search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதிவு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்"

    • சிறப்பு முகாம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் நடைபெற்றது.
    • மக்களுக்கு உணவு பாதுகாப்பாக வழங்க வேண்டும்

    மாரண்டஅள்ளி,

    தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் 100 சதவீதம் உணவு பாதுகாப்பு உரிமை மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சான்றிதழ் பெற்றிட சிறப்பு முகாம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் நடைபெற்றது.

    இந்த முகாமில் மாரண்டஅள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள வணிகர்கள் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு உரிமம் பெற விண்ணப்பம் வழங்கினார்கள்.

    இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானு சுஜாதா பேசும் போது மக்களுக்கு வழங்க உணவு பாதுகாப்பாக வழங்க வேண்டும் சிக்கன் மற்றும் உணவு பொருள்களுக்கு கலர் பவுடர்கள் சேர்த்தல், மேலும் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக் கூடாது உணவு பாக்கெட்டுகளில் சரியான முத்திரை இருக்க வேண்டும்.

    உணவு பொருட்கள் விற்பனை செய்ய உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் சித்திரை கனி, மற்றும் 50-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றனர்.

    ×