search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகமலை அருவி"

    • மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது.
    • வனத்துறையினர் அருவியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது.

    அதன் காரணமாக கடந்த வாரம் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.

    இதனால் அருவிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் தற்போது மழை அளவு குறைந்துள்ளது. அதனால் அருவியில் நீர்வரத்து சீரானது.

    இதையடுத்து நேற்று முதல் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அருவியில் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்ததால் மயிலாடும்பாறை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல மேகமலை வனத்துறையினரும் அருவியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தேனி மாவட்டம் மேகமலை அருவியில் ஆடிப்பிறப்பை முன்னிட்டு மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
    • ஆடி பிறப்பு, அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

    வருசநாடு:

    ஆடிப்பிறப்பை முன்னிட்டு மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்ததால் கூட்டம் அலைமோதியது.

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் இருந்து 15கிமீ. தூரத்தில் மேகமலை அமைந்துள்ளது. மேகமலையில்இருந்து வரும் மழை மற்றும் ஊற்றுநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது. பொதுவாக இந்த மாதம் நீர்வரத்து இருப்பதில்லை. ஆனால் மேகமலையில் பெய்து வரும் மழையினால் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    வனப்பகுதியில் அமை ந்துள்ள இந்த அருவிக்கு ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாபயணி கள் அதிகளவில் வருவது வழக்கம்.

    நேற்று ஆடிப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் அருவிக்கு வந்து நீராடினர். இதனால் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. தலை ஆடிக்கு விருந்துக்கு அழைக்கப்பட்ட புதுமண தம்பதியினரும் அருவியில் நீராடி ஆனந்தமாக பொழுதை கழித்து சென்ற னர். இருப்பினும் பெண்கள் தனியே குளிக்கும் வசதி இல்லாததால் சிரமப்ப–ட்டனர். மேலும் உடை மாற்றும் அறையும் இல்லை.

    இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், குளிப்பதற்காக வனத்துறை சார்பில் ரூ.30 கட்டணம் பெறப்படுகிறது. ஆனால் உரிய வசதி இல்லை. வனத்துறையினரும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிப்பதில்லை. ஆடி மாதத்தில் கிராமங்களில் இறைச்சி விருந்து, புதுமணத்தம்பதியர் அழைப்பு என்று களை–கட்டும். எனவேஇம்மாதம் முழுவதும் அருவிக்கு வர பலரும் ஆர்வம் காட்டுவர். எனவே பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.

    ×