என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மெய்யநாதன்"
- ஊர் பொதுமக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் அமைச்சர் மெய்யநாதனுக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.
- அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி தூசிமாடன் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் அழைப்பு விடுக்க ப்பட்டிருந்தது. ஆனால் கும்பாபிஷேகத்தன்று அமைச்சர் அலுவலகப் பணி காரணமாக பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று இரவில் அமைச்சர் மெய்ய நாதன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தூசிமாடன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
விழாவில் சொக்கம்பட்டி வலையர் குடியிருப்பு மூத்தகுடி வளரி வளையல் முத்தரையர் உறவின்முறை தூசிமாடன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூசைப்பாண்டியன், நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ஊராட்சி மன்ற தலைவர் பச்சைமால், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசல பாண்டியன், சிங்கிலி பட்டி மணிகண்டன்,கிளை செய லாளர்கள் மணிகண்டன் கருப் பண்ணன், சுப்பிரமணியன், சுரேஷ், கவுன்சிலர்கள் முருகன், முகைதீன்கனி, திவான்மைதீன், கார்த்திக், மைதீன் ஒலி, வக்கீல்கள் அருணாசலம், சசிகுமார், நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி, வேலுச்சாமி பாண்டியன், வெங்கட்ராமன், முதலியான்கான், இலத்தூர் பரமசிவன், பூரண சந்திரன், பிள்ளையார்பாண்டியன், தங்கபாண்டியன், முத்துராஜ், பாலாஜி, முருகானந்தம், ஞான பண்டிதன், மாரித்துரை, ராஜ், சேகர், செல்லச்சாமி, ரத்தினம், முருகேஷ் , பிச்சையா, கதிரேசன், செல்லச்சாமி, பகவதிபாண்டியன், ராஜா, மணிமாறன், மருதப்பன், ஆனந்தராஜ், விக்ரம் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்