search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்கள்"

    • அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், விழாக்கள் நடைபெற்று வருகிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ஊட்டி:

    ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், விழாக்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதம் என்பதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    மசினகுடி அருகே பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் கூடலூர் 2-ம் மைல், வன துர்க்கையம்மன் உள்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் காலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். முன்னதாக வரலட்சுமி விரதம் இருந்த பெண்கள் வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்களுக்கு வழங்கினர்.

    ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓம்சக்தி பத்திர காளியம்மன் கோவில், காந்தல் மூவுலக அரசியம்மன் கோவில் உள்பட பல்ேவறு அம்மன் கோவில்களில் நேற்று பூஜை நடந்தது.

    • கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஊட்டி:

    ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று 2-வது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்கல பொருட்கள் முன்னதாக கூழ் ஊற்றப்பட்டது. மேலும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு 8 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இது தவிர கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோன்று ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு காலை முதல் மாலை வரை ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கற்பூரம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

    சிறப்பு பூஜை அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓம்சக்தி பத்ர காளியம்மன் கோவில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிர் காத்த அம்மன் கோவில், காந்தல் மூவுலகரசியம்மன் கோவில், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது

    • ஆடி மாதம் ஆடிப்பெரும் விழா சிறப்பாக நடைபெறுகிறது.
    • 26 ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தன்வந்திரி ஹோமம் நடக்கிறது.

    உடுமலைட:

    உடுமலையின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடிப்பெரும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆடி திருவிழா ஆடி முதல் வெள்ளியையொட்டி காலை 11 மணிக்கு திருமஞ்சனம், உச்சிக்கால பூஜை நிகழ்ச்சிகளும் மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் ,மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை வழிபட்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் சில பக்தர்கள் கம்பங்கூழ் தயாரித்து பாத்திரங்களில் கொண்டு வந்திருந்தனர். அதுவும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு. எஸ். எஸ். ஸ்ரீதர், செயல் அலுவலர் சி. தீபா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    உடுமலை நேரு வீதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி மகாலட்சுமி ஹோமம் மாலை லலிதா சகஸ்ர நாம குங்கும அர்ச்சனை நடந்தது. 26 ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. 29ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீ துர்கா ஹோமமும்ஆகஸ்ட் 1ந் தேதி மாலை 6 மணிக்கு ஆடிப்பூரம் ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து அம்மனுக்கு வளையல்அலங்காரம் நடைபெறுகிறது. ஆகஸ்டு 2ந்தேதி காலை 10 மணிக்கு திருப்புகழ் பாராயணமும் தொடர்ந்து காலை 11 மணிக்கு ஸ்தல விருட்ச பூஜை, வன்னி அத்தி மரத்திற்கு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கொங்கராயக்குறிச்சியில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி பிள்ளையார் கோவில் உள்ளது.
    • 1899 முதல் 1905-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வு அறிக்கையில் இதற்கான சான்றுகளை கூறியுள்ளார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக்கரையில் கொங்கராயக்குறிச்சி அமைந்துள்ளது.

    வலம்புரி பிள்ளையார் கோவில்

    வரலாற்று பெருமை வாய்ந்த இவ்வூரில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி பிள்ளையார் கோவில் உள்ளது.

    மண்ணில் புதைந்து தற்போது சில வருடங்களுக்கு முன்பு வெளிப்பட்ட வீரபாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 11-ம் நூற்றாண்டில் ஜடவர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியனால் கட்டப்பட்டது.

    பைரவர்

    தென் சீர்காழி என்றழைககப்படும் இந்த சிவன் சட்டநாதர் என்றழைக்கப்படும் பைரவர் மிகவும் பழைமையானாவர்.

    இந்த கோவில்கள் இரண்டும் மண்ணுக்குள் புதைந்தே காணப்படுகின்றது. அதிலும் பழைய வெயிலுகந்தம்மன் மற்றும் மாலை அம்மன் கோவில்கள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்து கோவிலின் விமானங்கள் மட்டுமே வெளியே தெரியும்படி காட்சியளிக்கிறது.

    அடிக்கடி வரலாற்று ஆற்று வெள்ளத்தில் அழிந்து போன இந்த ஊரில் தான் 19-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ பிரசங்கியார் ரேணியஸ் அடிகளார் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கிறிஸ்தவ குடியிருப்புகளை உருவாக்கியுள்ளார்.

    தொல்லியல் துறை நடவடிக்கை

    வீரபாண்டீஸ்வரர் கோவிலை போன்று இவ்வூரில் மேலும் பல கோவில்களையும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இந்த ஆலயங்களை வெளியே கொண்டு வர தமிழகம் மற்றும் மத்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுகக வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து இந்த ஊரை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் விக்னேஷ் கூறியதாவது:-

    எங்கள் ஊரில் பல கோவில்கள் மண்ணுக்குள் புதைந்து உள்ளது. கொங்கராயக்குறிச்சியின் வரலாறு 9ம் நூற்றாண்டுடன் நிறைவு அடையவில்லை.

    உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் வரலாற்றுடன் இணைந்து முடிவுரை இல்லாத வரலாற்றில் பயணிக்க தொடங்கியுள்ளது.

    அலெக்சாண்டர் ரியா

    இதற்கான சான்றுகளை 1899 முதல் 1905-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளார்.

    அதன்படி, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஆதிச்சநல்லூருக்கு எதிரே அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல் கட்டுமானம் ஒன்றை கண்டதாகவும், ஆதிச்ச நல்லூர் தாழிக்காட்டில் புதைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடம் கொங்கராயக்குறிச்சியாக தான் இருந்திருக்க வேண்டும் என்றும் அலெக்சாண்டர் இரியா தெரிவித்துள்ளார்.

    இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வூரின் பழம்பெயர் முதுகோனூர் என்பதை மண்ணுக்குள் புதைந்து காணப்படும் வலம்புரி பிள்ளையார் கோவில் 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகின்றது.

    வாய்மொழி கதைகள்

    இந்த கொங்கராய குறிச்சியில் இருந்த பூர்வகுடி களே ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதையுண்டு உள்ளனர் என்பதை உணர்த்தும் விதமாக கொங்கராயக்குறிச்சி மக்களிடம் இன்று வரை வாய்மொழி கதைகள் வழக்கத்தில் உள்ளது.

    மேலும், கொங்க ராயக்குறிச்சி கிராமத்தின் காடு, திரடு போன்ற பல்வேறு பகுதிகளில் பானை ஓடுகள், தாழியின் சிதைந்த பாகங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.

    இந்த பானை ஓடுகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதிகளில் கிடைத்த பொருட்களை ஒத்தே காணப்படுகின்றது. இப்படி பல சான்றுகள் ஆதிச்ச நல்லூர் கொங்க ராயக்குறிச்சி வரலாற்று தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.

    எனவே, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைந்த முதுமக்களின் வாழ்விடங்களை கண்டறிய வேண்டும் என்றால் கொங்க ராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது ஆதிச்ச நல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளும் மத்திய தொல்லியல் துறை யினரும், தாமிரபரணி கரையில் உள்ள அகழாய்வு இடங்களை தேடி ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறையினரும் கொங்க ராயகுறிச்சி மீது அதிக ஈடுபாடு கொண்டு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும். இங்குள்ள பழமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×