என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்மிகம்"
- சோளசிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் புறப்பாடு.
- திருச்செந்தூர் முருகப் பெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-18 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: அமாவாசை காலை 7.59 மணி வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: பூரம் மறுநாள் விடியற்காலை 4.13 மணி வரை. பிறகு உத்திரம்.
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சோளசிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் புறப்பாடு. திருச்செந்தூர் முருகப் பெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் அருளுதல், மாலை கஜமுக சூரசம்ஹாரலீலை. உப்பூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்சொல்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-பணிவு
கடகம்-பரிசு
சிம்மம்-துணிவு
கன்னி-பயணம்
துலாம்- தேர்ச்சி
விருச்சிகம்-பெருமை
தனுசு- விருத்தி
மகரம்-ஆக்கம்
கும்பம்-மாற்றம்
மீனம்-உவகை
- அமாவாசை தானம் பல மடங்கு புண்ணியம் தரும்.
- சோமாவதி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதி, வெவ்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஒரு சில மாதங்களில் வரும் அமாவாசை, தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில், ஆவணி மாதம் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானதாக இருக்கிறது.
ஆவணி மாத அமாவாசை, சிம்ம ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றாக சஞ்சரிக்கும் போது ஏற்படுகிறது. இந்த ஆண்டு திங்கட்கிழமையான இன்று அமாவாசை வருவதால், சோமாவதி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.
இன்று காலை 5.21 மணிக்கு அமாவாசை தொடங்கி நாளை காலை (செவ்வாய்க்கிழமை) 7.24 மணி வரை உள்ளது.
பொதுவாக, அமாவாசை நாளன்று சிவ வழிபாடும், பவுர்ணமி நாளன்று அம்மன் வழிபாடும் செய்வது வழக்கம். அதே போல, அமாவாசைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, பித்ரு தோஷம் போக்கும்.
இந்த ஆவணி அமாவாசை, சிவனுக்கு உகந்த நாள், சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருவது மிகச் சிறப்பானது.
இன்று அதிகாலை 5 மணிக்கே அமாவாசை தொடங்கி விடுவதால், நண்பகல் நேரத்துக்குள் அமாவாசை திதி கொடுப்பதோ தர்ப்பணம் செய்வதோ செய்து விடலாம்.
சோமாவதி அமாவாசை முடிந்த பிறகு, அவரவர் வசதிக்கு ஏற்ப, தானம் செய்யலாம். அமாவாசை தானம் பல மடங்கு புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.
பித்ருக்களின் சாபம், தோஷம் ஆகியவை நீங்கவும் வாழ்க்கையில் இருக்கும் பலவிதமான கஷ்டங்கள், பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு அமாவாசை மிகவும் ஏற்ற நாளாகும்.
இந்த சோமாவதி அமாவாசை நாளில் பிறருக்கு தானம் தர்மம் செய்தால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். அதுபோல கடந்த கால பாவங்கள் நீங்கும்.
இன்று செய்யப்படும் தானம் முன்னோர்களை மகிழ்ச்சி அடையச் செய்வதாகவும், அவர்களது ஆசிகளை பெறுவதாகவும் கருதப்படுகிறது.
அந்த வகையில் ராசியின் அடிப்படையில் சோமாவதி அமாவாசை நாளில் பிறருக்கு தானம் செய்வது இன்னும் பல நன்மைகளை தரும். அமாவாசை நாளில் எந்தந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேஷம்- வெல்லம், கோதுமை மற்றும் பிற உணவுகள்.
ரிஷபம்- நெய் மற்றும் வெள்ளிப் பொருட்கள்.
மிதுனம்- வெண்கலம் மற்றும் பச்சை பயிறு.
கடகம்- வெள்ளை ஆடை மற்றும் பால்.
சிம்மம்- தங்க நகைகள், ஆடைகள் மற்றும் உணவு.
கன்னி- நெய், எண்ணெய் மற்றும் தானியங்கள்.
துலாம்- பால், நெய் மற்றும் தங்கப்பொருட்கள்.
விருச்சகம்- நெய் மற்றும் சிவப்பு ஆடைகள்.
தனுசு- உணவு, தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பொருட்கள்.
மகரம்- தேங்காய்.
கும்பம்- நெய்.
மீனம்- நெய், தங்க பொருட்கள் தானம் செய்து வழிபடலாம்.
- இன்று சர்வ அமாவாசை.
- இளையாங்குடி நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-17 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி காலை 6.32 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: மகம் நள்ளிரவு 1.50 மணி வரை பிறகு பூரம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ அமாவாசை. (அமா சோம பிரதட்சிணம்). தேவக்கோட்டை, திண்டுக்கல், மிலட்டூர் கோவில்களில்ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலகர்பணப்புரி, திருவெண்காடு கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி ஆண்டாள் திருக்கோலம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் வெள்ளிக் கேடயத்தில் பவனி. இளையாங்குடி நாயனார் குருபூஜை. திருச்செந்தூர், பெருவயல் கோவில்களில் ஸ்ரீ முருகப் பெருமான் தேரோட்டம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-தெளிவு
கடகம்-தாமதம்
சிம்மம்-கவனம்
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- நலம்
விருச்சிகம்-பணிவு
தனுசு- பண்பு
மகரம்-ஆக்கம்
கும்பம்-நிறைவு
மீனம்-லாபம்
- விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்.
- ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.
அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-
அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.
பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சாற்றலாம்.
கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.
ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.
மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகு படுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.
திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.
புனர்பூசம்: சந்தன அலங்கா ரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகு படுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.
ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.
மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.
பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சாற்றவும்.
உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.
விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.
அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.
கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்புல் மாலையும் சாற்றவும்.
மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.
பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.
உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.
திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.
அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அலங்காரம் செய்வித்தால் போதும்.
சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.
பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.
உத்திரட்டாதி: ரோஜா மாலை அலங்காரமே போதும்.
ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணிவிக்கவும்.
- இன்று மாத சிவராத்திரி.
- கண்டருளல் அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குரு பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-16 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி (முழுவதும்)
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 11.49 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று மாத சிவராத்திரி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி ராமாவதாரம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கமல வாகனத்தில் புறப்பாடு. கண்டருளல் அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குரு பூஜை. உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-கவனம்
மிதுனம்-பரிவு
கடகம்-பாசம்
சிம்மம்-நிறைவு
கன்னி-நலம்
துலாம்- வரவு
விருச்சிகம்-லாபம்
தனுசு- விருத்தி
மகரம்-சுகம்
கும்பம்-பரிசு
மீனம்-கடமை
- இன்று சனி பிரதோசம்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-15 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி மறுநாள் விடியற்காலை 5.17 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: பூசம் இரவு 10.14 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சனி பிரதோசம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் பூத வாகனத்தில் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி ரெங்கநாதன் திருக்கோலமாய்க் காட்சி. உப்பூர் ஸ்ரீ விநாயகர் சிம்ம வாகனத்தில் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சனம். திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-நிம்மதி
மிதுனம்-அனுகூலம்
கடகம்-உழைப்பு
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-முயற்சி
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-குழப்பம்
தனுசு- பண்பு
மகரம்-பணிவு
கும்பம்-நட்பு
மீனம்-வாழ்வு
- ஆவணி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.
7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையின் கட்டளை மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.
அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
8-ம் திருவிழாவான நாளை(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
பகல் 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகின்ற 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞான சேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தசராத்திருவிழா அக்டோபர் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ந் தேதி.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த திருவிழாவை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சென்னை, கோவை, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற வேடங்கள் அணிவார்கள்
குலசேகரன்பட்டினம் கோவிலை பொறுத்தவரை 90 நாள், 48 நாள், 31 நாள், 12 நாள், 10 நாள் என பல்வேறு நாட்கள் விரதத்தை கடை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் குலசேகரப்பட்டினம் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர் கையால் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி உள்ளனர்.
சிறப்பு வாய்ந்த குலசேகரப்பட்டினம் தசராத்திருவிழா வருகிற அக்டோபர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ந் தேதி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
இதற்கிடையே, தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக குலசேகரன்பட்டி னம் புறவழிச் சாலை, உடன்குடி சாலை, மணப்பாடு சாலை, திருச்செந்தூர் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அப்பகுதியில் உள்ள முட்செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, மேடு, பள்ளங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் பக்தர்கள் வாகனம் நிறுத்தும் 20 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடங்களில் தற்காலிக நடமாடும் சுகாதார வளாகங்களும் அமைக்கப்பட உள்ளது.
- விநாயகப்பெருமானுக்கு 32 வடிவங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
- ஷோடச விநாயகர் என்றால் 16 விநாயகர்.
விநாயகப்பெருமானுக்கு 32 வடிவங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஷோடச விநாயகர் (16 விநாயகர்) வழிபாடு என்பது முக்கியமானது. இந்த விநாயகர்களை பற்றியும், அவர்களை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.
பாலகணபதி
மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி இருக்கும் இவர், சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனின் தோற்றம் கொண்டவர். இவரை வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.
தருண கணபதி
பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறிந்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக் கரங்களில் ஏந்தியிருப்பவர் இவர். சூரியன் உதிக்கும்போது இருக்கும் செவ்வானத்தின் நிறத்தைக் கொண்டு இளைஞராக அருள்பவர் இவர். இவரை வழிபட்டால் முகக் கலை உண்டாகும்.
பக்த கணபதி
தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லம் கொண்டு செய்யப்பட்ட பாயசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை, தம் நான்கு கரங்களில் ஏந்தியவர் இந்த விநாயகர். இவர் நிலவின் ஒளியைப் போன்ற வெண்ணெய் நிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நல்லவிதமாக அமையும்.
வீர கணபதி
பதினாறு கரங்களைக் கொண்டவர் இவர். அவற்றில் ஒரு கரத்தில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களையும் ஏந்தி செந்நிற மேனியுடன் ரவுத்ரமாக வீராவேசத்துடன் காணப்படுபவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.
சக்தி கணபதி
பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர் இந்த விநாயகர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் சீராகும்.
துவிஜ கணபதி
இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியிருப்பார். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.
சித்தி கணபதி
பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தியிருப்பார். ஆற்றலைக் குறிக்கும் சித்தி தேவியை உடன் இருத்தியபடி, பொன்னிற மேனியைக் கொண்டவராக அருள்பவர். இவருக்கு 'பிங்கள கணபதி' என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் சகல காரியமும் சித்தியாகும்.
உச்சிஷ்ட கணபதி
வீணை, அட்சரமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீலவண்ண மேனியுடைய இவர் தன்னுடைய தேவியை அணைத்தபடி இருப்பவர். இவரை வழிபடுவதால் வாழ்க்கையில் உயர்வும், உயர் பதவிகளும் பெறலாம்.
விக்னராஜ கணபதி
சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி, பொன்னிற மேனியுடன் பிரகாசிப்பவர். இவரை வழிபடுவதால் விவசாயம் செழிக்கும்.
சுப்ர கணபதி
கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும், ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்தியிருப்பார். செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர், விரைந்து அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.
ஹேரம்ப கணபதி
அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சரமாலை, கோடரி, சம்மட்டி, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகளில் புகழ் பெறலாம்.
லட்சுமி கணபதி
பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.
மகா கணபதி
பிறை சூடி, மூன்று கண்களுடன் தன் சக்தியான வல்லபையை அணைத்த வண்ணம், கைகளில் மாதுளம்பழம், கதை, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும், துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிவப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.
புவனேச கணபதி
விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால், கஜமுகாசூரன் தன் சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்டவர் இந்த கணபதி. இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வழக்குகள் வெற்றியாகும்.
நிருத்த கணபதி
மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.
ஊர்த்துவ கணபதி
பொன்னிற மேனியுடைய இவர், எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
- திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்டச்சேவை.
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளிவாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-14 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: துவாதசி மறுநாள் விடியற்காலை 4.42 மணி வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 9.09 மணி வரை. பிறகு பூசம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் புறப்பாடு. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உருகு சட்டச்சேவை, விளாமிச்சவேர் சப்பரத்தில் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளிவாகன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வாழ்வு
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-மாற்றம்
கடகம்-பக்தி
சிம்மம்-அன்பு
கன்னி-உறுதி
துலாம்- முயற்சி
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- பயிற்சி
மகரம்-வெற்றி
கும்பம்-தெளிவு
மீனம்-வரவு
- உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார்.
- திரிவிக்ரம அவதார வடிவில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார்.
இறைவன் மகாவிஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்து இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை காத்து அருளினார். அந்த பிரகலாதன் வழியில் வந்த மகாபலி சக்ரவர்த்தி அறத்தின் வழி நடக்காது ஆட்சி செய்தமையால் அவனை அழிக்க மகாவிஷ்ணு மேற்கொண்ட திரு அவதாரம் திரிவிக்ரம அவதாரம்.
மகாவிஷ்ணு வாமனனாக வடுரூபத்தில் வந்து மகாபலியிடம் தான் தவம் செய்ய விரும்புவதால் தனக்கென தன் காலால் 3 அடி இடம்கேட்க, மகாபர்யும் கொடுக்க நீரேற்று (தாரைவார்த்து) தானம் பெற்ற மூவடியை தன் சேவடி கொண்டு அளக்க திரிவிக்ரமனாய் விண் முட்ட எழுந்தார்.
பேருரு கண்டு பிரமிப்படைந்த மகாபலி அரசனின் முன்பாக ஒரடியால் உலகையளந்து, மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து 3-வது அடிக்கு இடம் கேட்க அரசன் குனிந்து தலையைக் காட்ட, தம் திருவடியால் தலையை பாதாளத்தில் அழுத்தினார். மேற்கண்ட திருக்கோலத்தில் உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார்.
பெருமாள் மேற்கே திருமுக மண்டலத்துடன் திரிவிக்ரம அவதார வடிவத்தில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார்.
தனது இடது கரத்தினை நீட்டி அதில் இரண்டு விரல்களைக் காட்டி, தனது இரண்டு அடிகளால் மண்ணையும், விண்ணையும் அளந்து முடித்ததை உணர்த்தி, வலது கரத்தில் மீதம் உள்ள ஓரடிக்கு இடம் எங்கே என்று கேட்பது போல ஒரு விரலைக் காட்டியும் மகாபலியின் திருமுடிமீது வலத் திருவடியை சாத்தியும், இடத் திருவடியை ஆகாயத்திற்கும் பூமிக்கு மாய் அளந்து விட்டது கோல் உயர்த்தியும் பெருமாள் கம்பீரமாக, உலகளந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இத்திருக்கோவிலில் உள்ள உலகளந்த பெருமாளின் பேருருவை கொண்டு திரிவிக்கிரம அவதார உலகளந்த பெருமாளின் திருமுக மண்டலம் சேவை செய்விக்கப்படுகிறது.
இத்திருக்கோவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு அருகிலும் அமைந்துள்ளது.
திருமழிசையாழ்வார் அருளிச்செய்த திவ்ய பிரபந்தம்
நன்றிருந்து யோகந்தி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்றிருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்றிருந்த மாடநீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்றிருந்து வெஃகணைக் கிடந்து என்ன நீர்மையே?
நின்றதெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதுமிருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.
- திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
- பிள்ளையார்பட்டி கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் விழா தொடக்கம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-13 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி மறுநாள் விடியற் காலை 4.38 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: திருவாதிரை இரவு 8.38 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று ஏகாதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். மூஷிக வாகனத்தில் பவனி. தேரழுந்தூர், திண்டுக்கல், தேவக்கோட்டையில், மிலட்டூர், பிள்ளையார்பட்டி கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் விழா தொடக்கம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-சுகம்
கடகம்-லாபம்
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-வரவு
துலாம்- நட்பு
விருச்சிகம்-செலவு
தனுசு- நிறைவு
மகரம்-பக்தி
கும்பம்-பண்பு
மீனம்-மாற்றம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்