search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • மேலூர் அருகே அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மரியாதை செலுத்தினர்.
    • இதில் மாவட்ட துணைச் செயலாளர் பூமிநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்ன கருப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூரில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மேலூர் ஒன்றிய செயலாளர் கேசிராஜன், ராகவன், பிரேம்குமார், நகர் செயலாளர் தங்கச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ஜீவ சன்மார்க்கம், பாரதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்டப்பட்டி பாலமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் பூமிநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்ன கருப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அமைதி ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு வந்தனர்.
    • பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூா்:

    முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 54-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்டம் மாநகர தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் ஏராளமானோர் கீழவாசல் காமராஜர் சிலை அருகில் இருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு வந்தனர்.

    பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உபயதுல்லா, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, செல்வம், மாவட்ட அவை தலைவர் இறைவன், மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, மருத்துவர் அணி துணை செயலாளரும் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராசன், பகுதி செயலாளர்கள் மேத்தா,சதா சிவம், கார்த்திகேயன், நீலகண்டன், ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உண்மையுடன் பணியாற்றுவது எனது கடமையாகும்.
    • மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    தஞ்சாவூர்:

    மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    அப்போது இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்ப டைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையு டனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மூன்னதாக மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இதேபோல் தொழுநோய் ஒழிப்பு குறித்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார்.
    • ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    தஞ்சாவூர்:

    நாட்டின் குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார். பின்னர் மூவர்ண கலரில் பலூன்களை பறக்க விட்டார்.

    தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 69 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவக்கல்லூரி மருத்துவம னையை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், கும்பகோணம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த பயனாளிகள் 17 பேர், தாட்கோ மூலம் பயன்பெறும் பயனாளிகள் 17 பேர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 11 பேர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என 672 பயனாளிகளுக்கு 5008965 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கரகாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்த லைவர் முத்துச்செல்வன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், தாசில்தார சக்திவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக்கொடியை ஏற்றினார்.
    • கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் (ராஜன் தோட்டம்) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா இன்று (26.01.2023) காலை 08.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    74-வது குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னால் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் வருடாந்திர பராமரிப்பு தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.18,000 மதிப்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், வருவாய்த்துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகையும், 40,பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் விதவை உதவித்தொகையும்,10 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பில் ஆண்களுக்கு திருமண உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும்,27 பயனாளிகளுக்கு தலா ரூ,2500 மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் 173 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 இலட்சம் மதிப்பில்;-

    காப்பீடு உதவித்தொகையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பில் மானியத்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 4480 மதிப்பில் விசை தெளிப்பானும், 1 பயனாளிக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்பில் பண்ணை வேளாண் கருவிகளும், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் எனமொத்தம் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர்ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சணா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, இணை இயக்குநர்(வேளாண்மை) சேகர், மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொது) பாலாஜி, மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், முதன்மை கல்வி அலுவலர்ரேணுகா ,உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன் அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல்;-

    கண்காணிப்பாளர்த ங்க வேல், மயிலாடுதுறை ஒன்றிய குழுத்தலைவர்காமாட்சி மூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் அவர்கள், மயிலாடுதுறை வட்டாட்சியர்.மகேந்திரன், மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    திருவாரூர்:

    இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.

    அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் ஏழு பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 47 பேருக்கும், சமூக நலத்துறையின் சார்பில் 616 பேருக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஐந்து பேருக்கும் என பல்வேறு துறைகளில் சார்பில் 705 பேருக்கு ரூ 2,06,09,915 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

    மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    • நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றினார்.
    • காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளி களுக்கு ரூ.90,89,347/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

    இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வளர்ச்சி முகமை, சிறப்பாக சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊரக துறைகளில் நற்சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் செல்வராஜ் எம்பிஅதிகாரிகள் பிரிதிவிராஜ் பானோத் ம்ருகேந்தர்லால்மாவட்ட வருவாய் அலுவலர் சஷிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    மதுரை

    இந்தி திணிப்புக்கு எதிராக 1960 ஆண்டு தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டம் அடைந்த நிலை யில் பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் இந்தி எதிர்ப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் மாணவர் அணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன் தலைமையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலையில் தியாகி களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவராணி மாவட்ட செயலாளர் கமல், ஒன்றிய செய லாளர்கள் யோகராஜ், சன்மார்க்கம், ஜோதி முருகன், இளைஞராணி ராஜமாணிக்கம், பேரவை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஒன்றிய துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாணவராணி ரகு தேவன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.
    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.

    நாகப்பட்டினம்:

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனங்கள் சார்பாக தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், கண் தானம் செய்ய வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தொடக்கி வைத்தார். பேரணி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை சென்றது.

    இறுதியில் பேரணியை திருவாரூர் நகர இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் முடித்து வைத்தார்.

    பேரணியில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாத்மாகாந்தி, பண்டிதர் ஜவகர்லால் நேரு, மகாகவி பாரதியார், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தேச தலைவர்கள் வேடமிட்டு சென்றனர்.

    கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 500 பேர் கண்தானம் செய்தனர்.

    முன்னதாக தேசிய கொடி ஏற்றியும், தேசபக்தி பாடல்கள் பாடியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் துவியும் மரியாதை செலுத்தபட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் வெங்கட்ராஜு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கல்வி குழுமத்தின் இயக்குநர் விஜயசுந்தாரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்தரா மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன் முன்னிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியில் சோலை குணசேகரன், மீனவரணி மாவட்ட செயலாளர் ராமநாதன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் வையத்துரை மாரி, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், குருசாமி, பாண்டி கோவில் பூசாரி கார்த்திகேயன்,முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார்,கோச்சடை ராஜேந்திரன், ஒன்றிய செயலர்கள் யோகராஜ், ஜோதிமுருகன் மற்றும் முத்திருளாண்டி, துதிதிருநாவுக்கரசு, சோலை இளவரசன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், வேல்முருகன், கீழமாத்தூர் தங்கராஜ், குமரேசன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சவர்ணம், சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 106- வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    கோவை,

    கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106- வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி அ.தி.மு.க .வினர் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்ஜூணன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி அலுவகத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். இதனை தொடர்ந்து அலங்க ரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலு ச்சாமி, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கே.ஆர். ஜெயராம், அவைத்தலைவர் சிங்கை முத்து, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் லாலிரோடு ராதா, ஜெயலலிதா பேரவை செயலாளர் பிரபாகரன், ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.ஜப்பார், காந்திபுரம் பகுதி செயலாளர் ராஜ்குமார், இலக்கிய அணி செயலாளர் புரட்சித்தம்பி, சிங்கை பாலன் ,பார்த்திபன் , எஸ்.ஆர்.ரவி, உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • ராஜபாளையம் அருகே உள்ள என். புதூர் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த தின விழா நடந்தது.
    • தே.மு.தி.க.வினரும், தங்கராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராஜபாளையம்

    வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த தின விழா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள என். புதூர் கிராமத்தில் நடந்தது. ஊர் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தினர் மற்றும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    விருதுநகர் மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார், வக்கீல் பத்மாவதி கண்ணன் முன்னிலையில் ஏராளமான அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் எம்.பி.லிங்கம் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்தனர். ம.தி.மு.க. சார்பில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் ஞானராஜ் தலைமையில் தி.மு.க.வினரும், ஒன்றிய செயலாளர் ஹாஜா ஷெரிப் தலைமையில் தே.மு.தி.க.வினரும், தங்கராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   

    ×