என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரசம்"
- குழந்தையின்மை பிரச்சனைக்கு முருங்கை பூ நல்ல பலனளிக்கும்.
- ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள்:
முருங்கை பூ - 2 கைப்பிடி அளவு
தக்காளி - 1
நெல்லி அளவு - புளி
பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முருங்கை பூவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் பொடித்த சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் புளி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். (ரசத்தை கொதிக்க விடக்கூடாது).
இப்போது சத்தான முருங்கை பூ ரசம் ரெடி.
- கருவாட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று கருவாட்டில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கருவாடு - 5 துண்டுகள்
தக்காளி - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
புளி - எலுமிச்சை அளவு
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கீற்று
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி - சிறு துண்டு
செய்முறை:
கருவாட்டை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் வறுத்து வைக்கவும். வறுத்த கருவாட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயம், 1 தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் 1 தக்காளியை சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.
புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வதக்கி அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.
மீதமுள்ள ஒரு தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் முதலியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி பின்னர் புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்க வேண்டும்.
பிறகு வறுத்த கருவாடு துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து கருவாடு வெந்து வாசனை வரும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான கருவாட்டு ரசம் தயார்.
இதற்கு நெத்திலி கருவாட்டையும் பயன்படுத்தலாம். சூப்பராக இருக்கும்.
- ரசத்தில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
- இன்று பருப்பு உருண்டை சேர்த்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பருப்பு உருண்டை செய்ய
ஊறவைத்த துவரம் பருப்பு - முக்கால் கப்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
ரசம் வைக்க :
நெய் - 3 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 1 கப்
தக்காளி - 1
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
முந்தைய நாள் இரவே துவரம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மிக்ஸியில் உருண்டைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இட்லி குக்கரில் நல்லெண்ணெய் தடவி பருப்பை உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து வேக வைத்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடுகு , சீரகம், கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின்னர் புளித்தண்ணீர் சேர்க்கவும். அதோடு மஞ்சள், தனியா, சீரகம் , மிளகு தூள், உப்பு, 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு செய்து வைத்த உருண்டை, கொத்தமல்லி போட்டு இறக்கி அரை மணி நேரம் மூடிவைத்த பின்னர் பரிமாறவும்.
சூப்பரான பருப்பு உருண்டை ரசம் ரெடி.
- முருங்கைக் கீரை ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
- சூப் பிடிக்காதவர்கள் இப்படி ரசம் போன்று செய்து அருந்தலாம்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக் கீரை (ஆய்ந்தது) - கால் கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தக்காளி - ஒன்று,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள:
வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு.
செய்முறை:
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும் (தண்ணீர் அளவு போதவில்லை என்றால், சேர்த்துக்கொள்ளலாம்).
இறக்கும்போது எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கவும்.
சூப்பரான முருங்கைக் கீரை ரசம் ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்