search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமிர்தகடேஸ்வரர்"

    • இன்னலற்று இடர்படுவோர் அப்பாடல்களை ஓதி அன்னையை வழிபட்டால் எல்லா நலன்களையும் பெற்று இன்புற்று வாழ்வர்.
    • அன்னையின் கடைக்கண் நோக்கினால் அன்பர்கள்பெறும் பேறுகள் பலவாகும்.

    "அபிராமி" பெயரிலும் அழகு, வடிவிலும் அழகு. "ரம்யம்" என்றால் அழகு. ரம்யத்தை உடையவள் "ராமி" (அழகுடையவள்), அபி&மேலான, எனவே "அபிராமி" என்ற சொல்லுக்கு "மேலான அழகுடையவள்" என்பது பொருள்.

    தன்னையே துதித்து, தன் பெயரையே பெயராக்கிக் கொண்ட அபிராமி பட்டருக்கு அருள் செய்து அதன் வழி உலகுக்கு "அபிராமி அந்தாதி" கிடைக்கச் செய்தாள்.

    இன்னலற்று இடர்படுவோர் அப்பாடல்களை ஓதி அன்னையை வழிபட்டால் எல்லா நலன்களையும் பெற்று இன்புற்று வாழ்வர்.

    அன்னையின் கடைக்கண் நோக்கினால் அன்பர்கள்பெறும் பேறுகள் பலவாகும்.

    ''தனந்தரும், கல்வி தரும், ஒரு

    நாளும் தளர்வறியா

    இனந்தரும், தெய்வ வடிவுந்தரும்,

    நெஞ்சில் வஞ்சமில்லா

    இனந்தரும், நல்லன எல்லாந்தரும்,

    அன்பர் என்பவர்க்கே

    கனம்தரும் பூங்குழ லாள்அபி

    ராமி கடைக்கண்களே.''

    அபிராமி அந்தாதி

    • அபிராமி அந்தாதியில் அம்பிகையின் வடிவம் பற்றிய வர்ணனை நிறைந்து கிடக்கிறது.
    • திருக்கடையூர் அம்பிகையின் திருவடிகளைத் தொழுவதால் அடைகின்ற பலன்கள் ஏராளம்.

    அபிராமி அந்தாதியில் அம்பிகையின் வடிவம் பற்றிய வர்ணனை நிறைந்து கிடக்கிறது.

    திருக்கடையூர் அம்பிகையின் திருவடிகளைத் தொழுவதால் அடைகின்ற பலன்கள் ஏராளம்.

    மார்க்கண்டேயன் உயிரைக் கவர எமன் வந்த போது எமதர்மனை சிவபெருமான் காலால் உதைத்த சிவனுறைத் தலம் இது.

    எனவே இங்குள்ள இறைவனான அமிர்தகடேஸ்வரரைத் தொழுவதால் எமபயம் நீங்கும்.

    'சஸ்டியப்த பூர்த்தி' என்று கூறப்படுகின்ற அறுபது வயதை முடித்தவர்கள் அவசியம் இக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

    இதனால் பூரண ஆயுள் கிட்டும் என்பது நம்பிக்கை.

    • திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 31-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 1-ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூர்அபிராமி உடனாகிய அமிர்தகடே ஸ்வரர் கோவிலில்ஆடிப்பூ ரத்தையொட்டி கொடி யேற்றம் நடைபெற்றது.

    தரங்ம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெ ற்றது. விநாயகர், அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர், முருகன், சண்டிகேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்கா ரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார்.

    பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.

    மேலும் தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 31-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 1-ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.

    ×