search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகிகள் தேர்வு"

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
    • மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    கரூர்,

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, க.பரமத்தி வட்டார கிளை தேர்தல், தாதம்பாளையம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. அதில், வட்டார தலைவராக வாசு தேவன், துணைத்தலைவர்கள் சிவக்குமார், ஹேமாவதி, அய்யாதுரை, செயலாளர் சாமிநாதன், துணை செயலாளர்கள் ரமாமணி, செந்தில்குமார், இளங்கோவன், பொருளாளர் குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.பின், மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் பார்வையா ளராக மாவட்ட தலைவர் பொன்னம் பலம், தான்தோன்றிமலை வட்டார செயலாளர் செந்தில், தேர்தல் ஆணையராகவும், பொதுக்குழு உ உறுப்பினர் பாண்டியன், துணை தேர்தல் ஆணையராகவும் செயல்பட்டனர்.








    • தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.
    • பள்ளியின் வளர்ச்சிக்கும், பிற துறைகளின் பங்க ளிப்பை உறுதி செய்வேன், கல்வி கற்க உகந்த மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

    அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.

    அதில், பள்ளி மேலா ண்மைக் குழு தலைவராக அ. அகிலா, துணைத் தலை வராக ந.ரேவதி, செயலா ளராக தலைமை ஆசிரியர் சின்னதுரை, உறுப்பினர்களாக ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சுய உதவிக் குழுப்பினர்கள், கல்வி ஆர்வலர்ககள் என 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும், பள்ளியின் வளர்ச்சிக்கும், பிற துறைகளின் பங்க ளிப்பை உறுதி செய்வேன், கல்வி கற்க உகந்த மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புப் பார்வையாளராக காட்டுப்பிரிங்கியம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அரசுமணி கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ்பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

    இதே போல் காட்டுப் பிரிங்கியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கட்டத்தில், தலைவராக மலர், துணைத் தலைவராக மணிமேகலை உள்ளிட்ட 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • மாவட்ட தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
    • முதியவர்களுக்கு அரிசி, மாணவர்களின் புத்தகங்கள் வழங்கினர்

    செங்கம்:

    செங்கத்தில் புதிய லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா செங்கம் அடுத்த குயிலம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. செங்கம் டவுன் லயன்ஸ் கிளப் நடத்திய நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் கோவிந்தராஜ், தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் ராஜேந்திரன், அனைவரையும் வரவேற்றார் இதில் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து லயன்ஸ் கிளப் ஆளுநர் மதியழகன் அனைவருக்கும் பதவி செய்து உரையாற்றினார்.

    இதில் லயன்ஸ் சங்க புதிய தலைவராக ரமேஷ், செயலாளராக சேகர், பொருளாளராக செல்வம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இதில் அன்பரசு| நரசிம்மன், அரவிந்த்குமார், ஆகியோர்சேவை திட்டங்களை குறித்து விளக்கினர். ஆர்.சி. அருனைஆனந்தன், வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் முதியவர்களுக்கு அரிசி வழங்கியும் ஏழை பள்ளி மாணவர்களின் வீட்டு புத்தகங்கள் வழங்கினார்கள் மற்றும் பக்கிரி பாளையம் நடுநிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மிஷின் வழங்கினார்கள். இதில் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ×