search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரிச்சந்திரன் பொய்யே பேசாதவன் என்று சொல்வதுண்டு.
    • எந்த செயலும் தர்மத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    `அரிச்சந்திரன் பொய்யே பேசாதவன் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த நிலையை அடைவதற்கு முன்பு அவன் சொன்ன பொய்களின் எண்ணிக்கை ஏராளம்.

    மன்னனான அவன் சந்திரமதி என்ற பெண்ணை மணந்து வாழ்ந்தான். இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் தனக்கு குழந்தை பிறந்தால் குழந்தையை வைத்து நர மேதயாகம் செய்வதாக வருண பகவானிடம் வேண்டிக் கொண்டான் அரிச்சந்திரன். (இது சாஸ்திரப்படி குற்றமாகும்).

    இதன் பின் வருண பகவான் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, வருண பகவான் வந்து அரிச்சந்திர மகாராஜாவிடம், 'நீ சொன்னபடி உன் குழந்தையை பலி கொடுத்து யாகம் செய்' என்றார்.

    அதற்கு அரிச்சந்திரன், ''வருண பகவானே.. குழந்தைக்கு நாமகரணம் ஆகட்டும். பின் நான் அந்த யாகத்தை செய்கிறேன்'' என்றான். சில நாட்களில் குழந்தைக்கு `லோகிதாசன்' என பெயர் வைத்தான்.

    அதன்பின் வருண பகவான் வந்து, ''குழந்தைக்கு பெயர் வைத்தாகி விட்டது. இப்பொழுது யாகத்தை செய்'' என்றார். ''குழந்தைக்கு பெயர் வைத்து விட்டோம். ஆனால் குழந்தை நடக்கட்டும். பின் செய்கிறேன்'' என்றான் அரிச்சந்திரன்.

    குழந்தை நடக்க ஆரம்பித்ததும் அங்கு வந்த வருணனிடம், ''சத்திரிய தர்மப்படி குழந்தைக்கு பூணல் அணிவித்து வித்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த வித்தையை ஆரம்பித்ததும் நான் குழந்தையை பலி கொடுத்து யாகம் செய்கிறேன்'' என்றான் அரிச்சந்திரன். பின் குழந்தைக்கு பூணல் போடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வித்தை ஆரம்பமானது. அதேநேரம் லோகிதாசனும் வளர்ந்துவிட்டான்.

    இதற்கு மேலும் வருண பகவானிடம் சாக்குப் போக்கு சொல்ல முடியாது என்பதை உணர்ந்த அரிச்சந்திரன், இதுவரை நடந்த அனைத்தும் லோகிதாசன் காதில் விழும்படி தன் மனைவியிடம் பேசினான். தன்னை பலி கொடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்த லோகிதாசன் காட்டிற்குள் ஓடி விடுகிறான். அதைத்தான் அரிச்சந்திரனும் எதிர்பார்த்தான்.

    வருண பகவான் அரிச்சந்திர மகாராஜாவிடம் வந்து, ''நீ அனேக பொய்களை கூறி சாக்குப் போக்கு சொல்லி என்னை ஏமாற்றி விட்டாய். உனக்கு வயிறு வலிவரட்டும்'' என சாபம் விட்டார். இதனால் வயிற்று வலியால் மிகவும் சிரமப்பட்ட அரிச்சந்திரன் வசிஷ்டரிடம், ''என்ன செய்யலாம்?'' என ஆலோசனை கேட்டான்.

    அதற்கு வசிஷ்டர், ''பிறந்த குழந்தைகளை தவிர, சுவீகார புத்திரர்கள், விலை கொடுத்து வாங்கிய புத்திரர்கள் என புத்திரர்கள் என பலவகை உண்டு. எனவே யாராவது ஒரு குழந்தையை விலை கொடுத்து வாங்கி, நீ பலி கொடுத்து யாகம் செய்'' என்றார். அதன்படி பிள்ளையை விலைக்கு தருபவர்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருவதாக தண்டோரா போடப்பட்டது.

    யாரும் மகன்களை விற்க முன் வரவில்லை. அஜிகர்த்தன் என்ற அந்தணருக்கு சுனபுச்சன், சுனச்சேபன், சுனோலாங்கூலன் என்ற மூன்று மகன்கள். தன் ஒரு மகனை விற்கலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. மிக வறுமையில் பசியில் வாடிக் கொண்டிருந்தது அந்த குடும்பம்.

    தன் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க, அவள், 'கடைசி மகன் எனக்கு வேண்டும்' என்றாள். அந்தணன் 'எனக்கு தலைமகன் வேண்டும்' என்றான். இதை வெளியில் இருந்து கேட்ட நடு மகன், ''என்னை நீங்கள் விற்கப் போகிறீர்கள். சரி.. என்னை கொடுத்து விடுங்கள். உங்கள் பிரச்சினை தீரட்டும்'' என்றான்.

    அதன்படி அரிச்சந்திர மகாராஜாவுக்கு அவன் விற்கப்பட்டான். யாக ஸ்தம்பத்தில் சிறுவனை கட்டி வைத்துவிட்டு பலி கொடுப்பதற்கான யாகத்தை ஆரம்பித்தான் அரிச்சந்திரன். சிறுவன் அழ ஆரம்பித்தான்.

    அப்போது விசுவாமித்திரர் அங்கு வந்தார். அவர் அந்த சிறுவனிடம், ''வருத்தப்படாதே.. வருண பகவான் மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன். நீ இந்த ஜெபத்தை தொடர்ந்து செய். வருண பகவான் அருள் கிடைக்கும். உனக்கு மரணம் நேராது'' என்றார்.

    யாகம் ஆரம்பித்தவுடன் 'யார் பலி கொடுப்பது?' என கேள்வி வந்தது. அப்போது ஆடு, மாடுகளை வெட்டும் சாமித்திரன் என்பவன் அங்கு வந்தான். அவனிடம் ஆயிரம் பொன் தருவதாகக் கூறி, சிறுவனை வெட்டும்படி கூறினர். அவன் அழுது கொண்டிருந்த சிறுவனை கண்டு, ''நீங்கள் கொடுக்கும் ஆயிரம் பொன் எனக்கு வேண்டாம். இந்த சிறுவனை வெட்டும் பாவத்தை நான் செய்ய மாட்டேன்'' எனக் கூறி கத்தியை கீழே போட்டு விட்டான்.

    அப்பொழுது யார் வெட்டுகிறீர்களோ அவர்களுக்கு ஆயிரம் பொன் கொடுக்கப்படும் என அரிச்சந்திர மகாராஜா கூறினார். அதை கேட்ட சிறுவனின் தந்தை, ''நானே வெட்டு கிறேன்'' எனக்கூறி கத்தியை எடுத்துக்கொண்டு வந்தார்.

    அப்பொழுது வருண பகவான் விரைந்து வந்து, ''யாகத்தை நிறுத்துங்கள். இந்த சிறுவன் என்னை துதித்ததால் நான் மகிழ்ந்தேன். யாகம் பூர்த்தியாகி விட்டது. உன் வயிற்று வலியும் தீர்ந்து விடும்'' என்றார். வசிஷ்டர், நாரதர், விசுவாமித்திரர் போன்றவரும் அங்கிருந்தனர். சிறுவன் ஸ்தம்பத்தில் இருந்து விடுவிக்கப்பட்டான்.

    இப்போது சிறுவன் யாரிடம் செல்வது என்ற கேள்வி எழுந்தது. தந்தையிடம் செல்வதா? அரசனிடம் செல்வதா? அல்லது வருண பகவானிடம் செல்வதா? என்று கேள்வி எழுந்தது. அதற்கு நாரதர், ''அந்தணர் இவனைப் பெற்று எடுத்தாலும், தன் மகனை வெட்டப்போகிறார்கள் என்று தெரிந்தே விலைக்கு கொடுத்து விட்டார். எனவே அவர் இவனுக்கு தந்தையாக மாட்டார். வெட்டுவதற்காகவே சிறுவனை விலைக்கு வாங்கினார் அரசன். எனவே அரிச்சந்திர மகாராஜாவும் தந்தைக்கு சமம் அல்ல.

    சாமித்திரன் சிறுவனை வெட்டாமல் விட்டான். ஜாதியில் தாழ்ந்திருத்தாலும் குணத்தால் அவனே உயர்ந்தவன். இருந்தாலும் அவனும் தகப்பனாக மாட்டான். (இந்த இடத்தில் அந்தணன் உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் குணத்தால் தாழ்ந்த வனாகி விட்டான் என நாரதர் கூறுகிறார்).

    வருண பகவான் சிறுவன் துதி செய்ததால் அருள் புரிந்தார். அவரும் தகப்பன் ஆக மாட்டார். ஆனால் எந்த பலனும் கருதாமல் இவன் உயிர் பிழைக்க வேண்டும் என கருதி மந்திரத்தை உபதேசம் செய்த விசுவாமித்திரரே இந்த சிறுவனுக்கு தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவராவார். எனவே விசுவாமித்திரருடன் இவன் செல்லலாம்'' என நாரதர் கூறினார்.

    தனக்கு குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் உயிர்பலி கொடுக்கலாம் என்று நினைத்ததால், பிற்காலத்தில் அரிச்சந்திரன் பலவிதமான துன்பங்களை அனுபவித்து, நாட்டை இழந்து சுடுகாட்டுக்கு செல்லும் நிலையும் உருவாகிறது. அந்தணர் குலத்தில் பிறந்தாலும் குணத்தால் தாழ்ந்தவனாகி அவமானப்பட்ட நிகழ்வும் இங்கு நடக்கிறது. எனவே எந்த செயலும் தர்மத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதே உண்மை.

    • 13-ந்தேதி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.
    • 16-ந்தேதி திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    11-ந்தேதி (செவ்வாய்)

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

    * குரங்கணி முத்துமாரியம்மன் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவாளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    12-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வியாழன்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி உற்சவம் ஆரம்பம்.

    * திருக்கோளக்குடி சிவபெருமான் புறப்பாடு.

    * திருமயம் ஆண்டாள் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (வெள்ளி)

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் திருவீதி உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (சனி)

    * கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு.

    * சாத்தூர் வேங்கடேசபெருமாள் திருவீதி உலா.

    * திருக்கோளக்குடி சிவபெருமான் கேடய சப்பரத்திலும், இரவு பூத வாகனத்திலும் உலா,

    * மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    * மதுராந்தகம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * பக்ரீத் பண்டிகை.

    * சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனத் தில் பவனி,

    * திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    • திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • கோமாசிமாற நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 29 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி இரவு 7.26 மணி வரை. பிறகு சஷ்டி.

    நட்சத்திரம்: ஆயில்யம் நள்ளிரவு 1.38 மணி வரை. பிறகு மகம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கபூமாலை சூடியருளல். குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. கோமாசிமாற நாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-பரிசு

    கடகம்- லாபம்

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-இன்பம்

    துலாம்- சாந்தம்

    விருச்சிகம் -இனிமை

    தனுசு- ஆசை

    மகரம்-வரவு

    கும்பம்-பண்பு

    மீனம்-பரிவு

    • சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
    • நமிந்தியடிகள் நாயனார், சேக்கிழார் நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-28 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 6.17 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: பூசம் இரவு 11.37 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் விழா தொடக்கம். திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. நமிந்தியடிகள் நாயனார், சேக்கிழார் நாயனார் குருபூஜை. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-செலவு

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-ஆசை

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-உவகை

    கன்னி-ஈகை

    துலாம்- கீர்த்தி

    விருச்சிகம்-வரவு

    தனுசு- திறமை

    மகரம்-உழைப்பு

    கும்பம்-பயணம்

    மீனம்-மேன்மை

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-27 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை மாலை 5.37 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 10.19 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைநாயகி சிறப்பு அலங்கார வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. நம்பியாண்டார் நம்பி நாயனார் குருபூஜை. இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு வழிபாடு. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-வரவு

    கடகம்-உவகை

    சிம்மம்-தனம்

    கன்னி-உதவி

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- மேன்மை

    மகரம்-உயர்வு

    கும்பம்-இனிமை

    மீனம்-செலவு

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-26 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை மாலை 5.26 மணி வரை. பிறகு திருதியை

    நட்சத்திரம்: திருவாதிரை இரவு 9.21 மணி வரை. பிறகு புனர்பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பக 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராகோபால சுவாமி, திருப்புல்லாணி ஸ்ரீஜெகநாதப்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மூல வருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆர்வம்

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-பணிவு

    கடகம்-பெருமை

    சிம்மம்-உண்மை

    கன்னி-உதவி

    துலாம்- நலம்

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- நன்மை

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-பரிவு

    மீனம்-பாசம்

    • திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.
    • பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 25 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை மாலை 5.30 மணி வரை. பிறகு துவிதியை.

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 8.35 மணி வரை. பிறகு திருவாதிரை.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சந்திர தரிசனம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உறுதி

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-செலவு

    கடகம்- வரவு

    சிம்மம்-களிப்பு

    கன்னி-தனம்

    துலாம்- பரிவு

    விருச்சிகம்-உதவி

    தனுசு- நற்செயல்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-ஈகை

    மீனம்-கடமை

    • இன்று சர்வ அமாவாசை.
    • தக்கோலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 24 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அமாவாசை இரவு 6.40 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: ரோகிணி இரவு 9 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர் தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல். ஆலங்குடி ஸ்ரீகுருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-திடம்

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்- ஆக்கம்

    சிம்மம்-சோர்வு

    கன்னி-உயர்வு

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-வாழ்வு

    தனுசு- பரிசு

    மகரம்-அன்பு

    கும்பம்-ஆதரவு

    மீனம்-பக்தி

    • இன்று கார்த்திகை விரதம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-23 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 7.55 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: கிருத்திகை இரவு 9.28 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான், பாலாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகன புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலையில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்க ளில் காலை சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கடமை

    ரிஷபம்-உண்மை

    மிதுனம்-நன்மை

    கடகம்-பெருமை

    சிம்மம்-நட்பு

    கன்னி-லாபம்

    துலாம்- தெளிவு

    விருச்சிகம்-ஈகை

    தனுசு- புகழ்

    மகரம்-முயற்சி

    கும்பம்-உயர்வு

    மீனம்-வெற்றி

    • 6-ந்தேதி அமாவாசை.
    • திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    4-ந்தேதி (செவ்வாய்)

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடிய ருளல்.

    * அகோபிலமடம் திருமத் 39-வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.

    * திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    5-ந்தேதி (புதன்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் உலா.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    6-ந்தேதி (வியாழன்)

    * அமாவாசை

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.

    * மன்னார்குடி ராஜகோ பால சுவாமி புறப்பாடு.

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவ சம் அணிந்து வைர வேல் தரிசனம்,

    * மேல்நோக்கு நாள்.

    7-ந்தேதி (வெள்ளி)

    * ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப் பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.

    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (சனி)

    * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார் குடி ராஜகோபால சுவாமி, திருப்புல்லாணி ஜெகநாதப்பெருமாள் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

    * திருநள்ளார் சனி பகவானுக்கு அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    9-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு திருமஞ்சன சேவை.

    * பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்,

    * சமநோக்கு நாள்.

    10-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.

    * தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்,

    • இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி.
    • திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பாலாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-22 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி இரவு 9.34 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: பரணி இரவு 10.18 மணி வரை பிறகு கிருத்திகை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பாலாபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருத்தணி, கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ அம்பாள் ஸ்ரீ சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தாமதம்

    ரிஷபம்-தானம்

    மிதுனம்-கீர்த்தி

    கடகம்-சாந்தம்

    சிம்மம்-பக்தி

    கன்னி-திடம்

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- பொறுமை

    மகரம்-விவேகம்

    கும்பம்-பாராட்டு

    மீனம்-வரவு

    • இன்று வாஸ்து நாள்.
    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-21 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி இரவு 11.31 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: அசுவினி இரவு 11.29 மணி வரை பிறகு பரணி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று வாஸ்து நாள் (காலை 9.58 மணிக்கு மேல் 10.34 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று) சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-ஆக்கம்

    மிதுனம்-தனம்

    கடகம்-பக்தி

    சிம்மம்-உதவி

    கன்னி-நிறைவு

    துலாம்- நம்பிக்கை

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- தாமதம்

    மகரம்-ஆதாயம்

    கும்பம்-சாதனை

    மீனம்-சுகம்

    ×