search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதாரப்பதி"

    • அய்யாவழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் கொடியேற்றினார்.
    • 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, மாலை 6 மணிக்கும் அன்னதர்மம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடற்கரை யில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் 11 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா இன்று காலையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது

    கொடியேற்றம்

    திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, காலை 7.05மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அய்யாவழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் கொடியேற்றினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார்,அன்பாலயம் நிறுவனர் குரு சிவசந்திரன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சந்திரசேகர், டாக்டர் முத்துகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் மோகன் குமார ராஜா, காசிலிங்கம், ஆதி நாராயணன், பால கிருஷ்ணன், ராமமூர்த்தி, கணேசன்,செல்வகுமார், சங்கரன், சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், சிவலிங்கம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 8 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனிவருதல், காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சி படிப்பு, பணிவிடை , பகல் 1 மணிக்கு அன்ன தர்மம் நடைபெற்றது.

    11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மதியம் 1 மணிக்கும் மாலை 6 மணிக்கும் அன்னதர்மம் நடக்கிறது. மாலை 4மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.

    1-ந் தேதி தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது. 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    தேரோட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பகல் 2 மணிக்கும், இரவு 8 மணிக்கும் அன்ன தர்மம், இனிமம் வழங்கு தல் நடக்கிறது. நள்ளிரவு 1மணிக்கு அய்யா வை குண்டர் காளை வாகனத்தில் பவனி வருதல், இரவு 2 மணிக்கு தர்மம், இனிமம் வழங்குதல் நடக்கிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருடன், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திர ஆகிய வாகனத்தில் பவனிவருதல் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, துணைத் தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணைத் தலைவர்கள், பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். 

    ×