என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாக்காளர்கள்"
- காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
- வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி கிராம ஊராட்சியின் வார்டு எண்-3க்கான உறுப்பினர் தேர்தல் சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முகமது அனஸ் ராஜா, முகமது இஸ்மாயில், சம்சுதீன் ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர். ஒரு வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்காளர்கள் 494, பதிவான வாக்கு எண்ணிக்கை 285, இதில் ஆண் வாக்காளர்கள் 122, பெண் வாக்காளர்கள் 163, மொத்தம் 58 சதவீதம் வாக்குகள் பதிவானது.
வாக்கு முடிந்தவுடன் வாக்கு எந்திரங்களை மூடி முத்திரையீட்டு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக தேர்தல் பார்வையாளர் சங்கரன் வாக்கு பதிவு நடைபெறும் மையத்தினை பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன், மண்டல அலுவலர் கண்ணன், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் சுகுமார், உதவியாளர்கள் மோகன்ராஜ், தங்கப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப் இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
- இப்பகுதியில் மொத்தமாக 10 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தனித்தனியே வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
- வாக்கு சீட்டு முறையில் நடைபெறும் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி தேர்தல் பதவிக்களுக்கான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி மன்ற தலைவர், 3 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் மடப்புரம் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மீதமுள்ள நான்கு இடங்களில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி கீழையூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கான தேர்தல் துவங்கியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க, சுயேட்சை என 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. 5749 வாக்காளர்கள் கொண்ட இப்பகுதியில் மொத்தமாக 10 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தனித்தனியே வாக்குபதிவு நடைப்பெற்று வருகிறது.
வாக்கு சீட்டு முறையில் நடைபெறும் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதே போல திருமுருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் 3 பேர் போட்டியிடுகின்றனர்.3240 வாக்காளர்களைக் கொண்ட ஊராட்சியில் 5 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதேபோல தலைஞாயிறு ஒன்றியம் பனங்காடி, நாகை ஒன்றியம் சங்கமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலும் தலா ஒரு வாக்கு சாவடி மையத்திலும் என அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்கு சாவடி மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலுள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்