search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரயுமன்துறை"

    • விழிஞ்ஞம் பகுதியில் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்தவர்
    • பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் இரயுமன் துறை கடல் பகுதியில் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் குளச்சல் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிணமாக கிடந்தவர் சேர்ந்த கிரண் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×