என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கருத்து கேட்பு கூட்டம்"
- புதிதாக கல்குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
- கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோவிலூர், வினோபாநகர் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டன்பாளையம் வனப்பகுதியையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் புதிதாக கல்குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு இருந்தார்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
கோபி தாசில்தார் ஆசியா, மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர் உதயகுமார், சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் புதிதாக அமைய உள்ள கல்குவாரி பற்றிய விபரங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கல்குவாரி அமைத்தால் நிலநடுக்கம் ஏற்படும், புலிகள் காப்பகம் என்பதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் மற்றும் அணை பகுதிகள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஊராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் சிலர் கல்குவாரி அமைக்க ஆதரவும் தெரிவித்தனர். முடிவில் அதிகாரிகள் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறினர்.
குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் உள்பட கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோவிலூர், வினோபாநகர் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை, வருவாய்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது.
- திருச்சி வருவாய் மாவட்டம் சம்மந்தப்பட்ட லால்குடி, புள்ளம்பாடி, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய நான்று சார்பதிவகங்கள் திருச்சி பதிவு வருவாய் மாவட்ட எல்லையில் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
அரியலூர்:
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 06.09.2021 அன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மானியக்கோரிக்கையின் போது பதிவுத்துறையில் சில சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் சில வருவாய் கிராமங்கள் வேறு வருவாய் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நிலை உள்ளது.
பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை, வருவாய்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது. எனவே, வருவாய் கிராமங்கள் முழுவதும் ஒரே வருவாய் மாவட்ட ஆட்சி எல்லைக்குள் கொண்டு வரும் வகையில் சார்பதிவக எல்லைகள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.
அரியலூர் பதிவு மாவட்டத்தை பொறுத்து, அரியலூர் பதிவு மாவட்ட எல்லையில், திருச்சி வருவாய் மாவட்டம் சம்மந்தப்பட்ட லால்குடி, புள்ளம்பாடி, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய நான்று சார்பதிவகங்கள் திருச்சி பதிவு வருவாய் மாவட்ட எல்லையில் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக துணைப்பதிவு துறைத்தலைவர் அலுவலகம், திருச்சி மாவட்டப்பதிவாளர் அலுவலகம், அரியலூர் சார்பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 27.07.2022 பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரணஸ்வதி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்