search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.வி.சண்முகம்"

    • மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்று பிரிவுகளில் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

    சென்னை:

    தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுக்கள். மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடந்த ஒரு போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். முதலமைச்சர் ஜாமீன் குறித்தும் அவதுறாக பேசியதால் திமுக பிரமுகருக்கு புகார் அறிவித்தார்.

    இந்த புகார் அடிப்படையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைபோல் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதின்றி போராட்டம் நடத்தியதாக அழிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி.சண்முகம் எதிராக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கானது விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி ஜெயசந்தரன் கையில் விசாரனைக்கு வந்த போது சி.வி.சண்முகம் தரப்பில் மனுதாரர் உடைய பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால். அது அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டும் எனவும் திமுக நிர்வாகியால் புகார் அளிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் என கூறிய நீதிபதி மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்த காவல் துறை வழக்கறிஞர் சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி அதன் மூலமாக ஒரு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால் தான் அந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதே போல அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் புகாரின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று முன்னால் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுக்கல் மீதான தீர்பை நீதிபதி ஜெயசந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

    • அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டதாக சி.வி.சண்முகம் புகார்

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை போலீசார் வெளியேற்றி, அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். பின்னர், தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார்.

    கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரம், 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சி.வி.சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    ×