search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ரகுபதி"

    • உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் 9 மத்திய சிறை, 3 பெண்கள் தனிச்சிறை மற்றும் மாவட்ட சிறைகள், கிளை சிறைகள் என 138 சிறைகள் உள்ளன.

    சிறைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைகளில் உள்ள கைதிகள் இதுவரை ஏ பிரிவு கைதிகள், பி பிரிவு கைதிகள் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    கைதிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன் கறி வழங்கப்பட்டு வந்தது. முட்டையும், காய்கறி உணவுகளுடன், காலையில் பொங்கல், உப்புமா, கஞ்சி சட்னியும் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது சிறைவாசிகள் நலனுக்காக நிபுணர் குழுவினர் அறிக்கையின் படி உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உணவுக்கு ஒரு நபருக்கு ரூ.96-ல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது

    இதைத்தொடர்ந்து முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    இதில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் படி றைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள்:-



    • அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வது கிடையாது.
    • அண்ணாமலை கூறுவது போன்று தமிழகத்தில் ரணகளம் எதுவும் ஏற்படபோவதில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ''பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதுகுறித்து அவர் பதில் அளிக்கையில், "அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வது கிடையாது. அவரை நாங்கள் ஒரு ஜோக்கராகதான் பார்க்கிறோம். அண்ணாமலை கூறுவது போன்று தமிழகத்தில் ரணகளம் எதுவும் ஏற்படபோவதில்லை. வேறு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்'' என்றார்.

    • அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம்.
    • அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. சார்பில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 10-க்கு தரக்கூடிய நிலையில் விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக்கொள்ளலாம். அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. மடியில் கனம் இல்லாததால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக உள்ளனர். அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசு அம்பேத்கர் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார்.
    • நீட் வழக்கில் மாணவர்களின் கருத்து முக்கியம் எனவும், மாநில அரசின் நிலைப்பாட்டையும் பார்க்க வேண்டும் என்ற அவரது கருத்து நம்பிக்கை அளிக்கிறது.

    மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.

    விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனிநபர் சுதந்திரம் தொடர்பாக பல்வேறு சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி உள்ளார். நீட் வழக்கில் மாணவர்களின் கருத்து முக்கியம் எனவும், மாநில அரசின் நிலைப்பாட்டையும் பார்க்க வேண்டும் என்ற அவரது கருத்து நம்பிக்கை அளிக்கிறது. அவரது நம்பிக்கை வார்த்தைகள், நீதித்துறை மீதான பொது மக்களின் நம்பிக்கையை மென்மேலும் வலுப்படுத்தும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
    • ஆன்லைன் ரம்மி விளையாடி 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது அவர் கூறியதாவது

    சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக நிராகரிக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் ரம்மி திறன் மேம்பாட்டு விளையாட்டு என கூறி ஆளுநர் நிராகரித்துள்ளார். திறமையின் அடிப்படையில் விளையாடக்கூடிய விளையாட்டு ஆன்லைன் ரம்மி இல்லை.

    ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்ட மசோதா வரும் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். இந்த சட்ட விஷயத்தில் ஆளுநர் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துள்ளோம். ஆன்லைன் ரம்மி விளையாடி 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 12 பேர் உயிழப்புககு யார் காரணம்?

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

    • தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.
    • ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரகுபதி கூறியதாவது:-

    தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். அது நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது நீதிமன்றம், சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி தள்ளுபடி செய்யவில்லை.

    வேறு சில காரணங்களை சொல்லி அதாவது இதில் கூறப்பட்டுள்ள காரணங்கள் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நீங்கள் புதிய சட்டம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி சட்டமன்றத்துக்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

    அதன்படி இந்த புதிய சட்டம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு. நீங்கள் புதிய சட்டம் இயற்றுங்கள் இதில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு இயற்றுங்கள் என்று சொல்கிற போது அதை அதிகாரம் இல்லை என்று கூறி நீக்க எந்த அடிப்படையில் கவர்னர் நீக்கி இருக்கிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை.

    அதைப்பற்றி தெளிவாக அவர் என்ன அனுப்பி இருக்கிறார் என்பதை கோப்புகளை படித்து விட்டு தெளிவான விடையை நிச்சயமாக முதலமைச்சர் தருவார்.

    இந்த மசோதா 2-வது முறை அல்ல, முதல் முறையாக திருப்பி அனுப்பி உள்ளார்கள். இதற்கு முன்பு சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு பதில் சொல்லி இருந்தோம்.

    இதை திருப்பி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதை மறுப்பதற்கு அவருக்கு வாய்ப்பே கிடையாது. அது தான் சட்டம்.

    கேள்வி: கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள மசோதாவுடன் ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே?

    பதில்: நான் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று தான் சென்னை வந்தேன். கவர்னர் கடிதம் அனுப்பி இருக்கிறாரா? என்பதெல்லாம் தெரியாது. அவர் அனுப்பியதை படித்து பார்த்த பிறகு தான் எதையும் தெளிவாக சொல்ல முடியும். நானாக எதுவும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள் தமிழகத்திற்கும் பொருந்தும். பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது.
    • முதல்வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன கருவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

    அரசு நிதியிலிருந்து என்னென்ன பெற முடியுமோ, அதை பெற்று மக்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செய்ய முடியாத திட்டங்களை மாவட்டத்தில் பல்வேறு செல்வாக்கு உள்ள நபர்களை சந்தித்து அவர்கள் மூலமாக நிதி பெற்று மீதமுள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழக அரசு ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என்று தான் நினைக்கிறோம். ஆளுநர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள் தமிழகத்திற்கும் பொருந்தும். பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது.

    தமிழக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட உள்ளது. அப்பொழுது முதல்வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
    • ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தார்.

    இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அவர் தீர்மானத்தை வாசித்து கொண்டிருந்த போது கவர்னர் ஆர்.என். ரவி அவையைவிட்டு வெளியேறினார்.

    தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடைவதற்குள் கவர்னர் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் செயலுக்கு தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட சபை மீறிய செயலை ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க தி.மு.க. எம்.பி.க்.கள் முடிவு செய்தனர். அதற்காக நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளார்.

    தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஜனாதிபதியை சந்திக்க நேற்று இரவு அவர்கள் டெல்லி சென்றனர். கூட்டணி கட்சி எம்.பி.க்களும் உடன் உள்ளனர்.

    இதற்கிடையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள தி.மு.க. எம்.பி.க்கள்., ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை.

    ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது.
    • கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் பதில் கூற முடியும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றை தடை செய்தல் ஒழுங்குமுறைபடுத்துதல் அவசரகால சட்டத்தின் கால வரையறை நேற்றோடு முடிந்து விட்டது. அவசர சட்டத்திற்கு கவர்னர் ஏற்கனவே ஒப்புதல் தந்தார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கவர்னர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் கவர்னருக்கு அனுப்பியது. நேற்று மாலைக்குள் கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதை தெளிவுபடுத்த தான் தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

    ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத்தெளிவாக தமிழக அரசு விளக்கியுள்ளது. 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ, இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அந்த கடமையை தான் தமிழக அரசு சட்டமாக இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. கவர்னர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்.

    சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். கவர்னர் ஒப்புதல் அளித்த உடன் சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியும் அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம். கவர்னர் கையெழுத்து போட்டு விட்டால் இதற்கு உயிர் வந்துவிடும்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லக்கூடிய சூழ்நிலையில் இல்லை. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

    தற்போது வரை கவர்னரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. தற்போது அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும். அசம்பாவிதம் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதை பொதுமக்களிடமே விட்டு விடுகிறோம்.

    கவர்னர் மீது வழக்கு போட முடியாது. கவர்னர் இந்த சட்டத்தில் கையொப்பம் இடவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அனைவருக்கும் தெரியும். ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் பதில் கூற முடியும். தெளிவான பதில்களை நாங்கள் ஏற்கனவே கவர்னருக்கு கூறியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கவர்னர் விளக்கம் கேட்கும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்கப்படும்.
    • கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது.

    சென்னை:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில், அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மிக்கு எதிராக பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதா மீது கவர்னர் இதுவரை எந்த விளக்கமும் கேட்கவில்லை.

    மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கவர்னர் விளக்கம் கேட்கும் பட்சத்தில், உரிய விளக்கம் அளிக்கப்படும். கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் . 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இணைய சூதாட்டம் மக்களின் மனநலத்தை கணிசமாக பாதிக்கிறது. மற்றும் பல குடும்பங்களை நிதி நெருக்கடியில் ஆழ்த்தி உள்ளது.
    • மாநில மற்றும் அதன் மக்கள் தொகையில் நீண்ட கால வாய்ப்புகளை பாதிக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை சட்டசபையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது.

    இக்குழு கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப். 26-ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 7-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதன்படி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குடிமக்களின் மனநலத்தை பாதுகாக்கும் பொறுப்பும், பந்தயம் கட்டுதல் உள்பட எந்த வடிவத்திலும் சூதாட்டத்தின் தீய விளைவுகளில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பும் அரசிற்கு உள்ளது.

    இதன் காரணத்தால் 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் மற்றும் 1888-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் சட்டம் ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில் தனிநபர் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை தடை செய்யும் நீண்டகாலக் கொள்கையை அரசு பேணி வருகிறது.

    இணையவழி விளையாட்டின் பரவல், குறிப்பாக அடிமையாக்கும் இணைய வழி விளையாட்டுகள் மற்றும் இணையம் வழியாக விளையாடப்படும் சூதாட்ட விளையாட்டுகள் அரசின் முயற்சிகளை முறியடிக்க அச்சுறுத்துகிறது. முதலாவதாக மின்னணு தகவல் தொடர்பு மூலம் சூதாட்டமானது எல்லா நேரங்களிலும், எல்லா இடத்திலும் தொலை தொடர்பு திறன் கொண்ட சாதனத்தை அணுகக் கூடிய நபர் எவருக்கும் கிடைக்கிறது. இரண்டாவதாக இணைய வழி சூதாட்டம் மனிதர்கள் அல்லாத கணினி பங்கேற்பாளர்களுடன் போட்டியிடும் வீரர்களை உள்ளடக்கியது. அவை பல்வேறு கணினி நெறிமுறைகளாக கட்டுப்படுத்தப்படுகின்றன.

    அத்தகைய தொலைதூர விளைாட்டுகளில் ஈடுபடும் வாய்ப்பு அல்லது திறமையின் படிநிலை தொடர்புடைய கணினிநெறிமுறை அல்லது நிரலாக்கத்தை தனியாக மதிப்பீடு செய்ய முடியாது. இறுதியாக தொலை நிலையான சூதாட்டம் பெரும்பாலும் மாநிலங்களின் நிதிக் கண்காணிப்பை தவிர்த்து இணைய பணப்பரிமாற்றங்கள் மற்றும் டோக்கன் மூலம் நடைபெறுகிறது.

    இவ்வாறு இணைய சூதாட்டம் மக்களின் மனநலத்தை கணிசமாக பாதிக்கிறது. மற்றும் பல குடும்பங்களை நிதி நெருக்கடியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் மாநில மற்றும் அதன் மக்கள் தொகையில் நீண்ட கால வாய்ப்புகளை பாதிக்கிறது.

    இதே போல் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுதல் போன்ற தொடர்பில்லாத பிற இணைய வழி விளையாட்டுகளும் தனிப்பட்ட குடும்ப, சமூக, கல்வி, தொழில் அல்லது பொதுமக்களின் செயல்பாட்டின் பிற முக்கியப் பகுதிகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விளையாட்டுகளினால் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக நுண்ணறிவு பலம், எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியன குறைகின்றன.

    இதனால் இணைய வழி சூதாட்டம் மற்றும் இணைய வழி விளையாட்டுகள் இயற்கையில் அடிமையாக்கும் தன்மை கொண்டவை மற்றும் தகுதி வாய்ந்த ஒழுங்குமுறை விதிகளை வடிவமைப்பதில் சிரமங்களை ஏற்படுத்தும் போது அது பொது ஒழுங்கிற்கான அச்சுறுத்தலை பன்மடங்கு அதிகரிக்கிறது.

    இணைய வழி விளையாட்டுகளின் மீது புதிய சட்டத்தை இயற்றுவதற்கு, அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவானது அதன் அறிக்கையில், விளையாட்டு எதனின் இணைய வழி பதிபானது சீரற்ற வெளியீட்டு உருவாக்கி எதிலும் ஈடுபடாத வார்த்தை விளையாட்டுகள் அல்லது பலகை விளையாட்டுகளின் நேர்வுகளைத் தவிர அந்த விளையாட்டின் இணைய வழியல்லாத பதிப்புடன் ஒப்பிட முடியாது மற்றும் சீரற்ற உருவாக்கியை உள்ளடக்கிய இணைய வழி வாய்ப்பு விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு தெரியும் என்பதால் அவை போலியான சீரற்ற உருவாக்கிகள் ஆகும்.

    அத்தகைய விளையாட்டுகள் எந்திரத்துடன் விளையாடக்கூடியவை. அத்தகைய விளையாட்டு முறைகளை மேற்பார்வையிட இயங்கமைவு ஏதுமில்லை மற்றும் அந்த விளையாட்டுகளை கையாளவும் தொடர் ஈடுபாட்டிற்கு விளையாட்டாளர்களை கவர்ந்திழுக்கவும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படலாம் என்பது போன்ற பல்வேறு வரைக்கூறுகளைக் கண்டறிந்துள்ளது.

    மேற்கூறப்பட்ட குழுவின் அறிக்கை, அரசுப் பள்ளி மாணவர்களின் மீது இணைய வழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், இதுகுறித்து ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பல்வேறு சட்டங்களை ஆய்வு செய்த பின்னர், அதன்படி உள்ள முடிவுகள் ஆகியவற்றை கவனமாக பரிசீலனை செய்த பின்னர் அரசானது, இணைய வழி சூதாட்டங்களை தடை செய்வது எனவும், இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துவது எனவும் முடிவு செய்தது.

    அப்போது சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறாமல் இருந்த காரணத்தினால், அரசின் மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது தேவையானதாயிற்று. அதற்கிணங்கிய வகையில் 2022-ம் ஆண்டு தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்கு முறைப்படுத்துதல் அவசர சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 4/2022) 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் நாள் அன்று கவர்னரால் பிரகடனம் செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

    • ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.
    • அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சென்னை:

    5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ள நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார் 1,300 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் இருக்கும் இடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதாவிற்கு நல்ல முடிவு வரும்.

    துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் மாளிகையிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×