search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னாபிஷேகம்"

    • கருவறையில் அமைந்துஉள்ள சிவலிங்கம் குமரி மாவட்டத்தில் மிக உயரமான 5½ அடி சிலை ஆகும்.
    • மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள சிவலிங்கம் குமரி மாவட்டத்தில் மிக உயரமான 5½ அடி சிலை ஆகும்.

    அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி யான வருகிற 8-ந்தேதி இந்த கோவிலில் உள்ள மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னா பிஷேக நடக்கிறது. இதை யொட்டி அன்று காலை 7 மணிக்கு அபிஷேகமும் 7.30 மணிக்கு தீபாராதனையும் 9.30 மணிக்கு சிறப்பு அபி ஷேகமும் நடக்கிறது.

    பின்னர் காலை 10.15 மணிக்கு மூலவரான குகநா தீஸ்வர ருக்கு 100 கிலோ அரிசியால் சமைக்கப் பட்ட அன்னத்தால் அன்னா பிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    • பழனி பெரியாவுடையார் கோவிலில், உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின் தேவாரம், திருவாசகம் பாடி மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    பழனி:

    பழனி பெரியாவுடையார் கோவிலில், உலக நலன் வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பெரியாவுடையார் சன்னதி முன்பு பிரதான கலசம் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடந்தது.

    அதையடுத்து சிவபெருமானுக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது. பின்னர் சுத்த அன்னத்தால் சிவபெருமான் திருவுருவம் செய்யப்பட்டு, மஞ்சள்நிற அன்னத்தால் கிரீடம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து விநாயகர், பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர், திருமால், தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின் தேவாரம், திருவாசகம் பாடி மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில் உபயதாரர்கள் கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன், நரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
    • முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த 11-ந்தேதியும், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்றும் அன்னாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கோவில் மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்தயாகம் நடந்தது. அதையடுத்து சாயரட்சை பூஜையில் சிவன், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள் நிற அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மூலவருக்கு 16 வகை அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத கேட்டை நட்சத்திர நாளன்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது மழைவளம் பெருகவும், உலகநலன் வேண்டியும், மக்கள் பசி, பிணி இன்றி வாழவும் பூஜைகள் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக நிகழ்ச்சி சித்தனாதன் சன்ஸ் சார்பில் பழனி முருகன் கோவில் மண்டபத்தில் நடந்தது.

    முன்னதாக தங்க சப்பரத்தில் 3 கலசங்களில் புனிதநீர், 108 வலம்புரி சங்குகளில் புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 வலம்புரி சங்குகளுக்கு முன்பு கந்த ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று, கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் வைக்கப்பட்டு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, அசோக், செந்தில், கார்த்திக், குமரகுரு, தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகள் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் கோவில் குருக்கள், மிராசுதாரர்கள் செய்திருந்தனர்.

    ×