என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி கைது"

    • குட்டியானை மின்வேலியில் சிக்கி உயிர் இழந்தது.
    • யானை குட்டி இறந்ததை எல்லப்பன் பார்த்து அருகில் உள்ள நிலத்தில் குழி தோண்டி புதைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்பு காடு உள்ளன. இந்த வனப்பகுதியில் யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி அருகில் கடூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தையொட்டி உள்ளது அக்குபாய் கொட்டாய். இந்த ஊரை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 63). விவசாயி.

    இவர் தனது நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். அந்த பட்டா நிலத்திற்கு அடிக்கடி காட்டுபன்றிகள் வந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. இதனால் அந்த பட்டா நிலத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த நிலத்திற்கு யானைகள் கூட்டம் ஒன்று வந்தது.

    அந்த நேரம் குட்டியானை மின்வேலியில் சிக்கி உயிர் இழந்தது. இந்த நிலையில யானை குட்டி இறந்ததை எல்லப்பன் பார்த்து அருகில் உள்ள நிலத்தில் அந்த குட்டி யானையை குழி தோண்டி புதைத்தார். இந்த தகவல் கிராம மக்களுக்கு தெரிய வர, அவர்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் பார்த்திசாரதி அங்கு சென்று ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் குட்டி யானை மின் வேலியில் சிக்கி இறந்ததும், அதை அருகில் புதைத்து இருப்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அனைத்தும் ஊடேதுர்க்கம் காப்பு காட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா நிலத்தில் நடந்துள்ளது.

    இது குறித்து வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி, ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்திகேயனிக்கு தெரிவித்தார். இதையடுத்து அவருடைய தலைமையில் ஓசூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ மாரியப்பன், ஓசூர் வனச்சரக அலுவலர் ரவி மற்றும் குழுவினரும், நாகமங்கலம் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேற்று விரைந்து சென்றனர்.

    அதே போல மின்வாரிய ஊழியர்களும், வருவாய்த்துறையினரும் அங்கு சென்றனர். இந்த நிலையில் இரவு ஆகி விட்டதால் யானையை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இன்று மதியம் கோவையில் இருந்து வனத்துறை சிறப்பு கால்நடை மருத்துவர் வந்த உடன் குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செயயப்பட உள்ளதாக ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் விசாரணை நடத்தி வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து எல்லப்பனைது கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

    • காமராஜுக்கும், பரிமளாவுக்கும் மீண்டும் கள்ளத்தொடர்பு சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
    • தாய், மகளின் கதறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்றனர். அதற்குள் காமராஜ் தப்பி ஓடிவிட்டார்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா (வயது 46). இவரது கணவர் துரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    பரிமளா தனது மகன் லோகேஷ் மகள்கள் ராஜேஸ்வரி (16) ரோகிணி ஆகியோருடன் வசித்து வந்தார்.

    பரிமளா, வீரானந்தல் அருகே உள்ள அடிவாரம் கிராமத்திற்கு விவசாய வேலைக்கும், காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்கும் சென்று வந்தார். அப்போது அடிவாரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காமராஜ் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் பரிமளா, 'எனது மகள்கள் வளர்ந்துவிட்டனர். நம்முடைய பழக்கத்தை நிறுத்திக்கொள்ளலாம்' என்று காமராஜிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில், பரிமளாவும், அவரது 2-வது மகள் ராஜேஷ்வரி (16) இருவரும் அடிவாரம் பகுதியில் உள்ள காட்டிற்கு நேற்று விறகு வெட்ட சென்றனர்.

    அப்போது, அங்கிருந்த காமராஜுக்கும், பரிமளாவுக்கும் மீண்டும் கள்ளத்தொடர்பு சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த காமராஜ், தான் வைத்திருந்த கத்தியால், பரிமளாவின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரி வெட்டினார்.

    இதை பார்த்து அலறி கூச்சலிட்ட பரிமளாவின் மகள் ராஜேஷ்வரி தாயை காப்பாற்ற முயன்றார். அவரையும் காமராஜ் வெட்டினார்.

    தாய், மகளின் கதறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்றனர். அதற்குள் காமராஜ் தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பரிமளா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜேஷ்வரியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேஷ்வரி வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இருவரது உடலையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பதுங்கியிருந்த காமராஜை கைது செய்தனர்.

    • பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.
    • ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரகள்ளி வனச்சரகம், மல்லன்குழி வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மல்லன் குழி கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதில் இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது. பெண் யானை உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் மாதேவா அவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க அமைத்திருந்த மின் வேலியில் உயர் அழுத்தம் மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • விவசாய நிலங்களில் வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெரியசாமியை தேடி வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஒன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தின் அருகில் மற்றொரு விவசாய நிலம் உள்ளது.

    அருகருகே உள்ள விவசாய நிலங்களில் வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமி (50) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று ராஜமாணிக்கம் தனது தாய் பழனியம்மாளுடன் விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த பெரியசாமி வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜமாணிக்கத்தை வெட்டினார். அவருடைய தாயார் பழனியம்மாள் தடுக்க முயன்றபோது அவரையும் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ராஜமாணிக்கம், பழனியம்மாள் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

    இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெரியசாமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் பெரியசாமி இன்று அதிகாலை போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமி (50) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • பெரியசாமி இன்று அதிகாலை போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணாபுரம்,

    தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஒன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தின் அருகில் மற்றொரு விவசாய நிலம் உள்ளது.

    அருகருகே உள்ள விவசாய நிலங்களில் வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமி (50) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று ராஜமாணிக்கம் தனது தாய் பழனியம்மாளுடன் விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த பெரியசாமி வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜமாணிக்கத்தை வெட்டினார். அவருடைய தாயார் பழனியம்மாள் தடுக்க முயன்றபோது அவரையும் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பெரியசாமியால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ராஜமாணிக்கமும், அவரது தாயும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர்் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே ராஜமாணிக்கம், பழனியம்மாள் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய பெரியசாமியை பிடிக்க தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் பெரியசாமி இன்று அதிகாலை போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார்.
    • மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம்கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புராயன். இவர்இவரதுநிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிர்களை காட்டுபன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்கமின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலத்தில்மணிலா அறுவடை பணிக்காக மணம்தவழ்ந்த புத்தூர்காலனியை சேர்ந்த சேட்டுமனைவி தனலட்சுமி (வயது 65) வந்தார்.அவர் அங்கிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாகஉயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ்சூப்பிரண்டுசபியுல்லா,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விவசாயி சுப்புராயனை கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    • இறந்த யானைகளிடம் பாச போராட்டம் நடத்தி கொண்டிருந்த குட்டியானைகளை பட்டாசு வெடித்து அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.
    • பலியாகி கிடந்த 3 யானைகளுக்கும் அந்த இடத்திலேயே 20 பேர் கொண்ட கால்நடை குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்குட்பட்ட மாரண்டஅள்ளி காப்பு காட்டில் இருந்து சமீபத்தில் ஒரு மக்னா யானை, 2 பெண் யானைகள், 2 குட்டி யானைகள் வெளியேறின. இவை பாலக்கோடு அருகே உள்ள ஆத்துக்கொட்டாய், நல்லூர், சென்னப்பன் கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாரண்டஅள்ளி வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் சுற்றிய 5 யானைகளும் அப்பகுதியில் உள்ள காளிகவுண்டன் கொட்டாய்க்குள் புகுந்தன.

    அப்போது அங்கு சக்திவேல் என்பவரின் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 25 வயது மதிக்கத்தக்க மக்னா யானை, அதே வயதுடைய 2 பெண் யானைகள் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.

    இதில் அதிர்ஷ்டவசமாக 2 குட்டி யானைகள் உயிர் தப்பின. அவை உயிரிழந்த யானைகளை சுற்றி சுற்றி வந்தபடி பாசப்போராட்டம் நடத்தியது. மேலும், அந்த யானைகள் இறந்தது தெரியாமல் தனது துதிக்கையால் குட்டியானைகள் அதனை தட்டி எழுப்பி கொண்டிருந்தன.

    நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பற்றி அந்த பகுதி மக்கள் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறையினர், இறந்த யானைகளிடம் பாச போராட்டம் நடத்தி கொண்டிருந்த குட்டியானைகளை பட்டாசு வெடித்து அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.

    பலியாகி கிடந்த 3 யானைகளுக்கும் அந்த இடத்திலேயே 20 பேர் கொண்ட கால்நடை குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் 3 யானைகளின் உடல்களும் அந்த பகுதியில் பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டன. யானைகள் புதைக்கப்பட்ட இடத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மாலைகள் வைத்தும், பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    3 யானைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் நடந்த விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த பாறைக்கொட்டாயை சேர்ந்த முருகேசன் (வயது 60) என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தது தொடர்பாக, மின்வாரியத்தினர் கொடுத்த புகாரின்பேரில் மாரண்டஅள்ளி போலீசாரும், முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 28ஆம் தேதி மோகன் மேகலாவிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மேகலா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
    • இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மேகலாவை மோகன் கட்டையாலும் கையாலும் தாக்கியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை அருகே உள்ள கோதிகுட்டலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி மேகலா (வயது50), இவர் அதே பகுதியை சேர்ந்த மோகன் (53) என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 9 லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி மோகன் மேகலாவிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மேகலா பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மேகலாவை மோகன் கட்டையாலும் கையாலும் தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த மேகலா கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மகாராஜா கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

    • பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
    • போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடியை சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மகன் ராஜபிரபு (வயது 30). இவர் மது போதைக்கு அடிமையாகி தினமும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    மகன் ஏற்படுத்தி வந்த பிரச்சினைகளால் பெருமாள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். "இப்படி ஒரு மகனை உயிரோடு வைத்திருப்பதைவிட கொன்று விடுவது நல்லது" என்று முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்த மகனை தனக்கு சொந்தமான தோட்டத்துக்கு அழைத்து சென்று அவரது கை, கால்களை கயிறால் கட்டி பெற்ற மகன் என்றும் பாராமல் கிணற்றுக்குள் தள்ளி விட்டு விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி ராஜபிரபு பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் பெருமாள் தனது மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் இன்று காலை அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இதுபற்றி மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த ராஜபிரபு உடலை மீட்டனர்.

    மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த பெருமாளை கைது செய்தனர்.

    மேலும் பலியான ராஜபிரபு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொட்டக்குடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 23 வயது இளம்பெண் விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • சென்றாயன் (வயது 37) என்பவர் அங்கு சென்று இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள அஸ்த்தகிரியூர் பகுதியை சேர்ந்த திருமணமான 23 வயது இளம்பெண் விவசாய நிலத்திற்கு சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சென்றாயன் (வயது 37) என்பவர் அங்கு சென்று இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கூச்சலிட்டவாறு அந்த பெண் அங்கிருந்து வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணும், தாயாரும் சென்றாயன் வீட்டிற்கு சென்று கேட்டபோது அங்கிருந்த வாத்தியார் என்ற சென்னப்பன் என்பவர் பெண்ணின் தாயாரை கட்டையால் தாக்கினாராம்.

    இதுகுறித்து இளம்பெண் கடத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து சென்றாயனை கைது செய்தனர். தலைமறைவான வாத்தியார் என்கிற சென்னப்பனை தேடி வருகிறார்.

    • செடிகளை போலீசார் பிடிங்கி அழித்தனர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகேநாச் சியார் குப்பம் பகுதியில் வாழை தோப்பு நடுவே கஞ்சா செடி வளர்த்த விவசாயியைபோலீசார் கைது செய்தனர்

    கஞ்சா செடி வளர்ப்பு

    திருப்பத்தூர் அருகே உள்ள நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 62) விவசாயி. இவர் நாகராஜ் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு வருகிறார். இந்த வாழைத் தோப்பு நடுவே கஞ்சா செடிகள் வளர்த்து வந் தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் நாகராஜனின் வாழைத் தோப்பிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வாழை தோப் பின் நடுவில் ராமன் ஏழு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிய வந் தது. உடனடியாக கஞ்சா செடிகளை பிடிங்கி போலீசார் அழித்த னர். இதன் எடை 2½ கிலோ ஆகும்.

    இதையடுத்து போலீசார் ராமனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். வாழைத்தோப்பில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் சிவன்கோவில் பகுதியில் மாநகராட்சி பள்ளி அருகே கருங்குளம் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் நாய்கள் சில இறந்து கிடந்தன.

    இதனை அறிந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அதில் மொத்தம் 9 நாய்கள் உயிர் இழந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அந்த நாய்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலப்பாளையம் கருங்குளத்தை சேர்ந்த விவசாயி அருள் செல்வம் (வயது 47) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அவற்றை நாய்கள் கடித்து கொன்று விடும் என்று சில நாட்களாக அருள் செல்வம் அச்சத்தில் இருந்துள்ளார். இது தொடர்பாக சிலரிடம் அவர், இந்த நாய்களை மருந்து வைத்து கொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் தான் அந்த நாய்கள் இறந்து கிடந்துள்ளது என்ற விபரமும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றபோது, அவர் நான் நாய்களை கொல்லவில்லை என்று கூறியுள்ளார். எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    தொடர்ந்து, உயிரிழந்த நாய்களை நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×