என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் கூட்டம்"

    • திருப்பதியில் நேற்று 72,923 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதனால் திருப்பதியில் கட்டுக்கடங்காத அளவு கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று காலை வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. காத்திருப்பு அறைகளை தாண்டி எம்.பி.சி வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால்,காபி உள்ளிட்டவை வழங்கினர்.

    ஏழுமலையான் கோவில் நுழைவு வாயில் வரை சில பக்தர்கள் செருப்பு அணிந்து வந்தனர். இதனை தடுக்க தவறிய பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேரை திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்டு செய்தது.

    மேலும் திருப்பதி மலையில் குறிப்பிட்ட சில இடங்களில் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் ஏழுமலையான் கோவில் பாரம்பரியத்தை காப்பாற்ற ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று சென்னையை சேர்ந்த 13 பக்தர்கள் காரில் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    மீண்டும் காரில் மலை பாதையில் சென்று கொண்டு இருந்தனர். முதல் வளைவில் வந்தபோது கார் கட்டுப்பாட்டில் இருந்து தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரில் வந்த 6 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 72,923 பேர் தரிசனம் செய்தனர். 35,571 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
    • கோவில் திருப்பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடித்து ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.

    நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி இணையாக சாமி தரிசனம் செய்யயும் வகையில் மெகா திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பணிகள் முடிந்து பக்தர்கள் தங்கும் விடுதி, இரண்டாம் கட்டமாக பக்தர்கள் காத்திருக்கும் அறை, அலுவலக கட்டிடம் கலையரங்கம் என முடிவுற்ற பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

    அடுத்த கட்டமாக கோவில் திருப்பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடித்து ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் திடீரென மயக்கம் அடைந்தாலோ அல்லது ஏதேனும் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேற அவசர கால வழி அமைக்கப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் தற்போது பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருவதால் நாழிக்கிணறு வாகன நிறுத்தம் தற்காலிகமாக நாளை 31-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக பக்தர்கள் வாகனங்கள் டி.பி. ரோட்டில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதாலும், பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியாலும் பக்தர்கள் வாகனங்கள் தெப்பக்குளம் அருகிலும், தாலுகா அலுவலகம் அருகிலும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் நகர எல்லைக்குள் வாகன நெருக்கடி காணப்பட்டது.

    • தரிசனத்திற்கு 2 மணி நேரம் காத்திருந்தனர்
    • வெளிநாட்டு பக்தர்களும் ஏராளமானோர் வந்திருந்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்களின் வருகையால் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
    • போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கியது.

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

    தைப்பூசத்தையொட்டி நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்து.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதுதவிர காவடி ஆட்டம், பால்குட ஊர்வலமும் நடந்தது.

    நேற்றே மருதலையில் தைப்பூச தேரோட்ட திருவிழா முடிந்தாலும், இன்று தைப்பூச தினம் என்பதால், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக மருதமலை முருகன் கோவிலுக்கு வந்தனர்.

    மருதமலை செல்லும் சாலையில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்றனர்.

    அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பாத யாத்தி ரையாக வந்த முருக பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் மலைப்படிக்கட்டுகள் வழியாக, மலைகோவிலுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதுதவிர பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குட ஊர்வலமாகவும் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணதிரச் செய்தது.

    நேற்றை விட இன்று அதிகமான கூட்டம் காணப்பட்டது. மலைப்ப டிக்கட்டுகளிலும், மலைப்பா தையிலும் பக்தர்களாகவே காணப்பட்டனர். மலையடி வாரப்பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இதன்காரணமாக அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டி உள்ளது.

    அன்னூர் குமரன்குன்று சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் அழைத்தலும், கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு ஆடை மற்றும் மாலை வழங்குதல், அபிஷேக பூஜையும் நடந்தது.

    இன்று காலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை 7.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் மடாதிபதிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி

    யேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை வள்ளியம்மை திருக்கல்யாணமும், இரவில் யானை வாகன காட்சி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.

    இன்று காலை சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பரி வேட்டை நிகழ்ச்சியும், நாளை மறுநாள் ஒயிலாட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
    • மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சமீப நாட்களாக அனைத்து நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று தாிசனம் செய்தனர். மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர்.

    புதுச்சேரி:

    கோடை விடுமுறையை யொட்டி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கி ழமை தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற டிசம்பர் 20-ந்தேதி மாலை 5.20-க்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற வுள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்நிலையில் பள்ளி களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள தாலும் சனிக்கிழமை என்பதாலும், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர்.  நேற்று அதிகாலை 4.30 மணி முதல் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும் திரளான பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். கோடை வெயில் அதிக மாக உள்ளதால் பக்தர்கள் வெயிலை சமாளிக்க, நளன் குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • படிப்பூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர்.
    • மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பழனி:

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும் முருகபெருமானின் 3ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    மேலும் நாளை (26ந் தேதி) பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருமஞ்சணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். படிப்பூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர். இது நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

    இதுமட்டுமின்றி மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலுக்கு முருகனை தரிசிக்க அதிகாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்காேராடு, கிரி வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்தபின்பு ஊருக்கு திரும்புவதற்காக பக்தர்கள் பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

    • கொழுக்கட்டை, கூழ் படைத்து வழிபட்டனர்
    • பல்வேறு இடங்களில் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.

    நாகர்கோவில், ஜூலை.22-

    ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கை கூடும் என்பது ஐதீகம். அம்மன் பிறந்த நாளை ஆடிப்பூர விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

    இன்று ஆடிப்பூர விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத் தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூ ரத்தையொட்டி இன்று காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.கோவில்களில் பெண் கள் கூழ் படைத்தும், கொழுக்கட்டை அவிழ்த்து படைத்தும் வழிபாடு செய்தனர். பல்வேறு இடங்களில் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.

    நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் இன்று காலையில் நடை திறக்கப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு காலையி லேயே பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

    அவ்வையார் அம்மன் கோவிலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் வந்து வழிபட்டு சென்றனர். கொழுக்கட்டை, கூழ் படைத்து வழிபட்டனர்.

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு அம்மன் கோவிலில் இன்று காலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் கூழ் படைத்து வழிபாடு செய்தனர். அம்மன் கோவிலில் அன்ன தானமும் வழங்கப்பட்டது

    • மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது.
    • கூட்டம் காரணமாக பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    அறுடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கி ன்றனர். நேர்த்திக்க டனாக முடி காணிக்கை செலுத்தி மயில்காவடி, தீர்த்தகாவடி எடுத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருவிழா காலங்கள், பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் இருந்தது. கூட்டம் காரணமாக பொது, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதானக்கூடம் ஆகிய இடங்களில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழிகளான படிப்பாதை, யானைப்பாதை வழியாகவும் மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் பக்தர்கள் கூட்டம் இருந்தது.

    பழனிக்கு வெளியூர் பக்தர்கள் கார், வேன்களில் அதிகமாக வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோடு, கிரிவீதி, பூங்காரோடு, அய்யம்புள்ளிரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரங்களில் கார்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    சாமி தரிசனம் செய்த பின்பு சொந்த ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

    ராமேசுவரம்

    உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள அக்னீதீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக விசேஷ, விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி விடுமுறை நாளான இன்று அதிகாலையில் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி-பர்வத வர்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரத்தில் கோவில், ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ராமேசுவரத்திற்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன. கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தனுஷ்கோடி சென்று உற்சாகமாக கடற்கரையில் பொழுதை கழித்தனர்.

    மேலும் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மணிமண்ட பத்தையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

    • வாரவிடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    • கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும் முருகபெருமானின் 3ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமு கூர்த்தம், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    அந்த வகையில் வாரவிடுமு றையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர்.

    குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், தொழிலில் முன்னேற்றம் காணவும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலை க்கோவிலுக்கு முருகனை தரிசிக்க அதிகாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்தனர். இதனால் அடிவாரம் ரோடு, பூங்காேராடு, கிரி வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்தபின்பு ஊருக்கு திரும்புவதற்காக பக்தர்கள் பழனி பஸ் நிலை யத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • நாகர்.சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர்
    • ஆவணி முதல் ஞாயிறு

    நாகர்கோவில் :

    நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது. இங்கு பக்தர்கள் தோஷங்கள் நீங்கவும் திருமணங்கள் கைகூடவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமை களில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணங்கள் கைகூடும். தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழ மை வருகிறது. முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமை யான இன்று (20-ந் தேதி) காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட் டது. இதை தொடர்ந்து நாகராஜருக்கு தீபாரா தனையும் அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராள மான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்தனர். குறிப்பாக பெண் கள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது. இத னால் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கோவில் வளா கத்தை விட்டு வெளியே வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பக்தர் கள் காத்திருந்தனர். நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவ தும் இன்று பக்தர்கள் தலையாகவே காட்சி யளித்தது. பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர். கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு அன்னதான மும் வழங்கப் பட்டது. கோவிலில் கூட்டம் அலை மோதியதையடுத்து இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந் தது. நாகராஜா கோவில் மைதானத்தில் பக்தர்கள் இருசக்கர வாகனங்களை யும் 4 சக்கர வாகனங்களை யும் நிறுத்தி சென்று இருந்த னர்.

    மேலும் பக்தர்களுக்கு வசதியாக பால் மற்றும் மஞ்சள் பொடிகள் கோவில் வாசலிலும் நாக ராஜா திடல் பகுதியில் உள்ள சாலை ஒரங்களிலும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக கோவில் நடை 12 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடை சாத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டத்தில் இருந்து மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை யடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடு பட்டனர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    ×