search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாந்தி"

    • கவிமணி பள்ளியில் அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு
    • சிகிச்சையில் இருந்த 21 பேர் டிஸ்சார்ஜ் ; 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டாரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

    இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நேற்று மதியம் மாணவிகளுக்கு சாதம், சாம்பார், அவித்த முட்டை ஆகியவை மதிய உணவாக வழங்கப்பட்டது. மாணவிகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சில மாணவி களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து வாந்தி மயக்கம் எடுத்த மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். 25 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பெற்றோர் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கலெக்டர் அரவிந்த், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் நலம் விசாரித்தனர். நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து பேசினார்.

    மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் என அனைவரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர் .

    மாணவிகள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. மாணவிகள் சாப்பிட்ட உணவில் வண்டு கிடந்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிைலயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 25 மாணவிகளில் 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதை எடுத்து தற்போது 4 மாணவிகள் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். 4 மாணவிகளையும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் கல்வி அதிகாரிகளும் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து பேசினர். மேலும் கவிமணி பள்ளியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கவிமணி பள்ளியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர். அதை உடனடியாக சுத்தம் செய்ய அறிவுறுத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கவிமணி பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட் டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது. மதிய உணவை தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய தகவல்களை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    • பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி, பிளிசீங்பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • குழந்தைகள் பாதிப்பு காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி யில் புளிச்சக்காடு, தோட்ட மானியம், ஆலமரத்தடி, நித்திய வனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 18 மாணவ -மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியராக ராகினி பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தனர். தொடர்ந்து பள்ளி விடுமுறை பின் பள்ளிக்கு வந்த மேலும் 5 மாணவ -மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியை க்கு காய்ச்சல் மற்றும் வாந்தி அறிகுறி இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி நகர மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் சுகாதாரத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி, பிளிசீங்பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் மேற்கொ ள்ளப்பட்டு குடிநீர் பரிசோ தனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    கிஷோர் (5), சக்திச ரவணன் (9), பவதாரணி (8), ரஞ்சித்பவன், யாழினி, கபிஷ்கா, அனுஷ்கா உள்ளிட்ட பள்ளியில் பயிலும் 18 மாணவ- மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரை இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.சிகிச்சைக்கு பின்னர் 2 மாணவிகளை தவிர மற்ற மாணவ-மாணவிகள் மற்றும் தலைமைஆசிரியை வீடு திரும்பினர். மாணவ மாணவிகளின் உடல்நலம் பாதிப்பிற்கு வீட்டில் சாப்பிட்ட உணவு காரணமா அல்லது குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை கலெக்டர் லலிதா சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 மாணவிகளை சந்தித்து பெற்றோர்களிடம் விசாரி த்தார்.

    தொடர்ந்து தலைமை மருத்துவர் பானுமதியிடம் தேவையான சிகிச்சையளிக்க அறிவுறு த்தினார். பின்னர் குழந்தைகள் பாதிப்பு காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், நகர்மன்ற துணை தலைவர் சுப்ப ராயன், நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், ரமாமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×