என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நண்பர்"
- “ஆயுத பூஜைக்கு ஆயிரம் லட்டுக்கள்” என்ற நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.
- போலீசாரை பொதுமக்கள் எதிரியாக பார்க்க கூடாது, நண்பராகவே பார்க்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழகம் முழுவதும் பணிபுரியும் போலீசார் தினந்தோறும் பாதுகாப்பு பணி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பண்டிகை நாளிலும் குடும்பத்துடன் செலவிட முடியாமல் பணிபுரிந்து வரும் போலீசாரை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான பயிற்சிகள் ஜோதி அறக்கட்டளை சார்பில் போலீசாருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கந்தபுனேணி, தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோரின் ஆலோசனைபடி ஜோதி அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் விதமாக "ஆயுத பூஜைக்கு ஆயிரம் லட்டுக்கள்" என்ற நூதன நிகழ்ச்சி தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை சிக்னல் அருகே தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போலீசார் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பஸ், ஆட்டோ பயணிகளுக்கு லட்டுகள் வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெ க்டர் ரவிச்சந்திரன் பேசுகையில்:-
காவல்துறையினரை பொதுமக்கள் எதிரியாக பார்க்க கூடாது, நண்பரா கவே பார்க்க வேண்டும், காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பேணும் விதத்தில்நடத்த ப்படும் இது போன்ற நிகழ்ச்சிகளால் பொதும க்களுக்கும், காவல்துறையி னருக்குமி டையே உள்ள இடைவெளி குறையும் என்று தெரிவித்தார் .
இனிப்புகளை பெற்றுக்கொண்ட பொது மக்கள் காவல்துறையினரின் நூதன முயற்சியை பாராட்டி னர்.
நிகழ்ச்சியில்போக்கு வரத்து உதவி இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன், போக்கு வரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்கு மார், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்க ட்டளை மேலாளர் ஞானசு ந்தரி உள்ளிட்டோர் செய்தி ருந்தனர்.
- மகளிர் போலீசார் நடவடிக்கை
- பாதிக்கப்பட்ட மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கன்னியாகுமரி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபரும் படித்து வருகிறார். அவருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரை பெற்றோர் தேடினார்கள். இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய மாணவி, தன்னுடன் படித்த வாலிபர் ஒருவர், நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன்னை சீரழித்து விட்டதாக கூறினார்.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். மகளிர் போலீசார் இது தொடர்பாக கல்லூரி மாணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் இன்று காலை மாணவனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- சந்தோஷ்குமாரிடம் சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கடனாக பணம் பெற்றார்.
- இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் மீட்டு அவினாசி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது29), எலக்ட்ரீசியன். இவரது மனைவி பகவதி .
சந்தோஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் இணைந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். சந்தோஷ்குமாரிடம் சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கடனாக பணம் பெற்றதாக தெரிகிறது. இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இன்று காலை ஏற்பட்ட தகராறில் சுரேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்தோஷ்குமாரின் இடது பக்க கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் மீட்டு அவினாசி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்