என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சி.பி.எஸ்.இ"
- 10- வகுப்பிலும் இரு பள்ளியைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் பாராட்டத் தக்க வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
- தஞ்சாவூர் தாமரை பன்னாட்டு பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஆகர்ஷ் முதலிடம் பெற்றுள்ளார்.
தஞ்சாவூர்:
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தாமரை பன்னாட்டுப்பள்ளி தஞ்சாவூர் மற்றும் கும்பக்கோணம் ஆகிய இரு பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த முறையில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
12-ம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 69 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 212 மாணவர்களும் பெற்றுள்ளனர். தஞ்சாவூர் தாமரை பன்னாட்டு பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஆகர்ஷ் முதலிடம் பெற்றுள்ளார். 6 மாணவர்கள் வேதியியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியில் 474/500 மதிப்பெண் பெற்று ஸ்ரீராம் முதலிடத்தையும், விஜய் ஸ்ரீனிவாஸ், மாலிகா ஆகியோர் 473/500 பெற்று இரண்டாம் இடத்ைதயும் பெற்றுள்ளனர்.
10- வகுப்பிலும் இரு பள்ளியைச் சார்ந்த அனைத்து மாணவர்களும் பாராட்டத் தக்க வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 190 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் 487/500 மதிப்பெண் பெற்று ஹிபாநாஸ் முதலிடம் பெற்றுள்ளார். 1 மாணவர் ஆங்கிலத்திலும், 2 மாணவர்கள் தமிழ்ப் பாடத்திலும், 1 மாணவர் சமூக அறிவியலிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் 483/500 மதிப்பெண் பெற்று ஹரி பிரானேஷ் முதலிடம் பெற்றுள்ளார். 1 மாணவர் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
சதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்