என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உள்ளிருப்பு போராட்டம்"
- 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
- 6 மணி நேரம் நடந்ததால் பரபரப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே சின்னவயரிகம் ஊராட்சியில் தனியார் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கடந்த 2 மாதம் சம்பளம் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
உள்ளிருப்பு போராட்டம்
இதே உரிமையாளர் நடத்தி வரும் விண்ண மங்கலம் ஊராட்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் கொட்டும் மழையிலும் கடந்த வாரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது 10-ந்தேதிக்கு பிறகு நிலுவையில் உள்ள சம்பளப் பணம் பி.எப், இ.எஸ்.ஐ. மற்றும் ஊழியர்களின் கோரிக்கை யை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலா ளர்கள் உள்ளிருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 11 மணிக்கு உமராபாத் போலீசார் மற்றும் கம்பெனி நிர்வாகம் தொழிலாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்று காலை அனைத்து கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும் என எழுத்து மூலம் தெரிவித்தனர்.
இதையடுத்து 6 மணிநேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்த சென்றனர்.
- 3 வார்டுகளிலும் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் மறுப்பதாக கூறப்படுகிறது
- அ.தி.மு.க. கவுன்சிலர்களான 3 பேரும் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 11 வார்டுகளில் தி.மு.க.வும் ஒரு வார்டில் சுயேச்சையும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது. இதில் 10-வது வார்டில் தேன்மொழி, 14-வது வார்டில் அறிவழகன் 15-வது வார்டில் மருதமுத்து ஆகிய 3 பேரும் அ.தி.மு.க. கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த 3 வார்டுகளிலும் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் மறுப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்களான 3 பேரும் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.
- பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு நிதி எதுவும் வழங்கப்படவில்லை
- வளர்ச்சி பணிகளுக்கு ஒரு பேரூராட்சிக்கு ரூ.10 லட்சத்தை எந்த நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 51 பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு நிதி எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பல்வேறு பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகி றார்கள்.
இந்த நிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பேரூராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் உதவி இயக்குனரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தல் முடிந்து பேரூராட்சி தலைவர் பொறுப்பேற்று 5 மாதங்களாகியும் பேரூராட்சி பகுதிகளுக்கு மக்கள் பணிகள் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே வளர்ச்சி பணிகளுக்கு ஒரு பேரூராட்சிக்கு உடனடியாக ரூ.10 லட்சத்தை எந்த நிபந்தனையும் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பேரூராட்சி பெண் தலைவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்