search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்கான்கடை"

    • ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழப்பு
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள சகாயநகர் என்ற இடத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 55). அரசு பஸ் டிரைவர்.

    கடந்த 20-ந் தேதி இரவு தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பஸ் ஓட்டி சென்ற போது சுங்கான்கடை என்ற இடத்தில் வைத்து திடீரென சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது மோதியது.

    இதில் பலத்த காய மடைந்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • பலியான ஹரியின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 44), ரோடு ரோலர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுபிதா (40). இவர்களுக்கு சுஜன் (15) என்ற மகன் உள்ளார்.

    நேற்று காலை ஹரி வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தக்கலை பகுதியில் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து இரவு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார்.

    நாகர்கோவில் அருகே சுங்கான் கடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று ஹரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. டிரைவர் காரை நிறுத்தாமல் சென்று விட்டார்.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஹரி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கடந்த ஹரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஹரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் எது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பலியான ஹரியின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.

    ×