என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிவாஜி நினைவு நாள்"
- மதுரையில் சிவாஜி நினைவு நாளையொட்டி இன்று காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.
- பூந்தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்ட கோர்ட்டு அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதே போல் மதுரா கோட்ஸ் பாலத்தின் கீழ் உள்ள சிவாஜி சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. புதூர் அரசு போக்குவரத்து கழக டிப்போ அருகில் உள்ள சத்தியமூர்த்தி பவன் வாசக சாலை முன்பு, சிவாஜி படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பூந்தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் அரிமா சத்ருக்கன் முன்னிலை வகித்தார்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 21வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் டைமண்ட் தியேட்டர் அருகில் சிவாஜியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பொதுசெயலாளர் அஸ்லாம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் அரிமா சத்ருக்கன் முன்னிலை வகித்தார்.
செயலாளர் பிரசன்ன குமார், துணைச் செயலாளர் சிவக்குமார் பிரபு, கோச் கிருஷ்ணன், சிவாஜி ராம், கேரளா செல்வம், மக்கள் மாமன்ற தலைவர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் கே.ஆர். சிவானந்தம், வின்சென்ட் ராஜ், ராஜா, கணேசன், பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று மாலை சிவாஜி கணேசன் படங்களின் நிலைத்த புகழுக்கு பெரிதும் துணை நிற்பது என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்