என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்மிகம்"
- தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-20 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி நள்ளிரவு 1.41 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.52 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உண்மை
ரிஷபம்-ஊக்கம்
மிதுனம்-ஆர்வம்
கடகம்-பெருமை
சிம்மம்-பரிவு
கன்னி-பாசம்
துலாம்- உதவி
விருச்சிகம்-செலவு
தனுசு- வரவு
மகரம்-உறுதி
கும்பம்-வெற்றி
மீனம்-பக்தி
- வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அதனைத் தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது.
விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பழங்கள், மலர் அலங்காரத்துடன் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடந்தது. 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளை குதிரை வாகனம் தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது.
அங்கு குரு சுவாமி தலைமையில் அய்யா வழி பக்தர்களின் 'அய்யா சிவ சிவா அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்திற்கு இடையே அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குமரி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் குதிரை வாகனம் செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வந்தது. வாகனம் வரும் வழிகளில் அந்த பகுதி மக்கள் வரவேற்பு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து வழிபட்டனர்.
இரவு 11 மணிக்கு வாகனம் சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. அங்கு வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் அய்யா வைகுண்டசாமி காட்சியளித்தார். தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், பெரிய உகப்படிப்பும், அன்னதர்மமும் நடந்தது.
விழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
- திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் அலங்காரம், திருமஞ்சன சேவை
- உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-19 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி காலை 6.28 மணி வரை பிறகு தசமி நாளை விடியற்காலை 5.25 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : உத்திரட்டாதி பின்னிரவு 2.26 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில் அலங்காரம், திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம் - நற்சொல்
ரிஷபம் - முயற்சி
மிதுனம் - இன்பம்
கடகம் - செலவு
சிம்மம் - சுகம்
கன்னி - சுபம்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - உறுதி
தனுசு - ஈகை
மகரம் - தனம்
கும்பம் - அன்பு
மீனம் - சாந்தம்
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 18 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி காலை 8.52 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம் : பூரட்டாதி நாளை விடியற்காலை 4.03 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம் - அமைதி
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - சுகம்
கடகம் - முயற்சி
சிம்மம் - பொறுமை
கன்னி - பரிவு
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - உயர்வு
தனுசு - வாழ்வு
மகரம் - புகழ்
கும்பம் - பண்பு
மீனம் - பணிவு
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-17 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி காலை 11.22 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : அவிட்டம் காலை 7.11 மணி வரை பிறகு சதயம் நாளை விடியற்காலை 4.22 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : சித்த, மரணயோகம்
ராகு காலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சன சேவை, தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - உழைப்பு
ரிஷபம் - முயற்சி
மிதுனம் - பொருமை
கடகம் - சாந்தம்
சிம்மம் - நிறைவு
கன்னி - மேன்மை
துலாம் - யோகம்
விருச்சிகம் - உதவி
தனுசு - உழைப்பு
மகரம் - இரக்கம்
கும்பம் - நட்பு
மீனம் - பொறுப்பு
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
- காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ஆலும் பல்லக்கில் தீர்த்தவாரி
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-16 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி நண்பகல் 1.26 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : திருவோணம் காலை 8.36 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு ஆலும் பல்லக்கில் தீர்த்தவாரி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் திருப்புளிங்குடி மூலவர் பூமிபாலகர், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-ஆரோக்கியம்
மிதுனம்-வரவு
கடகம்-செலவு
சிம்மம்-உதவி
கன்னி-பரிவு
துலாம்- பாசம்
விருச்சிகம்-பண்பு
தனுசு- உயர்வு
மகரம்-பாராட்டு
கும்பம்-பயணம்
மீனம்-இன்பம்
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
- சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
28-ந்தேதி (செவ்வாய்)
* காஞ்சிபுரம் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜர், மதுரை கூடலழகர் தலங்களில் விடையாற்று உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமா வாளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
* மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (புதன்)
* காஞ்சிபுரம் வரதராசர் பல்லக்கில் தீர்த்தவாரி.
* அகோபிலமடம் திருமத் 27-வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
30-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
31-ந் தேதி (வெள்ளி)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
1-ந் தேதி (சனி)
* திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழ கர், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலை யான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
2-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
3-ந் தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
- மதுரை ஸ்ரீகூடலழகர் விடையாற்று உற்சவம்.
- முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 15 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி பிற்பகல் 3.25 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம் : உத்திராடம் காலை 9.46 மணி வரை. பிறகு திருவோணம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
நாளை அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி. திருவோண விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காஞ்சிபுரம் ஸ்ரீவரதாஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. மதுரை ஸ்ரீகூடலழகர் விடையாற்று உற்சவம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - ஆரோக்கியம்
மிதுனம் -வெற்றி
கடகம் - சாதனை
சிம்மம் - பாசம்
கன்னி - உதவி
துலாம் - நட்பு
விருச்சிகம் - ஆர்வம்
தனுசு - போட்டி
மகரம் - ஆக்கம்
கும்பம் - பாராட்டு
மீனம் - பக்தி
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 14 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி மாலை 5.08 மணி வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: பூராடம் காலை 10.36 மணி வரை. பிறகு உத்திராடம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை; மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம். மதுரை ஸ்ரீகூடலழகர் கருட வாகனத்தில் திருவீதியுலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-பரிவு
மிதுனம்-நன்மை
கடகம்- யோகம்
சிம்மம்-வரவு
கன்னி-நலம்
துலாம்-மேன்மை
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- உண்மை
மகரம்-கவனம்
கும்பம்-பெருமை
மீனம்-திறமை
- இன்று சங்கடஹர சதுர்த்தி. சுப முகூர்த்த தினம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-13 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை இரவு 6.28 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : மூலம் காலை 11.04 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கடஹர சதுர்த்தி, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி
இன்று சங்கடஹர சதுர்த்தி. சுப முகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் வேணுகோபாலன் திருக்கோலமாய்க் காட்சி. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம் - சுகம்
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - உவகை
கடகம் - போட்டி
சிம்மம் - பெருமை
கன்னி - அமைதி
துலாம் - ஜெயம்
விருச்சிகம் - செலவு
தனுசு - தெளிவு
மகரம் - இனிமை
கும்பம் - முயற்சி
மீனம் - நற்செயல்
- ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
- மதுரை ஸ்ரீகூடலழகர் எடுப்புச் சப்பரம் சப்தாவர்ணம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 12 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை இரவு 7.24 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: கேட்டை காலை 11.06 மணி வரை. பிறகு மூலம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம். மதுரை ஸ்ரீகூடலழகர் எடுப்புச் சப்பரம் சப்தாவர்ணம். பழனி ஸ்ரீஆண்டவர் பவனி. திருஞானசம் பந்தர் நாயனார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார், முருகநாயனார் குருபூஜை, உப்பிலியப்பன் கோவில், சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-விருப்பம்
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-நிறைவு
கடகம்-சாந்தம்
சிம்மம்-நற்செய்தி
கன்னி-அமைதி
துலாம்- பரிசு
விருச்சிகம்-முயற்சி
தனுசு- பாராட்டு
மகரம்-ஆர்வம்
கும்பம்-உதவி
மீனம்-பக்தி
- வட இமயம் தொடங்கி தென் குமரி வரை உள்ள சிவத்தலங்கள் 1008.
- செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு என அழைக்கப்பட்டது.
காலத்தால் அளவிட முடியாத பழம் பெருமையும், புராண வரலாறும் கொண்டது திருச்செங்கோடு என்ற திருக்கொடி மாட செங்குன்றூர். வட இமயம் தொடங்கி தென் குமரி வரை உள்ள சிவத்தலங்கள் 1008. இதில் பாடல் பெற்ற தலங்கள் என்னும் புகழ் பெற்றவை 274 கோவில்கள்.
இதில் தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திருப்புக்கொளியூர் என்னும் அவினாசி, திருமுருகன் பூண்டி, திருநனா என்றழைக்கப்படும் பவானி, திருக்கொடி மாடச் செங்குன்றூர் என்றழைக்கப்படும் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர். திருவெஞ்சாமக்கூடல், திருப்பாண்டி, கொடுமுடி, திருக்கருவூரணி நிலை என்னும் கரூர் ஆகிய 7 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.
செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு என அழைக்கப்பட்டது என்றாலும், செந்நிறமாக திகழ புராணம் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?
திரிபுரம் எரிக்க புறப்பட்ட சிவபெருமான் மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்மை நாணாக்கி, அக்கினி தேவனை அம்பு முனையில் பொருத்தி, வாயுவை விசையாக்கி எடுத்து சென்றார். எல்லாம் சிவம் என்றிருக்க நம் துணையின்றி சிவனால் முப்புரத்தை எரிக்க முடியாது என மேரு, வாசுகி, அக்கினி, வாயு ஆகியோர் ஆணவம் கொண்டனர்.
இதனை உணர்ந்த எம் பெருமான் இவர்கள் துணையின்றி தம் சிரிப்பாலேயே முப்புரத்தையும் எரித்து அழித்தார். இந்த நிலையில் வாயுவுக்கும் மும்மூர்த்திகளின் ஆபரணமாக திகழும் ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற பெரும் போட்டி, சண்டை எழ இதில் தலையிட்ட தேவர்கள் மேரு மலையை வாயு தன் பலத்தால் தகர்க்க வேண்டும்.
ஆதிசேஷன் தன் பலத்தாலும் படத்தாலும் அதனை தடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு போட்டியிட்டு வெல்பவர்களே பலசாலி என்று கூறினார்கள். அதன்படி மேரு மலையை ஆதிசேஷன் பற்றிக் கொள்ள,வாயுதேவன் தன் பலம் முழுவதையும் பிரயோகித்தும் வெற்றி காண முடியவில்லை.
தோல்வியில் ஆத்திரம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் ஈரேழு லோகங்களிலும் காற்றே இல்லாமல் செய்கிறான். சுவாசிக்க காற்று இல்லாமல் உயிரினங்களும், பயிரினங்களும் மயங்கி விழ பயந்து போன தேவர்கள் வாயுவிடம் மன்றாடினார்கள்.
வாயுதேவன் மறுக்கவே தெய்வ குணம் கொண்ட ஆதிசேஷனை போட்டியில் விட்டுக் கொடுக்கும்படி வேண்டினார்கள். மனமிறங்கிய ஆதிசேஷன் தன் பிடியை தளர்த்த வாயு தன் பலத்தால் மோதி ஆதிசேஷனின் தலையையும், மேருமலையின் சில பாகங்களையும் பிய்த்து கொண்டு போகும் படி செய்தார்.
இதில் ஆதிசேஷனின் ஐந்து தலைகளும், மேருவின் ஐந்து மலைகளும் பெயர்ந்து விழுந்தது. ஆதிசேஷனின் நடுநாயகமான தலையும், அதில் இருந்து பீறிட்ட ரத்தம் தோய்ந்து விழுந்ததால் செங்குன்றூர் எனவும், பின்னர் திருக்கொடி மாடச்செங்குன்றூர் எனவும் வழங்கப்பட்டு காலப் போக்கில் மருவி திருச்செங்கோடானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்