search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்பொழி பேரூராட்சி"

    • தூய்மை பணி முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார்.
    • முகாமில் சாலையோரம் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    தென்காசி:

    பண்பொழி பேரூராட்சியில் சுகாதார மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் விமலா ஸ்டெல்லா பாய் முன்னிலை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் ஆறுமுகப்பாண்டியன், அனைவரையும் வரவேற்று பேசினார். தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தலைப்பின் கீழ் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். சாலையோரம் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. பண்பொழி பகுதியில் உள்ள கடப்ப குளத்தில் செடிகள் அகற்ற ப்பட்டது. நீர் நிலைகளுக்கு செல்லும் வாறுகால்கள் சுத்தம் செய்யப்பட்டது.

    இந்த முகாமில் பண்பொழி பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் நாகலெட்சுமி, வார்டு உறுப்பினர்கள் மாரி, கணேஷ், ராஸியாத்பேகம் மஜித், ஜோதி சுப்பையா க்கண்ணு, பூமாரி காளிமுத்து, ஆறுமுகம், முகம்மது இஸ்மாயில் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வரிவசூலர் சங்கர நாராயணன், அனைத்து பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர் சுந்தரி, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×