search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 243343"

    • தனுஷ் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி படங்கள் உருவாகி வருகிறது.
    • தனுஷின் நடிக்கவுள்ள இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

    தமிழில் எந்திரன், சண்டக்கோழி, சாமி, விஸ்வரூபம், வேலை இல்லா பட்டதாரி, மாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், அரண்மனை படங்களின் மூன்றாம் பாகங்களும் வெளியாகி உள்ளன. தற்போது இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது.

     

    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2018-ல் வெளியான வடசென்னை 2-ம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. இதனால் வடசென்னை 2-ம் பாகம் உருவாகுமா அல்லது கைவிடப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன.

     

    இந்நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் தனது இயக்கத்தில் தற்போது விடுதலை, வாடிவாசல் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும் இந்த படங்களை முடித்த பிறகு வடசென்னை 2-ம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

     

    தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாடிவாசல்.
    • இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


    வாடிவாசல் 

    இப்படம் சி.சு. செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'வாடிவாசல்' படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் சூர்யா படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    மேலும் இந்த வீடியோவில், "சூர்யா மாடு பிடி வீரர்களிடமிருந்து ஏறுதழுவலின் நுட்பங்களை பயின்றபோது படம் பிடிக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு. வாடி வாசல் திரைப்படத்தின் முன்னோட்டம் அல்ல" என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.



    • வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை’.
    • இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் நடிக்கிறார்கள்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    சூர்யா - விஜய் சேதுபதி

    சூர்யா - விஜய் சேதுபதி

    கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், விஜய் சேதுபதியின் கால்ஷீட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    சூர்யா - விஜய் சேதுபதி

    சூர்யா - விஜய் சேதுபதி

    இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பழங்குடியின இளைஞர் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்குமுன்பு தனது தந்தை விஜய்சேதுபதியுடன் இணைந்து நானும் ரௌடிதான் மற்றும் சிந்துபாத் ஆகிய இரு படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்டரி' படத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் பேசியது வைரலாகிறது.

    இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த 'ராட்சசன்', 'அசுரன்' போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யானை' படத்தில் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களையும் பெற்றார்.

    அம்மு அபிராமி

    அம்மு அபிராமி

    இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்டரி' படத்தில் தற்போது அம்மு அபிராமி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக செங்குட்டுவன் நடித்துள்ளார். இவர்களுடன் தீபக் செட்டி, எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜபீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரித்துள்ளது.

    அம்மு அபிராமி

    அம்மு அபிராமி

    பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார். விழாவில் பேசிய வெற்றிமாறன், இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு படம் பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது பிவிஆர் இதனை வெளியிடுகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன். இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள்.


    வெற்றிமாறன்

    வெற்றிமாறன்

    டிரைலரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.



    ×