    • ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் காமராஜர் மேல் நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் மேல் நிலை பள்ளி உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார்,ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் யூனியன் தலைவர் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்க ளை வழங்கினர்.

    விழாவில் தங்கப்பா ண்டியன் எம்.எல்.ஏ. பேசும் போது,எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிப்பது கல்வி மட்டுமே. அத்தகைய கல்விக்கு நமது தமிழக முதல்வர் முக்கியத்தும் கொடுத்து வருகிறார். அவர் கல்வித்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார்.

    இந்த திட்டங்களை முறையாக பயன்படுத்தி மாணவ- மாணவியர்களாகிய நீங்கள் அனைவரும் சிறப்பாக கல்வி கற்று ராஜபாளையம் தொகுதியிலிருந்து ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மருத்துவர் போன்ற உயரிய பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் வரவேண்டும் என்றார்.

    அதனைத்தொடர்ந்து பேசிய எம்.பி தனுஷ் எம்.குமார் பேசும் போது, மற்ற மாநிலத்தைக்

    காட்டிலும் நமது தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க காரணம் பெருந்தலைவர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டமே என்றும், மாணவ- மாணவியர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பாலாஜி நாடார், தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, கவுன்சிலர் காமராஜ், கிளை செயலாளர் லட்சுமணன், ஒன்றிய இளைஞரணி துணைஅமைப்பாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானிய விலையில் விதை நெல், மண் பரிசோதனை போன்றவைகள் பற்றி விவசாயிகளுடன் விவாதிக்கப்பட்டது.
    • இயற்கை முறையில் உர உற்பத்தி மற்றும் உழவர் நலன் தொடர்புடைய 13 துறைகளின் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

    திருதுறைபூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் முதல் அமைச்சரின் ஆணைப்படி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையிலும், துணை வேளாண்மை அலுவலர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளா ண்மை வளர்ச்சித்திட்டப்ப ணிகள், மானிய விலையில் விதை நெல், விவசாய எந்திரங்கள், மண் பரிசோ தனை, நுண்ணூட்ட உரங்கள் போன்றவைகள் பற்றி விவசாயிகளுடன் விவாதிக்கப்பட்டது, மேலும் இத்திட்டத்தின் மூலம் இவ் ஊராட்சியில் உழவர் நலத்துறை, தோட்டக்க லைத்துறை, வருவாய் பேரிடர், வேளாண்மை பொறியியல் துறை, இயற்கை முறையில் உர உற்பத்தி, மற்றும் உழவர் நலன் தொடர்புடைய 13 துறைகளின் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

    கூட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர் வித்யேந்தர், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், ஊராட்சி துணைத்தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர் மற்றும் கல்விப் புரவலர் ரவிச்சந்திரன், சிறுகுறு விவசாயிகள் சங்கத் தலைவர், செயலர் மற்றும் பொறுப்பாளர்கள் அலீம், பஹ்ருதீன், தண்டபானி, , மற்றும் விவசாயிகள், வேளாண்மைத் துறை அலுவ லாகள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×