என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின் கம்பியாள் உதவியாளர்"
- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகான தேர்வு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களூக்கு 26-ந் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பப்பட வேண்டும்.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகான தேர்வு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த மின்கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் மின்சாரப்பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் மின்வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. விண்ணப்பப்படிவம் https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வடச ென்னை, கோவை, சேலம், நாம க்கல், கடலூர், கரூர், பெரம் பலூர், திண்டுக்கல், புதுக் கோட்டை, நாகர ்கோவில், அம்பத்தூர், செங்கற்பட்டு, ஓசூர், ஈரோடு, திருச்சி, உளுந்தூ ர்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், திருவ ண்ணாமலை, குன்னூர், அரியலூர், நீடாமங்கலம், நாகப்ப ட்டினம், ராமநாத புரம், நெல்லை, சிவகங்கை, திருப்பூர், தர்மபுரி, திண்டிவனம், ராணி ப்பேட்டை, தென்காசி ஆகிய ஏதாவது ஒரு தேர்வுமையத்தை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும்.
போதுமான விண்ண ப்பங்கள் பெறப்படாத நிலையில் மேற்கண்ட தேர்வு மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் அருகிலுள்ள அரசு தொழி ற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு அங்கு தேர்வுகள் நடை பெறும். தேர்வு மையம் இறுதி செய்வது தொடர்பாக துறைத் தலைவரின் முடிவே இறுதுயானது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களூக்கு 26-ந் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பப்பட வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 0422 2642041, 9578695796, 8838583094, எண்களை தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்