search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை சாவடி"

    • பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
    • பயணிகளின் உடமைகள் சோதனைக்குட்படுத்தப் பட்டு வருகிறது. ரெயில்வே பிளாட்பாரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள் ளது.

    இதையடுத்து அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகை யில் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டு உள்ளனர்.குமரி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி. ஆஸ்ரா கர்க் ஆய்வு மேற்கொண்டார்.

    குமரி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். நாகர்கோவிலில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் நாகர்கோவில், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி சப்-டிவிஷனல் உட்பட்ட முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மாவட் டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் 2 ஷிப்ட்டு களாக பிரிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    போலீசார் அந்த பகுதி களில் வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார் கள். மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற் கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வரு கிறார்கள்.

    கோவில்களிலும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பயணிகளின் உடமைகள் சோதனைக்குட்படுத்தப் பட்டு வருகிறது. ரெயில்வே பிளாட்பாரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரி யில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். லாட்ஜுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்உத்தரவின் பேரில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    அவினாசி :

    அவினாசியில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம் அவினாசி புது பஸ் நிலையம் அருகில் அனைப்புதூர், மங்கலம் ரோடு, தெக்கலூர், நரியம்பள்ளி ஆகிய இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்குமாறு சுழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அலுவல் நியமித்து அனைவரும் தொய்வின்றி பணி செய்ய தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் தணிக்கை செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்.

    • ஏற்காடு பகுதியில் உள்ள அரங்கம் பகுதியில் சிலர் மரம் வெட்டியதாக கூறி கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து சோதனை சாவடியை மூடி மலை கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • மரம் வெட்டியவர்கள் 5 பேர் மீது ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஏற்காடு:

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்காடு ஒன்றியம், அரங்கம் மலைகிராமத்தில் இருந்து குறுக்கு வழியாக குப்பனூர் செல்வதற்காக, கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு 250 சில்வர்ஓக் மரங்கள் வெட்டி உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் வனத்துறை அலுவலர்கள் தொடர்பு இருந்ததை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் பணியில் இருந்த கார்ட் குமார் என்பவரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் பொதுமக்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் தலை மறைவாக இருந்த அரங்கம் கிராமத்தை சேர்ந்த புஷ்ப நாதன், மகேந்திரன் மற்றும் வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கைது நடவ டிக்கையை கண்டித்து மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குப்பனூர் சோதனை சாவடியை மூடி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டரிடம் கொண்டு சென்று, நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழாவை எழுச்சியாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • சுதந்திர தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

    நாகர்கோவில்:

    75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    சுதந்திர தினவிழாவை விமர்சையாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழாவை எழுச்சியாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா பரவ லின் காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படாத நிலையில் பள்ளி, கல்லூரி களில் கண்கவர் கலை நிகழ்ச்சி களுடன் சுதந்திர தினவிழாவை கொண்டாடு வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

    விழாவில் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோத னைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாது காப்பு பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். அஞ்சு கிராமம், ஆரல்வாய் மொழி, களியக்காவிளை சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமை யாக சோதனை செய்யப் பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நிய மிக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறார்கள். கடலோர காவல் படை போலீசாரும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷ னுக்குட்பட்ட பகுதியில் இரவு ேராந்து பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டு வருகிறார்கள். கன்னி யாகுமரி பகுதியில் உள்ள லாட்ஜிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். லாட்ஜிகளில் உள்ள வருகை பதிவேட்டை சோதனை செய்தனர். லாட்ஜிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று 2-வது நாளாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பிளாட்பாரங்கள், ெரயில்வே தண்டவாளங் களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளியூர்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ள பார்சல்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகிறார்கள்.

    கோவில்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • கேரளாவில் தற்போது புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.

    செங்கோட்டை:

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவலால் தமிழக-கேரள எல்லையான புளியரை உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் கால்நடை துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    குரங்கு அம்மை

    இதன் காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கேரளாவில் புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களுக்கும் இந்த பாதிப்பு பரவி விடாமல் இருக்க மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் புளியைரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில் பொதுமக்கள் தொழில் நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காகவும் என பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் கேரளா செல்கின்றனர்.

    தீவிரப்படுத்த வேண்டும்

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து பாலருவி, கழுதுருட்டி அருவி, தென்மலை அணை பகுதி, குற்றாலம், குண்டாறு உள்ளிட்டவற்றில் குளிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கேரளாவில் குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளதால் புளியரை சோதனை சாவடியில் கொரோனா பரவலின்போது சுகாதாரத்துறை கடைபிடித்த அதே நடைமுறைகளை தற்போதும் தீவிரப்படுத்த வேண்டும்.

    கோரிக்கை

    அவ்வாறு செய்வதன் மூலமாக தமிழகத்தில் குரங்கு அம்மை பரவாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சுகாதரத்துறையினரிடம் தெரிவித்தால், அவர்கள் அலட்சியமாக பதில் கூறுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உடனடி நடவடிக்கை எடுத்து சோதனை சாவடியில் மருத்துவர்கள் முகாமிட்டு அந்த வழியாக வருபவர்களை பரிசோதனை செய்ய ஆவண செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×