என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அனைத்து கட்சிகள்"
- மதுபான கடையை தடை செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடை அமைப்பதை தடுத்து நிறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கன்னியாகுமரி :
கீழ்குளம் அருகே வில்லாரிவிளையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பொதுமக்களுக்கும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் தொடங்க முற்படும் மதுபான கடையை தடை செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வக்கீல் பால்மணி தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா சார்பில் அனில்குமார், அ.தி.மு.க. சார்பில் வின்சன்ட், கம்யூனிஸ்ட் சார்பில் வக்கீல் ஸ்டான்லி, நாம் தமிழர் ஜெனிஸ், தி.மு.க. சார்பில் அனைத்து பேரூராட்சி கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வில்லாரி விளை பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள், பெண்கள் குழந்தைகள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிறுத்தம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாக மதுபான கடை அமைப்பதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடை அமைப்பதை தடுத்து நிறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்