என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேயர் தினேஷ்குமார்"
- 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய இரு முக்கிய பணிகள் பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ரோடு மோசமாக உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பஸ்களும் இயக்கப்படுவதில்லை. என புகார்கள் வந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய இரு முக்கிய பணிகள் பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருப்பூர் குமார் நகரிலிருந்து, வளையன்காடு, சாமுண்டிபுரம் வழியாக ஏறத்தாழ 3.5 கி.மீ., தொலைவுக்கு இப்பணிகள் நடக்கிறது. இதில், பாதாள சாக்கடை குழாய் பதித்தல், வீட்டு இணைப்பு வழங்குதல், 4வது குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய் பதித்தல், சப்ளை குழாய் பதித்தல் ஆகிய நான்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இரண்டு ஆண்டாக இப்பணி ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி கூட்டத்தில் பேசிய நான்கு கவுன்சிலர்கள், இவ்வாறு ரோடு மோசமாக உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பஸ்களும் இயக்கப்படுவதில்லை. என புகார்கள் வந்தது.
இதனையடுத்து மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் ஆய்வு செய்ததில், டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், அப்பணியை வேறு ஒருவரிடம் கொடுத்ததும், இதனால், பணிகள் முறையாக நடக்காததும் தெரிந்தது. அடுத்த மாத இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடித்து ஒப்படைக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறின்றி தலா 100 மீ., அளவுக்கு முழுமையாக பணியை முடித்த பின், அடுத்த 100 மீ., அளவுக்கு பணிகளை துவங்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்தில் பணி முடியாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்,' என, ஒப்பந்ததாரரிடம் மேயர், கமிஷனர் ஆகியோர் எச்சரித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்