search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் ஆய்வு"

    • உணவகங்கள், டிபன் கடைகள் தாபாக்களில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், டிபன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், டிபன் கடைகள் தாபாக்களில் தரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பரமத்தி வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்கரவேலு தலை மையிலான குழுவி னர், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தாபாக்கள், சைவ மற்றும் அசைவ உணவகங்கள், டிபன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது உணவகத்தில் வைத்திருந்த இறைச்சி, சமையல் எண்ணைய் மற்றும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த உணவு மாதிரி களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். உணவுப் பொருட்கள் தயாரிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது கண்டறி யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததுடன், இது தொடர்பாக உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது:-

    இங்கு செயல்படும் தாபாக்கள், டிபன் கடை கள் அனைத்திலும் மது அருந்த அனுமதியும், மது விற்பனையும் நடைபெறு கிறது. வெளி மாநில மதுபானங்கள் அதிக அளவில் விற்கப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் விரும்பி தாபாக்களுக்கு செல்கின்றனர்.

    தீபாவளி அன்று தாபாக்களில் விற்பனை செய்த உணவு பொருட்கள் தரமற்றதாக இருந்ததால் சிலர் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதேபோன்று தியேட்டர்களில் வழங்கப்ப டும் திண்பண்டங்களும் சுகாதாரமற்று இருக்கிறது. எனவே தியேட்டர்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர். 

    • ஏர்வாடி, கீழக்கரை தர்காவில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.
    • இந்த தர்கா தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு வக்பு வாரியதிற்கு பாத்தியமான 18 வாலிபர்கள் தர்காவை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த தர்கா தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது மீட்கப்பட்டது என்பது குறிப்பிட–த்தக்கது. தர்கா வளாகத்தில் தொழுகை கூடம் கட்டி தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அவர் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலத்தெரு உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்க தலைவரும் மற்றும் ஜமாத் தலைவருமான யூசுப் சாஹிப், பொருளாளர் ஹமீத் இப்ராஹிம், 18 வாலிபர்கள் சஹீத் கல்வி மற்றும் அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) தலைவர் ஜாஹிர் ஹுசைன், செயலாளர் ஷாஹுல் ஹமீது மற்றும் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரஹ்மான் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தர்காவில் மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் தலைமையில் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    தொடர்ந்து தர்கா அலுவலகத்தில் நிர்வாகி களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தர்கா சுற்றுச்சூழல் மற்றும் பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ஏர்வாடியில் உள்ள மனநல மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள வசதிகளை கேட்டறிந்தார். தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா, ஏர்வாடி குத்பா பள்ளி செயலாளர் ஹாஜி செய்யது ஹூசைன், நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் உடன் சென்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    • ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் விபரம் குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள, கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, பள்ளியில் அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

    மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறித்தும், ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் விபரம் குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    மேலும் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து கேட்டு, அந்த மாணவர்களின் பெற்றோரிடம் வகுப்பாசி–ரியர்கள் பேசினார்களா என்றும், ஏன் அவர்கள் வரவில்லை என்றும், அவர்களை பள்ளிக்கு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவரம் கேட்டார். பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்கள் தொடர்ந்து பள்ளிaக்கு வர தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    பின்னர், கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் பரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுடன் கலந்துரையாடி கல்வி தரத்தை ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து உயர்நிலை பள்ளி சத்துணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்க சமைக்கப்பட்ட சத்துணவினை கலெக்டர் சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் சத்துணவு மையத்தில் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு உணவு பொருட்களின் அளவு மற்றும் முட்டைகளின் எண்ணிக்கையை சரிபார்த்தார்.

    பின்னர், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், வரகூராம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கும் போது விரைந்து ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்க வேண்டுமென கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும், வரகூராம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    முன்னதாக திருச்செங்கோடு வட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மைய அலுவலகத்தை திறந்து வைத்து, மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, டேவிட் அமல்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெல்லம் தயாரிக்க பல்வேறு வகையான ரசாயனம் மற்றும் அஸ்கா கலப்பதாக நாமக்கல் கலெக்டருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் அனுப்பியிருந்தனர்.
    • கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெல்லம் தயாரிக்க பல்வேறு வகையான ரசாயனம் மற்றும் அஸ்கா கலப்பதாக நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் அனுப்பியிருந்தனர். இதை அடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் அலுவலர்கள் சிங்காரவேல், மனோகரன், கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    20-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலையில் ஆய்வு நடந்தது. அப்போது வெல்லத்தில் கலப்படம் செய்ய வைத்திருந்த சுமார் 10 மூட்டை அஸ்கா பறிமுதல் செய்தனர். மேலும் அஸ்கா கெமிக்கல் கலந்த 1050 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்தனர். 4 ஆலை கொட்டகைகளில் வெல்லம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர் .

    பின்னர் பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏல மார்க்கெட்டில் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கு மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும்ஆலைக் கொட்டகை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் பேசுகையில். வெல்லம் தயாரிக்க கலப்படத்தை தவிர்க்க வேண்டும். அஸ்கா மற்றும் கெமிக்கல் கொண்டு வெல்லம் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெல்லம் தயாரிக்கும் பணியில் அடுப்பு எரிக்கும் போது வேஸ்ட் துணி மற்றும் டயர்களை பயன்படுத்தக் கூடாது. அனைத்து ஆலைகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட வேண்டும். வெல்லம் தயாரிக்கும் ஊழியர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்றார்.

    • கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்டத்துக்குட்பட்ட அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு திடீரென வருகை புரிந்தார்.
    • நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஈரோடு:

    கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்டத்துக்குட்பட்ட அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு திடீரென வருகை புரிந்தார்.

    மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டு அறிந்தார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நீதிமன்றத்தில் சரியான நேரத்தில் நடக்க வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் வலியுறுத்தினார்.

    மேலும் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே நல்பெயரை வாங்கும் வகையில் நல்ல முறையில் பணி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சான்று பெற்ற விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என விசாரணை.
    • உரிய முறையில் பதிவேடுகள் பராமரிக்கவும், ராசயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கினார்.

    தருமபுரி,

    சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் வளர்மதி தருமபுரி வட்டாரத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது விதை விற்பனை நிலையங்களில் முறையான ஆவணங்களுடன் கூடிய நல்ல தரமான சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது விதை விற்பனை உரிமம் பெறப்பட்டுள்ளதா?உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, விற்பனை நிலையத்தின் முன் விதை விற்பனை பலகை உள்ளதா, அதில் விதை இருப்பு, விலை ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்கு தெளிவாக தெரியும்படி உள்ளதா எனவும், விதைகளின் கொள்முதல் பட்டியல், விதை பரிசோதனை அறிக்கை, பதிவுச்சான்று ஆகியவை உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பிறகு விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது விதை மாதிரிகளின் முளைப்புதிறன், பரிசோதனை, ஈரப்பத சோதனை, புறத்தூய்மை சோதனை மற்றும் பிறரக கலப்பு விதைகளை கண்டறியும் சோதனை முறைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். பிறகு நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள வெற்றிலைக்காரப் பள்ளம் கிராமத்தில் உள்ளள அங்ககப்பண்ணையை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அங்கக இடுபொருட்களான பஞ்ச காவியா, ஜீவாமிர்தம், இஞ்சி பூண்டு கரைசல், மீன்அமில கரைசல் ஆகியவற்றை முறையாக தயாரிப்பு செய்கிறார்களா என விவசாயிடம் கேட்டு அறிந்தார்.

    பிறகு அங்ககப் பண்ணையை மேற்பார்வையிட்டு உரிய முறையில் பதிவேடுகள் பராமரிக்கவும், ராசயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். விதை ஆய்வு துணை இயக்குநர்சங்கர், விதைப்பரிசோதனை அலுவலர் அருணா, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சிவசங்கரி,விதை ஆய்வாளர்கள், விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர் விதைப்பரிசோதனை நிலையம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • விக்கிரவாண்டிபேரூராட்சியில் புதிய வரிவிதிப்பு உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
    • அனைத்து கடை ,மற்றும் வீடுகளை அளவீடு செய்து வரி விதிப்பு கணக்கீடு செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி பேரூராட்சியில் தமிழக அரசின் புதிய வரி விதிப்பு அமல்படுத்த அனைத்து கடை ,மற்றும் வீடுகளை அளவீடு செய்து வரி விதிப்பு கணக்கீடு செய்து வருகின்றனர். இந்த பணியை கடலுார் மண்டலபேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் திடீர் ஆய்வு செய்து அளவீடுகளையும், வரிகளையும்சரிபார்த்தார். ஆய்வின்போது பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் சலாம், செயல் அலுவலர் அண்ணாதுரை , இளநிலை உதவியாளர் ராஜேஷ்,வரி தண்டலர்கள் தண்டபாணி,ஜெயசீலி,கலைவாணி , துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன்,மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

    ×