என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒற்றை யானை"
- பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் நீண்ட நேரமாக ஒற்றை யானை நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் ஒரு வித தயக்கத்துடன் இருந்தனர்.
- இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் தமிழக- கர்நாடக இடையே இரு மாநில எல்லையை கடக்கும் மிக முக்கியமான சாலை பண்ணாரியிலிருந்து திம்பம் செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மிகவும் அடர்ந்த வன ப்பகுதியில் அமைந்திருக்கும் சாலை என்பதால் சாலையில் வன விலங்குகள் அடிக்கடி கடந்து செல்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை என்பதால் ரோட்டில் வாகனங்கள் இல்லாததால் யானைகள் இரவு நேரங்களில் அதிகமாக ரோடுகளில் நின்று கொண்டு உலாவி வருகிறது.
இந்த நிலையில் பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் நீண்ட நேரமாக ஒற்றை யானை நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் ஒரு வித தயக்கத்துடன் இருந்தனர்.
ஒற்றை யானை என்பதால் எந்த நேரமும் வாகனத்தை தாக்க கூடும் என அச்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் யானை மெதுவாக ரோட்டில் கடந்து சென்றது.
பிறகு வாகனங்கள் செல்ல தொடங்கின. இரவு நேரங்களில் போக்குவரத்து தடை என்பதால் விலங்குகள் அதிகமாக ரோடுகளில் சுற்றி திரிகின்றன.
இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனவே வனப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மேலும் அதிக சத்தம் எழுப்பும் ஆரன்களை பயன்படுத்தக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையின அறிவுறுத்தினர்.
- வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை திண்று மிதித்து சேதப்படுத்தியது.
- வனத்துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏரா ளமான வன விலங்கு கள் உள்ளன.
இந்த வனப்பகுதி களில் இருந்து உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது .
இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (60). இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
இந்த நிலையில் இரவு 12 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை திண்று மிதித்து சேதப்படுத்தியது.
இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி திருமூர்த்தி ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதாரம் செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வனத்துறைக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் தகவல் அளித்தார்.
பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். ஆனால் யானைகள் வாழைகளை சேதப்படுத்தி கொண்டு இருந்தது. சுமார் 1 மணி நேரத்திக்கு பிறகு யானை வனப்பகுதிக்கு சென்றது.
இதில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300 வாழைகள் சேதம் ஆனது. கருப்பன் என்ற ஆட்கொல்லி யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வனப்பகுதியில் உள்ளது.
இந்த நிலையில் கும்கி யானை உள்ள பகுதியிலயே கருப்பன் யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வனத்துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்