என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொப்பரை கொள்முதல்"
- கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
- அரசு உத்தரவின்பேரில் வருகிற 26-ந் தேதி வரை கொள்முதல் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உடுமலை:
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையடிபாளையத்தில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. சாதாரண கொப்பரை கிலோ ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.117. 50-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் இலக்கு அளவான 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் நிறைவு பெற்றவுடன் கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்தநிலையில், அரசு உத்தரவின்பேரில் வருகிற 26-ந் தேதி வரை கொள்முதல் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெளிமார்க்கெட்டில் கொப்பரை கொள்முதல் விலை மிகவும் குறைவாக உள்ளதால் பதிவு செய்யப்படாத விவசாயிகளிடம் இருந்தும் அரசு கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், நேற்று கலெக்டர் அறிவுறுத்தல் படி தற்போது நடைபெற்று வரும் கொப்பரை கொள்முதலில் பதிவு செய்யாத விவசாயிகளும் புதிதாக பதிவு செய்து பயன்பெறலாம் என ஒழுங்குமுறை விற்பனைக்கூடமேற்பார்வையாளர் தமிழரசன் தெரிவித்தார்.
- அடுத்த மாதம் முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்
- தொகை விவசாயி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
ஈரோடு:
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் அடுத்த மாதம் முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு ஒன்றிய அரசின் விலை ஆதரவு திட்டத்தில் ஈரோடு விற்பனை குழுவின் கீழ் செயல்படும் அவல்பூந்துறை, பவானி, பூதப்பாடி, எழுமாத்தூர்,
கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, மைலம்பாடி, சத்தியமங்கலம், சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலும், வெப்பிலி துணை விற்பனை கூடத்திலும் கொப்பரை கொள்முதல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடக்க உள்ளது.
அரசு நிர்ணயிக்கும் தரத்தில் ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.108.60-க்கும், ஒரு கிலோ பந்து கொப்பரை, ரூ.117.50 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைக்கான தொகை விவசாயி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
விருப்பம் உள்ள விவசாயிகள், தங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முகப்பு, சிட்டா, அடங்கல் நகலுடன், ஈரோடு விற்பனை குழு தலைமை அலுவலகம் – 0424-2339102,
அவல்பூந்துறை – 0424-2331279, பவானி – 98946 26295, பூதப்பாடி – 0456-227070, எழுமாத்தூர் – 79040 62073, கோபி – 04285-222278, கவுந்தப்பாடி – 04256-298856,
கொடுமுடி – 04204-224297, மைலம்பாடி – 99425 06990, சத்தியமங்கலம் – 04295-233346, சிவகிரி -04204- 240380, வெப்பிலி துணை விற்பனை கூடம் 04294-220512 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மையம் அமைக்க பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்
- 4 கோடியே 96 லட்சத்து 14 ஆயிரத்து 150 ரூபாய் வர்த்தகம் நடைபெற உள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள், அன்னூர் தாலுகாவில் கொப்பரை கொள்முதல் மையம் அமைக்க பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று தமிழக அரசு அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை கொள்முதல் மையம் அமைக்க கடந்த மாதம் 3-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து ஜூன் 5-ந் தேதி முதல் இங்கு கொப்பரை கொள்முதல் தொடங்கியது. அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், சூலூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை விற்பனை செய்தனர்.
இந்த மையத்தில் 357 விவசாயிகள் 4,68,500 கிலோ கொப்பரையை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் 4 கோடியே 96 லட்சத்து 14 ஆயிரத்து 150 ரூபாய் வர்த்தகம் நடைபெற உள்ளது.
வெளிச்சந்தையில் ஒரு கிலோ கொப்பரை ரூ.80க்கு மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். ஆனால் அரசு ஒரு கிலோ கொப்பரை 105 ரூபாய் 90 காசுக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.தேங்காய் கொப்பரை கொள்முதலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்