என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூட்டுறவு பணியாளர்கள்"
- காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மு.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநர் ஜெயராமன் ஆகியோர் கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் செயலாட்சியராக நியமிக்கப்பட்டுள்ள கூட்டுறவு துறை பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ம.தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மு.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பயிற்சியில் செங்கல்பட்டு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ம.சுடர்விழி, மதுராந்தகம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதி வாளர் பா.ஐஸ்வர்யா, கூட்டுறவு சார்பதிவாளர், முதுநிலை ஆய்வாளர்கள் மற்றும் இளநிலை ஆய்வாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். ஓய்வு பெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் மாணிக்கவேல், ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநர் ஜெயராமன் ஆகியோர் கூட்டுறவு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
- முகாமிற்கு கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
- இதில் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் 220-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் சரகத்திற்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ரேசன் கடை பணியாளர்களுக்கு, ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை, சீமா தொண்டு நிறுவனம், பிவெல் மருத்துவமனை, ஈரோடு கேன்சர் சென்டர் மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் 220-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் துணைப்பதிவாளர் பணி ஓய்வு ஸ்ரீதர், சீமா தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் எஸ்.புஷ்பநாதன், பிவெல் மருத்துவமனை டாக்டர்.மெய்.எஸ்.அப்பாச்சி கேர் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பாக்கியராஜ், வாசன் கண் மருத்துவமனை டாக்டர்.எம்.ராம்குமார், ஈரோடு கேன்சர் சென்டர், டாக்டர்.மீனா ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள், கோபிசெட்டிபாளையம் வட்டார சங்கச் செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்