என் மலர்
நீங்கள் தேடியது "வாந்தி"
- ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் தான் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகம் சென்று சோதனை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பலருக்கும் உடல் நலக்குறைவும், உயிர்ப்பலியும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கேரளாவில் துரித உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஓட்டல் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இந்நிலையில் திருவனந்தபுரம் கிளிப்பாலம், கரமன், அட்டுக்கல், மணக்காடு, கமலேஸ்வரம், ஸ்ரீவராகம் மற்றும் பேட்டா பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இவர்கள் அட்டக்குளங்கரா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் தான் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகம் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த உணவுகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- கன்னியாகுமரியில் கொட்டாரம் , நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள 3 மேல்நிலைப்பள்ளிகளுக்கு என்.சி.சி. முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கொட்டாரம் , நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள 3 மேல்நிலைப்பள்ளிகளுக்கு என்.சி.சி. முகாம் நடை பெற்றது.
முகாமில் இந்த பள்ளி களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்டவர்களில் சுமார் 43 பேர் வாந்தி, மயக்கம் எடுத்தனர். இதனால் அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 13 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளிடம் ஆறுதல் கூறினார். அப்போது அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை தினேஷ்உள்பட பலர் உடனிருந்தனர்.
- வாந்தி, வயிற்று வலி, மயக்கம் இருந்ததாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
- இச்சம்பவம் குறித்து அந்தியூர் தாசில்தார் மற்றும் பவானி டி.எஸ்பி. தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகே கரட்டூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 157 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
தலைமையாசிரியர் விஜயலட்சுமி உள்பட 5 ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். கரட்டூர் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் சமையலராக கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 132 மாணவ-மாணவிகள் நேற்று வழக்கம் போல 12 மணிக்கு மதிய உணவு சாப்பிட சென்றனர். வெஜிடபிள் சாப்பாடு மதிய உணவாக சமைக்கப்பட்டது.
அப்போது ஒரு சில மாணவிகள் உணவில் ஏதோ கிடப்பதாக எடுத்து வந்து சமையலர் வள்ளியம்மாளிடம் கொடுத்த போது மீதி உள்ள உணவை யாரும் சாப்பிட வேண்டாம் என்று அவர் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய ஒரு சில மாணவ, மாணவிகள் மதிய உணவில் பல்லி கிடந்ததாக அவரவர் வீட்டில் பேசி வரும் போது வாந்தி, மயக்கம் வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு சில பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் அத்தாணி கருவல்வாடிபுதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இத்தகவல் பரவிய நிலையில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் கருவல்வாடிபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை அழைத்து சென்னர்.
இதைத்தொடர்ந்து வாந்தி, வயிற்று வலி, மயக்கம் இருந்ததாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் 29 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இத்தகவலறிந்த அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்ததோடு, குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அந்தியூர் தாசில்தார் மற்றும் பவானி டி.எஸ்பி. தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள பயன்படுத்தப்படும் தண்ணீர் மற்றும் மதிய உணவுகளின் மாதிரிகளை எடுத்து இந்த உணவில் விஷத்தன்மை கலந்து உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் கோவையில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக ஆப்பக்கூடல் போலீசார் தெரிவித்தனர்.
பரிசோதனைக்கு பின்னரே மதிய உணவில் பல்லி விழுந்து விஷம் கலந்து இருக்குமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்று தெரியவரும்.
- கிச்சைக்காக சேர்க்கப்பட்ட 15 மாணவர்களில் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர்.
- அரசு பள்ளியில் தாசில்தார், மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 460 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று பள்ளியில் பணியில் இருந்த சத்துணவு அமைப்பாளர் கோசலை மற்றும் உதவியாளர்கள் அருக்காணி, கிருஷ்ண வேணி ஆகியோர் மதிய உணவாக சாதம், சாம்பார், முட்டை ஆகியவை தயார் செய்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கு வருகை தந்த 260 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
மதியம் 1.30 மணிக்கு மதிய உணவு சாப்பிட்ட 8-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய் (வயது13), அபிநவ் (13), 7-ம் வகுப்பு படிக்கும் சபீர் அகமது (12), கவின் பிரசாத் (12), ஜீவா(12), மாடசாமி (12), லோகேஷ் (12), கிஷோர் (12), சுந்தரேசன் (12), முகமது சமீர் (12), ஈஸ்வரன் (12), 6-ம் வகுப்பு படிக்கும் தினேஷ் (12), அஸ்வின் (11),செய்யது அகமது (11), ரித்தீஷ் (11) ஆகிய 15 மாணவர்களுக்கு வயிற்று போக்குடன் வாந்தி ஏற்பட்டது.
வாந்தி எடுத்தவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தர்மராஜ் ஆசிரியர்கள் உதவியுடன் மீட்டு ஆட்ேடாவில் கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். வாந்தி எடுத்த மாணவர்களின் லோகேஷ், சபீர் அகமது, முகமது சபீர் ஆகியோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் கிடைத்ததும் வால்பாறை டி.எஸ்.பி. கீர்த்திவாசன், ஆனைமலை தாசில்தார் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் முருகேஷ் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவர்களை சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 15 மாணவர்களில் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர். 3 மாணவர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை தாசில்தார் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் முருகேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் குருசாமிபாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி உள்ளனர்.
நேற்று 24 மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தனர். இவர்களுக்கு காலையில் முள்ளங்கி சாம்பார் சாதம் போடப்பட்டு உள்ளது. இதனை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
இந்த நிலையில், விடுதியில் சாப்பிட்டு சென்ற மாணவர்களில் சிலருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட 9 மாணவர்களை பிள்ளால்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பிள்ளா நல்லூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தவசீலன் தலைமையில் விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்கள் மற்றும் பள்ளிக்குச் சென்றிருந்த மாணவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
கெட்டுப்போன உணவு காரணமாக மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டி ருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே தரமற்ற உணவு வழங்கியதால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர்.
இதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆதிதிரா விடர் நல அதிகாரி சுகந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்த்து நலம் விசாரித்தார். மேலும் அவர் விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சிகிச்சை பெரும் மாணவர் களை சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதேபோல் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் டாக்டர் சரோஜா, மாணவர்களை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். மேலும் பிஸ்கட், பழங்கள் கொடுத்து நலம் விசாரித்தார். அவர் மாணவர்கள் தங்கி இருந்த விடுதிக்குச் சென்று அவர்களுக்கு வழங்கப்படும் உணவு போன்றவற்றை பரிசோதித்தார். ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வேம்பு சேகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் தனபால், ராமசாமி ஆகியோரும் சென்று நலம் விசாரித்தனர்.
- உடல்நலம் பாதிக்கப்பட்ட 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- இந்த ஓட்டலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே பிரபல தனியார் ஓட்டலில் கடந்த 13-ஆம் தேதி மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 27) தனது குடும்பத்துடன் கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு இரவு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் ஓட்டலில் சாப்பிட்ட 4 பேரும் வாந்தி வயிற்றுப்போக்கால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உடனடியாக 4 பேரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மோகன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள ஓட்டலுக்கு நேரில் சென்று விசாரித்துவிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஓட்டலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் சைவம் மற்றும் அசைவ ஓட்டல்கள் உள்ளன பெரும்பாலான ஓட்டல்களில் தரமான உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி வந்து நேரில் ஆய்வு செய்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
- கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிட நலப் பள்ளியில் சரியில்லாத உணவை மாணவ மாணவிகளுக்கு கொடுத்ததால் வாந்தி, மயக்கம்
- பாதிக்கப்பட்ட மாணவர்களை எம்எல்ஏ கண்ணன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் மதிய உணவு புளி சாதம் முட்டை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 32 மாணவிகள் 30 மாணவர்களும் பயின்று வருகின்றனர் இவர்களில் 55பேர் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.வழக்கம்போல் இன்று மதிய உணவு சமைப்பதற்கு தயார் செய்தபோது அரிசி சரியில்லை என்று சமையல் செய்பவர் தலைமை ஆசிரியர் புஷ்பவல்லியிடம் தெரிவித்தனர். பரவாயில்லை நாளை பார்த்துக் கொள்ளலாம் அதை சமையல் செய்து மாணவர்களுக்கு கொடுங்கள் எனக் கூறியதாக தெரியவந்துள்ளது. மதியம் மாணவர்களுக்கு புளி சாதமும் முட்டையும் வழங்கப்பட்டன. சத்துணவு அமைப்பாளர் இளமதி சமையலர் சரஸ்வதியும் சமையல் உதவியாளர் சபிதாவும் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கினர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சாப்பிட்ட சில மணி நேரத்தில் திடீரென்று வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார் உடனடியாக ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் வாந்தி மயக்கம் எடுத்துள்ளனர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து அதில் 25 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம் தாசில்தார் துறை மற்றும் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்று தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் கதறி அழுவது பெரும் சோகத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
- நீங்கள் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறீர்களா?
- அதிகமாக தண்ணீர் பருகினால் `ஹைபோநெட்ரீமியா’ பிரச்சினை ஏற்படும்.
மழைக்காலம் தொடங்கி விட்டால் பலரும் தண்ணீர் பருகுவதை தவிர்த்துவிடுவார்கள். இதற்கு விதிவிலக்காக பசி உணர்வை கட்டுப்படுத்துவதற்காக தண்ணீர் பருகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குறைவான அளவில் பருகுவதாக நினைத்து அடிக்கடி பருகிக்கொண்டிருப்பார்கள்.
சிலரோ குறைந்த பட்சம் 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்தில் சாப்பிடும் பொருட்கள் மற்றும் உணவில் தண்ணீர் கலந்திருப்பதை உணராமல் தண்ணீரை அதிகமாக குடிக்கிறார்கள். இதனால் அதிக நீரிழப்பு ஏற்படக்கூடும். பக்க விளைவுகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். அதிக அளவு தண்ணீர் பருகுவதை உணர்த்தும் 6 அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.
1. சிறுநீரின் நிறம்
நீங்கள் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறீர்களா? என்பதை கண்டறியும் சிறந்த வழிகளுள் ஒன்று, சிறுநீரின் நிறத்தை கண்காணிப்பதாகும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது மோசமான அறிகுறியாகும். அதாவது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதனை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருகிவர வேண்டும். சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவதே சரியானது. அது உடலில் நீர்ச்சத்து உகந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டும். ஆனால் சிறுநீர் வெள்ளை நிறத்தில் இருந்தால் அதிக நீரிழப்பு ஏற்படுவதாக அர்த்தம். அதாவது தண்ணீர் உட்கொள்ளும் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருகும்போது இந்த பிரச்சினை எட்டிப்பார்க்கும்.
2. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
நீர் உட்கொள்ளல் அளவு அதிகரிக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்கும் அவஸ்தையை அனுபவிக்க நேரிடும். ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்கலாம். ஆனால் 10 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேர்ந்தால் உடலுக்கு தேவையானதை விட அதிகமாக தண்ணீர் பருகுகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தால் அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
3. சோர்வு
அதிகமாக தண்ணீர் பருகினால் `ஹைபோநெட்ரீமியா' பிரச்சினை ஏற்படும். இது ரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருப்பதன் அறிகுறியாகும். மேலும் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படுவதையும் வெளிக்காட்டும். அதிக அளவு நீர் பருகும்போது உடல் ஆற்றல் திறன் குறையும். மயக்கம், சோர்வு போன்ற பிரச்சினைகளும் தலைதூக்கும்.
4. வீக்கம்
உடலின் எலக்ட்ரோலைட் சம நிலையை பராமரிக்க நீர் உதவும். எலக்ட்ரோலைட்டுகள்தான் உடலின் ஆற்றல் மட்டத்தை உயர்த்த உதவுகின்றன. தண்ணீர் அதிகமாக குடிக்கும்போது, இந்த சமநிலை மாறுபடும். எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ளும்போது கைகள், கால்கள் அல்லது உதடுகளில் வீக்கம் ஏற்படலாம். ஹைபோநெட்ரீமியா பாதிப்பையும் உணரலாம்.
5. தலைவலி, குமட்டல்
உடலில் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள சோடியம் அளவை குறைத்து, ஹைபோநெட்ரீமியா நிலைக்கு வழிவகுப்பதோடு மூளையின் செயல்திறனில் குறைபாடு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற அறிகுறிகளும் தென்படும். குறிப்பாக தலைவலியை புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் அது அதிக நீரிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
6. தசை பலவீனம்
அதிகப்படியான தண்ணீரைக் குடிப்பதால் எலக்ட்ரோலைட் அளவு குறையும் போது, உடல் சமநிலை மாறுபடும். உடல் சோர்வை அனுபவிப்பதுடன் கை, கால்களில் நடுக்கம் மற்றும் வலியை உணரலாம். தசை பிடிப்பும் உண்டாகலாம். இதுவும் அதிகப்படியான நீரிழப்பின் அறிகுறியாகும். பெண்கள் உடலில் நீர்ச்சத்தை பேணுவது அவசியமானது. அதேவேளையில் எதையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
- ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர்.
- பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது.
நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர் ஆகும். இது நமது வயிற்றில் வலது மேல் பகுதியில் இருக்கும் கல்லீரலில் உருவாகி, அதன் அடியிலுள்ள பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது, நாம் சாப்பிடும் உணவிலுள்ள கொழுப்பை உடைத்து, நுண் கொழுப்புப் பொருளாக மாற்றி, பின்னர் உடலிலுள்ள பலவிதமான உயிரணுக்களுக்கும் தேவைப்படும் சக்தியாக மாற்றி அளிக்கிறது.
பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது. அப்படி இல்லை என்றால், வாந்தி, குமட்டல், தலைசுற்றல், அஜீரணம், ஏப்பம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ரசாயனப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பது, சுத்தமில்லாத எண்ணெய்யில் பொரித்த, வறுத்த, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சில மருத்துவ ரீதியான நோய்களின் போதும் பித்த வாந்தி வருவதுண்டு.

பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் வாந்தி இருந்தால், அது பித்தநீர் கலந்த வாந்தி தான். பித்த நீர் அதிகமாக சுரக்கிறது என்றால், மேல் வயிற்றில் வலி இருக்கும். நெஞ்செரிச்சல் இருக்கும். நாக்கு கசக்கும். வாந்தி வருகிற மாதிரி இருக்கும். இருமல் இருக்கும். திடீரென்று உடல் எடை குறைந்துவிடும்.
நீங்கள் சாப்பிட்ட உணவில் அதிக அளவில் கொழுப்பு இருந்தால் உங்களது கல்லீரலில் பித்த நீரும் அதிக அளவில் சுரக்கும். இது பித்த அமில நீராகி உங்களது குடலுக்குள் செல்லும். இது உடலுக்கு நல்ல தல்ல.
பித்த அமில நீர் அதிகமான அளவில் சுரக்காமல் இருக்க...
* கொஞ்சம் கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிட வேண்டும்.
* சாப்பிட்டவுடன் சுமார் அரை மணி நேரமாவது சாயாமல் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும், படுக்கவும் கூடாது.
* கொழுப்பு சத்துள்ள உணவுகள் வயிற்றுப் பிரச்சினையை உருவாக்கக் கூடிய உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* மதுப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.
* அளவுக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
* படுக்கையின் தலைப்பகுதி சற்று தூக்கலாக இருக்க வேண்டும்.
* நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், வெண்ணெய், எண்ணெய் அதிக அளவில் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.
- கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை 1 முதல் 2 இஞ்சிச்சாறில் எடுக்க வேண்டும்.
- தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.
வெர்டிகோ என்பது இயக்கம் அல்லது சுழலும் உணர்வு. இது பெரும்பாலும் தலைச்சுற்றல் என்று விவரிக்கப்படுகிறது. வெர்டிகோ பிரச்சினை உள்ளவர்களுக்கு தலைசுற்றல், குமட்டல் அல்லது வாந்தி, பார்வை மங்கல், நடை தளர்வு போன்றவை இருக்கும். இது நபருக்கு நபர் வேறுபடும். இந்த நோய்க்கான காரணங்கள் வருமாறு:

1) ப்ராக்ஸிமல் பொசிஷனல் வெர்டிகோ:
இந்த நிலையில் சுழல்வது அல்லது நகர்வது போன்ற தவறான உணர்வை ஏற்படுத்துகிறது. இது தலையின் இயக்கத்தில் ஏற்படும் விரைவான மாற்றத்தால் தூண்டப்படுகின்றன, அதாவது படுக்கையில் திரும்பும் போது, உட்காரும்போது அல்லது தலையில் அடிபடுவது இந்த வெர்டிகோவிற்கு மிகவும் பொதுவான காரணமாகும்.
2) வெஸ்டிபுலர் நியூரைடிஸ்:
வெஸ்டிபுலர் நரம்பில் ஏற்படும் வைரஸ் தொற்றின் போது, தீவிரமான வெர்டிகோ நிலையை ஏற்படுத்தும்.

3) மெனியர் நோய்:
உள் காதில் அதிகப்படியான திரவம் நிரம்புவதால் இந்த நோய் வருகிறது. இது பல மணிநேரம் நீடிக்கும், தலைசுற்றல், காது கேளாமை, காதில் ஒலித்தல், காது இரைச்சல் போன்றவை காணப்படும்.

4) மைக்ரேன்:
ஒற்றைத் தலைவலி எனப்படும் இந்த பாதிப்பு உள்ள நபர்களுக்கு வெர்டிகோ அல்லது பிற வகையான தலைச்சுற்றல் சில நேரங்களில் ஏற்படும். இது சில நிமிடங்கள் முதல் மணிநேரம் வரை நீடிக்கும்.

5) மூளையில் ஏற்படும் கட்டிகள், ரத்த அழுத்தம் குறைதல், ரத்த சர்க்கரை அளவு குறைதல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு போன்ற நிலைகளிலும் தலைசுற்றல் ஏற்படும். இதை வெர்டிகோ பாதிப்பில் இருந்து வேறுபடுத்த வேண்டும்.
சித்த மருத்துவம்:
1) துளசிச் சூரணம் ஒரு கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி. ஆகியவற்றை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட வேண்டும்.
2) கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை 1 முதல் 2 இஞ்சிச்சாறில் எடுக்க வேண்டும்.
3) ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மல்லி விதை, மிளகு, கருப்பட்டி சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
4) தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.
5) கிராம்பு 1, அன்னாசிப்பூ 1, இஞ்சி, எலுமிச்சை இவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாக காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
6) படுக்கையை விட்டு திடீரென எழும்பக் கூடாது.
- மில்க் ஷேக் கசப்பாக இருந்ததால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சோதித்துள்ளனர்.
- அப்போது அதில் அழுகிய நிலையில் கிடந்த பல்லி இருந்துள்ளது.
சென்னை முகப்பேரில் பிரபல நிறுவனத்தின் மில்க் ஷேக் பாக்கெட்டில் அழுகிய நிலையில் கிடந்த பல்லி இருந்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகப்பேரில் வசித்து வரும் யுவராஜ் - பூங்கோதை தம்பதிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் இவரது மகளுக்காக யுவராஜ் மில்க் ஷேக் வாங்கி வந்துள்ளார்.
அந்த மில்க் ஷேக் கசப்பாக இருந்ததால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சோதித்துள்ளனர். அப்போது அதில் அழுகிய நிலையில் கிடந்த பல்லி இருந்துள்ளதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து மில்க் ஷேக் வாங்கிய சூப்பர் மார்க்கெட்டில் சென்று யுவராஜ் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்கவிலை.
பின்னர் சிறிது நேரத்தில் மில்க் ஷேக்கை குடித்த கல்லூரி மாணவிக்கும் அவருடைய தம்பிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மில்க் ஷேக்கை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட், தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், மில்க் ஷேக் பாக்கெட்டின் உள்ளே பல்லி அழுகிய நிலையில் கிடந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.
- ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை.
உணவை உணவாக சாப்பிட்டாலும் சரி, மருந்தாக பயன்படுத்தினாலும் சரி, முதலில் நாம் கவனிக்க வேண்டிய்து அளவு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.
தினசரி நாம் சாப்பிடும் சாதாரண உணவுகளை நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும். சரி... அளவு என்பதை யார் நிர்ணயிப்பது?
ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி உடலுக்கு என்னென்ன சத்துக்கள் தேவைப்படுகின்றன என்பதையும், அந்த சத்துக்கள் எந்த அளவு தேவை என்பதையும் சராசரி கணக்கு மூலம் அறிவிக்கிறது.

உதாரணமாக இன்று காலை நாம் சாப்பிட்ட அளவும், மதியம் சாப்பிடுகிற அளவும் ஒன்றாக இருக்குமா, அதாவது இன்று காலை இரண்டு இட்லி சாப்பிட்டால், மறுநாள் காலையும் அதே அளவு தான் சாப்பிட வேண்டும்.
சரி சாப்பாடு போதும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? புரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஒன்று பசி அடங்கிவிடுவது, இன்னொன்று சாப்பிடும் போது ருசியும் மறைந்து போகும். இந்த அடையாளங்கள் தோன்றினால் வயிறு நிறைந்துவிட்டது என்று அர்த்தம்.
நம் உடல் தன்னுடைய தேவையையும், செரிக்கும் தன்மையையும் பொறுத்துதான் நம்முடைய பசியையும், அதன் அளவையும் தீர்மானிக்கிறது. அந்த அளவைப் பின்பற்றினால் வயிறு கனமான உணர்வு ஏற்படாது. சாப்பிட்டபின் களைப்பு ஏற்படாது. முன்னிலும் சுறுசுறுப்பாக நம் வேலைகளைத் தொடர முடியும்.

ஃபுட் பாய்சன் ஏற்பட காரணம்:
நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும் தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள். ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல், சமைத்த உணவை முறையாகப் பதப்படுத்தாமல் இருத்தல், சாப்பிடும் தட்டை சரியாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படும். குறிப்பாக, வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை. அடுத்த நிலை, குமட்டல். அத்துடன், தலைவலி, ஜுரம் வருவது போல இருக்கும். கடைசி நிலை தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் உடனே நிறுத்தக்கூடாது.
படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கால், நமது உடலில் தேவையில்லாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது; அது நல்ல விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு அதனை வெளியேற்றத்தான் இப்படி நடக்கிறது.

ஃபுட்பாய்சனை தடுக்கும் வழிமுறைகள்:
* சமைப்பவர், சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
* ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும் போது, அதன் ஜில்லென்ற தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்க வேண்டும்.
* இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.

* உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
* செல்லப் பிராணிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை தள்ளியே வைத்திருங்கள்.