search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 244898"

    • திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் உள்ள மையத்தடுப்புகளை தனியார் நிறுவனங்கள் அகற்றுவதால் விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
    • மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கும்போது உரிய பதில் அளிக்காமல் உள்ளனர்.

    திருப்பூர்:

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கே.செட்டிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக செயலாளரை நியமிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் காலாவதியான கனரக வாகனங்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் உள்ள மையத்தடுப்புகளை தனியார் நிறுவனங்கள் அகற்றுவதால் விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும். மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கும்போது உரிய பதில் அளிக்காமல் உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
    • இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் சீரமைப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை முதல் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த வருடம் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. உடனே இந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வர அனுமதி தரப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்ப்படாமல் இருக்க மீண்டும் மணல் மூட்டைகள் வைத்து சிமெண்ட் கலவை பூசும் பணி இன்று காலை தொடங்கியது.

    இதனால் இன்று காலை முதல் வருகிற வெள்ளிக்கிழமை வரை சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.

    மாற்று பாதையான சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம், குப்பனூர் வழியாக ஏற்காட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் குப்பனூர் வழியாக அரசு பேருந்துகள், கார்கள் சென்று வருகிறது. குப்பனூர் பகுதியில் சுங்க சாவடி உள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை வரை இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டு மே மாதம் இறுதியில் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் கோடை விழா நடப்பதை ஒட்டி மலை பாதை முழுவதும் சாலை சீரமைக்கவும் உத்தர விடப்பட்டு உள்ளது.

    • பொன்னேரி அருகே உள்ள கண்டெய்னர் யார்டிற்கு செல்லும் வாகனங்கள் மட்டும் மதியம் 12 பணி முதல் 4 மணி வரை அனுமதிக்கப்படும்.
    • விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகன ஓட்டிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 500 முதல் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் மற்றும் அதானி துறைமுகம், மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, பெட்ரோலிய நிறுவனம் தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

    மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்டச்சாலை வழியாக வந்து செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் அவ்வழியாக சென்றால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்பதால் மீஞ்சூர் நகரம் வழியாக பொன்னேரி நகரை கடந்து தச்சூர் வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை அடைகிறது. இதனால் பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் மீஞ்சூர்- தச்சூர் கூட்டுச்சாலையில் பொன்னேரி வழியாக செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் விதித்து பொன்னேரி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.

    அதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பொன்னேரி அருகே உள்ள கண்டெய்னர் யார்டிற்கு செல்லும் வாகனங்கள் மட்டும் மதியம் 12 பணி முதல் 4 மணி வரை அனுமதிக்கப்படும்.

    விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகன ஓட்டிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 500 முதல் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

    தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வட்டாட்சியர் செல்வக்குமார் தெரிவித்து உள்ளார்.

    • சாலை விரிவாக்க பணிகளுக்காக செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிக விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடை வீதிகளில் அதிக பாரம் ஏற்றுக் கொண்டு சாலை விரிவாக்க பணிகளுக்காக செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிக விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பழுதான சாலைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாமல் ஆங்காங்கே ஏற்படும் பள்ளங்களில் கான்கிரீட் கலவைகளை கொட்டி மீண்டும் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். அதோடு சாலையில் புழுதி பறப்பதால் அந்த பகுதி தூசி மண்டலமாக காட்சி தருகிறது.

    எனவே மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இது தொடர்பான தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளும் உடனடியாக காட்டுமன்னார்கோயில் பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களின் துயரை நேரில் ஆராய்ந்து இந்த சாலைகளை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேபோல் இந்த சாலைகளை சரி செய்யா விட்டால் சாலை மறியல் நடத்தப் போவதாக இந்திய மனித உரிமை கட்சி மற்றும் சிறுகுறு விவசாய சங்க தலைவர்கள், பகுஜன் ஜமாஜ் கட்சி நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருவதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது.
    • மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கடலூர், அரியலூர் மாவட்டத்தை இனைக்கும் வெள்ளாற்றில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் சேந்தம ங்கலம் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்கும் பணி கடந்தவாரம் துவங்கி யது. இந்நிலையில் வெளி மாவட்டத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருவதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இரண்டு மாவட்டத்திற்கும் பொது மக்களின் போக்குவரத்தும் 2 மாவட்டங்களில் இரு ந்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினந்தோறும் சென்று வருகின்றனர். இன்று வழக்கம்போல் காலை முதலே பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை ஏற்றி க்கொண்டு பள்ளிக்கு வாகனங்கள் வந்தன.

    அப்போது மணல் ஏற்றி வரும் லாரிகள் வெள்ளாற்றில் தரைப்பாலத்தில் நிறுத்திக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக செல்வது மட்டுமல்லாமல் லாரிகள் சாலையின் குறுக்கே நிறுத்து வதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் இருபுறமும் செல்ல முடியாமல் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் வெகுநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தலையிட்டு மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லும் வேலையில் இந்த கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் அரசு மணல் குவாரி இங்கு இயங்க தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏரிச்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
    • கண்துடைப்பாக நடந்த ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு பல சுற்றுலா பயணிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோடைசீசன் தொடங்கிய போது நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிச்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.

    ஆனால் வாகனம் இடித்தது போல் எரிச்சாலை யின் இருபுறமும் அந்த தடுப்பு கம்பி வேலிகள் உடைந்து கிடந்தன. தற்போது ஏரிச்சாலை ப்பகுதி யில் பஸ், தண்ணீர் லாரி, அதிக நீளமும் அதிக உயரமும் கொண்ட டெம்போக்கள், வேன் ஆகிய கனரக வாகனங்கள் இரு புறங்களில் இருந்தும் வருவதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஏற்கனவே இருபுறமும் அகற்றப்பட்ட சாலையோர கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில் கனரக வாகனங்களும் ஏரிச்சாலை பகுதியில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சில நேரங்களில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

    கண்துடைப்பாக நடந்த ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு பல சுற்றுலா பயணிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சுற்றுலாப் பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×