search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடி- உதை"

    • கீழ சண்முகபுரத்தை சேர்ந்த முத்தையா (43) என்பவர் இசக்கிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
    • இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை தேடி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சண்முக புரம் கீழத்தெருவில் வசித்து வருபவர் இசக்கிமுத்து (39), பெயிண்டர். இவர் சம்பவத்தன்று கடைக்கு சென்றுவிட்டு ஆறுமுகநேரி வடக்கு பஜார் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது கீழ சண்முகபுரத்தை சேர்ந்த முத்தையா (43) என்பவர் இசக்கிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை தேடி வருகின்றனர்.

    • தொழிலாளி கைது
    • ரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சந்தினகுமார் (வயது 35) இவர் சென்னை அருகே தனியார் நிறுவனத்தில் காவலாளி ஆக பணி புரிகிறார்.

    சம்பவத்தன்று திங்கள் நகர் ரவுண்டானா அருகே வந்து கொண்டு இருந்தார்.அப் போது செய்யூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (28) மற்றும் இருவர் மது போதையில் சந்தனகுமாரை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த சந்தனகுமார், குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சந்தனகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    ×